search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Semiya Recipes"

    • சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று காய்கறிகள் சேர்த்து புலாவ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சேமியா - 2 கப்

    வெங்காயம் - 3

    பச்சைமிளகாய் - 5

    தக்காளி - 3

    பீன்ஸ் - 20

    கேரட் - 2

    பச்சை பட்டாணி - 1/2 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு,

    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

    மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தாளிக்க :

    பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தேவையான அளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெறும் வாணலியில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெயில் போட்டு நன்றாக பேஸ்டு மாதிரி வதக்கிக்கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணய் விட்டு சூடானதும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், துருவிய கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் தக்காளி பேஸ்டு சேர்த்து வதக்கவும்.

    தேவையான அளவு உப்புடன், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும்.

    தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.

    சேமியா வெந்தது பொல பொல வென்று உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சேமியா வெஜிடபிள் புலாவ் ரெடி.

    • தயிர் சேமியா தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு.
    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 2 கப்

    வெங்காயம் - ஒன்று

    தயிர் - 2 கப்

    பால் - ஒரு கப்,

    பச்சை மிளகாய் - 3

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

    மாதுளம் முத்துக்கள், திராட்டை - விருப்பத்திற்கேற்ப

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    கடுகு - கால் டீஸ்பூன்,

    உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்,

    கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்,

    முந்திரி - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்கள் சேர்த்து, தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க

    வேண்டும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் சேமியா சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைக்க வேண்டும்.

    சேமியா நன்றாகக் குழையுமாறு வெந்தபின்பு எடுத்து நன்றாக ஆறவைக்க வேண்டும்.

    பிறகு அத்துடன் தயிர், பால், மாதுளம் முத்துக்கள், திராட்டை, கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு பரிமாறலாம்.

    சுவையான தயிர் சேமியா ரெடி.

    குறிப்பு:

    தயிர் சேமியாவை நன்றாக குழைய விட வேண்டும் அப்போதுதான் சுவை மிகுதியாக இருக்கும்.

    • சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சேமியா வைத்து கேசரி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சேமியா - 500 கிராம்

    சர்க்கரை - 400 கிராம்

    தண்ணீர் - 400 மி.லி.

    நெய் - தேவையான அளவு

    முந்திரி பருப்பு - தேவையான அளவு

    திராட்சை - தேவையான அளவு

    ஏலக்காய் - 3

    கேசரி பவுடர் - சிறிதளவு

    செய்முறை :

    சேமியா, முந்திரிப் பருப்பு, திராட்சையை தனித்தனியாக நெய்யில் வறுத்து வைக்கவும்.

    ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி சேமியாவை போட்டு வறுத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேக விடவும்.

    கட்டி விழாமல் இருக்க கை விடாமல் கிளற வேண்டும்.

    சேமியா வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது கடைசியாக முந்திரி பருப்பு, திராட்சை, மீதியுள்ள நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

    பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும்.

    சுவையான சேமியா கேசரி தயார்.

    இதில் உங்களுக்கு பிடித்தமான நட்ஸ் எதை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம்.

    • இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • இந்த ரெசிபியில் விரும்பிய காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 கப்

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 1

    கேரட் - 1

    பீன்ஸ் - 4

    கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    பட்டை - 1 கிராம்பு - 5

    பிரியாணி இலை - 2

    கறிவேப்பிலை - 1 கொத்து

    கொத்தமல்லி - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நீரை கொதிக்க விடவும். அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து, கொதிக்கும் நீரில் அந்த சேமியாவைப் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, இறக்கி மூடி தனியாக வைத்து கொள்ளவும். (முக்கியமாக சேமியா குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.)

    பின் நீரை வடித்து, ஒரு தட்டில் அந்த சேமியாவை பரப்பி, குளிர வைக்கவும். பின் மற்றொரு வாணலியில் நீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு, வேக வைத்துக் கொள்ளவும்.

    பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின்னர் அதில் வேக வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மசாலா அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு கிளறவும்.

    மசாலா அனைத்து காய்கறிகளுடன் ஒன்று சேர்ந்ததும், அதில் வேக வைத்த சேமியாவைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டால் வாணலியை மூடி 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

    இப்போது சுவையான சேமியா வெஜிடேபிள் கிச்சடி ரெடி!!!

    இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, தயிருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    • உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு.
    • உப்புமாவில் பல வகைகள் உண்டு.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 பாக்கெட்

    வெங்காயம் - 1

    இஞ்சி - 1 இன்ச்

    பச்சை மிளகாய் - 1

    நெய் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 3-4 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    வரமிளகாய் - 2

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து, வேக வைக்க வேண்டும்.

    தண்ணீரானது வற்றி, சேமியா மென்மையாக வெந்த பின், அதனை இறக்கி பரிமாறினால், சேமியா உப்புமா ரெடி!!!

    காலையில் எளிய முறையில் சத்தான டிபன் செய்ய விரும்பினால் இந்த தயிர் சேமியாவை செய்யலாம். இன்று இந்த சேமியாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 250 கிராம்
    தயிர் - இரண்டு கப்
    எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
    கடுகு - கால் தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - நான்கு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
    வறுத்த முந்திரி - பத்து
    நெய் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சேமியாவை நெய் சேர்த்து வாணலியில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

    இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் சேமியாவை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். சேமியா வெந்ததும் தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசி மீண்டும் வடிகட்டி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் 2 மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை சேமியாவுடன் சேர்த்து தயிர், கொத்தமல்லி, முந்திரி போட்டு கலக்கவும்.

    சுவையான தயிர் சேமியா ரெடி.

    குறிப்பு : இதில் விருப்பப்பட்டால் கேரட் துருவல், மாதுளம் பழத்தையும் சேர்த்து கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை, மாலை நேரத்தில் சாப்பிட சேமியா வெஜிடபிள் கிச்சடி சூப்பராக இருக்கும். இன்று இந்த கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 1 கப்,
    பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    பச்சை மிளகாய் - 5,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    நெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கு.

    தாளிக்க:

    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை:

    சேமியாவை 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்து கொள்ளவும்.  

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீதமுள்ள நெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகள், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து காய்கறி வேகும் வரை வதக்குங்கள்.

    காய்கறிகள் சற்று வதங்கியதும் 3 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் சேமியாவை சேர்த்து, பெரிய தீயில் 2 நிமிடம் வைத்து தீயைக் குறைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சேமியா வெஜிடபிள் கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டீ, காபியுடன் மொறுமொறுப்பான நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பலரும் ஆசைப்படுவார்கள். இன்று மொறுமொறு சேமியா பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த சேமியா - 200 கிராம்
    வெங்காயம் - கால் கப்
    கடலை மாவு - 5 டீஸ்பூன்
    இஞ்சி - சிறிதளவு
    அரிசி மாவு - கால் கப்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கெட்டியான மாவு பதத்துக்கு (பக்கோடா மாவு பதம்) கொண்டுவர வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும் மாவை பக்கோடாவை போல உதிர்த்து போட்டு பொரித்து எடுக்கவும்.

    மொறுமொறுப்பான சேமியா பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×