search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling liquor"

    • போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர்.
    • கைது செய்து, அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை, வயல்வெளி, வீடுகளின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததாக சிவபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (32), குளத்தூரை சேர்ந்த பட்டம்மாள் (50), விரியூரை சேர்ந்த ஜான் கென்னடி (36), குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (22), ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த வேலு (50) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    • புதுவை சேதராப்பட்டு பகுதியில் சாராய பாக்கெட்டுகளை வாங்கி வானூர், கிளியனூர் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் ஒரு சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி மற்றும் பாலமுரளி போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சேதராப்பட்டு பகுதியில் சாராய பாக்கெட்டுகளை வாங்கி வானூர், கிளியனூர் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் ஒரு சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வானூர் மற்றும் கிளியனூர் போலீசார் இரவு நேரங்களில் கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில்கிளியனூர் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி மற்றும் பாலமுரளி போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது தைலாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்தவரை போலீசார் பிடிக்க முயன்றனர்.ஆனால் அந்த நபர் வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    போலீசார் மோட்டார் சைக்கிளையும், சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

    • ஈரோடு டவுன் போலீசார் கொங்காலம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகம் படுபடியாக நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்தபோது 15 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் சப்- இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் கொங்காலம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகம் படுபடியாக நின்று கொண்டிருந்தார்.

    அவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தும்பை பட்டி , கக்கன் நகரைச் சேர்ந்த திருமூர்த்தி (40) என தெரிய வந்தது. அவரை சோதனை செய்தபோது 15 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    அனுமதி இன்றி அவற்றை விற்பனைக்கு கொண்டு சென்றது அவர் ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ.2,100 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையான போலீசார் பவானி - அந்தியூர் பிரிவில் சோதனையில் ஈடுபட்டபோது முதியவர் ஒருவர் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டு இருந்தார்.

    அவரை சோதனை செய்தபோது அனுமதி இன்றி 6 மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றதை ஒப்புக்கொ–ண்டார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (73) என்ன தெரிய வந்தது.

    இதையடுத்து பவானி போலீசார் அவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேப்போல் சிறுவளூரில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட ஆனந்த் குமார் (33) போலீசார் கைது செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி (45) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி (45) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், ரவியை கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் கீழ்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (20) என்பவர் சாராயம் விற்று கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் கனிராவுத்தர் குளம் அருகே வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த அஸ்லம் (33) சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 6 மதுபாட்டில்களையும் பறி முதல் செய்தனர்.

    இதேபோல திங்களூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், நிச்சா ம்பாளையம், கீழ்பவானி வாய்க்கால் அருகே அதே பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவர் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிறுவலூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், குட்ட ப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக, அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (42) மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ×