search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Schools Reopen"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் 80 அரசு பள்ளிகளும், 179 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 3½ லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • அனைவருக்கும் விலையில்லா பாடபுத்தகங்கள் பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ந்தேதி 6 முதல் 12-ம் வகுப்பு வரையும், 5-ந்தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரையும் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    இதையொட்டி பள்ளி வளாகங்களில் தூய்மை பணி, வகுப்பறைகள் பராமரிப்பு, சேதமடைந்த மேஜைகள் சரி பார்ப்பு ஆகியவை தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டி, கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் 80 அரசு பள்ளிகளும், 179 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 3½ லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர்கள் அனைவருக்கும் விலையில்லா பாடபுத்தகங்கள் பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, திருவல்லிக்கேணி பகுதிகளில் நடந்து வருகிறது.

    அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அங்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்கின்றனர்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தனியார் பள்ளிகள் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள குடோனில் பெற்றுச் செல்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
    • கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வரையான வகுப்புகளுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் இப்போது கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது கோடை வெயில் அதிகமாக தெரிவதால் பள்ளிக்கூடங்கள் திறப்பதை மாற்றி அமைக்க ஆலோசனை நடத்தினோம். ஜூன் 5 அல்லது 7 ஆகிய தேதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. ஆலோசனையின் அடிப்படையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திட்டமிட்டப்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
    • 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 5 தேதி திறக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் பரவிய நிலையில் திட்டமிட்டப்படி ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

    ஏற்கனவே திட்டமிட்டப்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 5 தேதி திறக்கப்படுகிறது.

    • தமிழகத்தில் அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதியுடன் முடிவடைந்தது.
    • அரையாண்டு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    நெல்லை:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதியுடன் முடிவடைந்தது.

    இறைவணக்கத்துடன் தொடக்கம்

    தேர்வு முடிந்து டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    நெல்லை மாவட்டத்தில் இன்று அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பானது சிறப்பு இறைவணக்கத்துடன் தொடங்கியது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகளையொட்டி சொந்த ஊருக்கு சென்றிருந்த ஏராளமான மாணவ-மாணவிகள் இன்று அவசரம் அவசரமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு வரவேண்டி இருந்ததால் இன்று ஒருநாள் மட்டும் பெரும்பாலான பள்ளிகளில் காலை 10 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

    புத்தகங்கள்

    பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்பேரில் ஏற்கனவே 6 மற்றும் 7-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. அவற்றை நாளை முதல் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேநேரத்தில் அரசின் எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் செல்வதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆனால் மெட்ரிக் பள்ளிகளில் இன்று முதலே 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.

    • பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரம் குறித்து பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம்.
    • பள்ளிகள் 8 பாடவேளைகள் கொண்டதாக செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் தாமதமாக இறுதி தேர்வுகள் நடைபெற்றதால் பள்ளிகளுக்கான விடுமுறை ஜூன் 12ந் தேதிவரை அறிக்கப்பட்டது.

    இன்றுடன் கோடை விடுமுறை முடிவடைவதால், நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில் தமிழகத்தில் வெயில் வாட்டி வருவதால் பள்ளிகள் துவங்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரம் குறித்து பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

    பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை கருதி பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும், 8 பாடவேளைகள் கொண்டதாக வகுப்புகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிகளில் மாணவருக்கு நல்ல சுற்றுப்புறத்தை அளிக்க தூய்மையாக பள்ளிகளை பராமரிக்க வேண்டும்.
    • கட்டிடம் மற்றும் இருக்கைகள் பழுது பார்க்கப்பட்டு வண்ணம் தீட்டி நல்ல முறையில் இருக்க வேண்டும்.

    சென்னை:

    தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிற 13-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதால் பள்ளிகளில் தீவிர தூய்மை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளிகளில் மாணவருக்கு நல்ல சுற்றுப்புறத்தை அளிக்க தூய்மையாக பள்ளிகளை பராமரிக்க வேண்டும்

    வகுப்பறைகள் மற்றும் கரும்பலகைகள் தூய்மையாக இருக்க வேண்டும். கழிவறைகள் சுத்தமாக இருக்க வேண்டும். கதவுகள் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

    ஆய்வரங்குகளில் தேவையான பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு ஆய்வகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    கட்டிடம் மற்றும் இருக்கைகள் பழுது பார்க்கப்பட்டு வண்ணம் தீட்டி நல்ல முறையில் இருக்க வேண்டும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

    எனவே விளையாட்டு மைதானம் குழந்தைகள் விளையாடும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து இருக்க வேண்டும்.

    பள்ளி கட்டிடம் மற்றும் மதிய உணவு கூடம் ஆகியவை தூய்மைபடுத்தப்பட்டு வெள்ளையடித்து இருக்க வேண்டும்.

    பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து இந்த பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

    தன்னார்வலர்கள் வந்தாலும் தூய்மை பணிக்கு சேர்த்துக் கொள்ளலாம். பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது.

    பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பது அறிந்ததே.

    பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தங்களின் வீடுகளை போன்று தூய்மையாக வைத்துக் கொள்கிறீர்கள்.

    இது போன்று சிறப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் தலைமை செயலாளர் இறையன்பு எழுதி உள்ளார்.

    மாணவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
    விழுப்புரம்:

    தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்டதால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

    இதில் ஒரு கட்டமாக பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

    தற்போது தொற்று நோய் பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    தீபாவளி பண்டிகை முன்பே மழையின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இன்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் 1,145 தொடக்கப்பள்ளிகள், 267 நடுநிலைப் பள்ளிகள், 187 உயர்நிலைப்பள்ளிகள், 205 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,804 பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன.

    மாணவர்கள் ஆர்வத்துடன் இன்று காலை பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் இன்று உற்சாகமாக பள்ளிக்கு சென்றதை காண முடிந்தது.

    கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்று காலையும் பரவலாக மழை பெய்ததால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்டதால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

    இதில் ஒரு கட்டமாக பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

    தற்போது தொற்று நோய் பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளி சி.பி.எஸ்.இ. பள்ளி என மாவட்டம் முழுவதும் உள்ள 2,200 பள்ளிகளும் தயார் நிலையில் இருந்தன.

    இந்த நிலையில் கடந்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    தீபாவளி பண்டிகை முடிந்தும் மழையின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,200 பள்ளிகளும் திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இன்று காலை பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். 19 மாதங்கள் கழித்து பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியின் நுழைவு வாயிலில் நின்று வரவேற்றனர்.

    கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்று காலையும் பரவலாக மழை பெய்ததால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.

    பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றப்பட வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அவர்களது உணவு மற்றும் குடிநீரை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது எனவும், மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    சென்னையில் மழை பாதிப்புக்கு இடையே பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படவில்லை.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக 2-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து வந்த தீபாவளி பண்டிகையால் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    தீபாவளிக்கு பின்னர் வெளுத்து வாங்கிய கன மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை கடுமையாக பாதித்தது. இதனால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் மழை குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதையடுத்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.

    மழைநீர் சூழ்ந்த பள்ளிகள் மற்றும் நிவாரண முகாம்களாக செயல்படுகின்ற பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளை திறக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகள் சுழற்சி முறையில் வகுப்புகளுக்கு சென்றார்கள்.

    சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் பள்ளி வாகனங்கள் இயக்கப்படவில்லை. அதனால் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து சென்றனர்.

    சென்னையில் அரசு, உதவி பெறும் பள்ளி மற்றும் மாநகராட்சி, தனியார் மெட்ரிக்குலே‌ஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என 1,447 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் எம்.கே.பி. நகர் மற்றும் சைதாப்பேட்டையில் செயல்படும் அரசு பள்ளிகள் மற்றும் 42 மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட மொத்தம் 44 பள்ளிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் அந்த பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படவில்லை. மற்ற அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு இருப்பதாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார்.

    பள்ளிகளில் மழை நீர் தேங்கி இருந்தால் அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியரே விடுமுறை அளிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 44 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று செயல்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் மழை பாதிப்புக்கு இடையே பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். ஒரு சில பள்ளிகளில் மதியம் வரை வகுப்பும், சில பள்ளிகளில் பிற்பகல் 3 மணி வரை வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

    மாணவர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து வகுப்பில் அமர்ந்தனர். சளி, இருமல் போன்றவை காணப்பட்டால் அவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இன்று தான் பெரும்பாலான பள்ளிகள் முழு அளவில் செயல்படுகின்றன.

    புதுவையில் 1 முதல் 8 வரை இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்றும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வந்தன. இந்தநிலையில் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.

    இதையடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகை விடுமுறைகள் முடிந்ததும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் கனமழை காரணமாக கடந்த 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி இந்த வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஆனது. தற்போது இன்றும், நாளையும் (வெள்ளி, சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே மீண்டும் பள்ளிகள் தொடங்குவது எப்போது? என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடுவிடம் கேட்டபோது, சமூக வலைதளத்தில் வைரலான தகவலை மறுத்தார்.

    மேலும் அவர் கூறுகையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வழக்கம்போல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக பாடங்கள் நடத்தப்படும்.

    மழையின் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படுவது இப்போதைக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு எப்போதும் போல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றார்.


    பயிற்சி நிறுவனங்களில் 100 சதவீத இருக்கையுடன் செயல்பட ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டன. கொரோனாவின் முதல் அலை, இரண்டாம் அலை என நீடித்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல்  இருந்தன. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்பட்டு வந்தன.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் 50 சதவீத இருக்கையுடன் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில்,  1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வகுப்பறை செயல்பாடுகள் 100 சதவீத திறனுடன் நடைபெறலாம் என்று நேற்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 15-ம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுடன் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், பயிற்சி நிறுவனங்களில் 100 சதவீத இருக்கையுடன் செயல்பட ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ராஜஸ்தானில் 50 சதவீத இருக்கையுடன் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
    கேரளாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    கொரோனாவை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதுகாப்பு விதிகளுடன் பள்ளிகள் திறக்க மாநில அரசு முடிவு செய்தது. பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

    மேலும் மாணவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அமர ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரையிலும், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவர்கள்

    ஆனால் 8,9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை மறுநாள் (8-ந்தேதி) முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வருகிற 15-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


    ×