என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "self help group"
- 12 பெண்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும்
- கலெக்டர் உத்தரவு.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் இயங்கிவரும் உழவர் சந்தையில் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட மகளிர் குழுவிற்கு உழவர் சந்தையில் காய்கறி கடைகள் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து எப்எப்ஸ்டார் மகளிர் சுய உதவி குழுவிற்கு புதியதாக உழவர் சந்தையில் கடை ஒதுக்கப்பட்டது.
உழவர் சந்தையில் உள்ளகடையின் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக இந்தியன் வங்கி மைக்ரோசேட் மேலாளர் சங்கமித்ரா திறந்துவைத்து பேசினார். பிரீடம் பௌண்டேஷன் இயக்குனர் ராமச்சந்திரன் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள், வேளாண்மைத் துறையினர், கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சுய உதவி குழுக்களுக்களை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-
இந்த கடையின் மூலம் 12, பெண்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் மேலும் பெண்கள் மத்தியில் தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும்.
இதன் மூலம் அவர்க ளுடைய வாழ்வாதாரம் மேம்படும், இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறையினருக்கு பெண்கள் சுய உதவி குழுக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்களுக்கு நிதி உள்ளாக்கம், நிதியியல் கல்வி மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல் தொடர்பாக ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.
பயிலரங்கத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.88 கோடி கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கியாளர்கள் மேற்காணும் இலக்கினை நிறைவேற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் கடன் உதவி வழங்கி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க முன்வர வேண்டும். மேலும் சிறந்த தொழில் முனைவோர் குழுக்களை கண்டறிந்து அவர்களுக்கு கடன் உதவி வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் சாந்தா, வேப்பந்தட்டை தாலுகா வெங்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 31 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 84 லட்சம் வங்கி கடன் இணைப்பை வழங்கினார்.
பயிலரங்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் தேவநாதன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்