search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school building"

    • உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
    • கிராமத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்குள்ள வீடுகளிலும், திறந்தவெளியில் மரத்தடியில், அமர்ந்து படித்து வருகின்றனர்.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம்உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.அடர் வனத்தில் வசிக்கும் அப்பகுதி மக்கள், அடிப்படை வசதி மற்றும் தங்களின் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உடுமலை வனச்சரகம்குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் சமீபத்தில் மழைக்கு இடிந்து விழுந்தது.இதே போல் குருமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு இடிந்து பல ஆண்டுகளாகிறது.

    இதுவரை கட்டிடத்தை புதுப்பிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கிராமத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்குள்ள வீடுகளிலும், திறந்தவெளியில் மரத்தடியில், அமர்ந்து படித்து வருகின்றனர். பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை சமவெளியிலுள்ள உண்டு, உறைவிட பள்ளிகளில் சேர்த்துள்ளனர். ஆனால் அப்பள்ளிகளின் சூழலுக்கு பொருந்தாமல், மாணவர்கள் அங்கிருந்து மீண்டும் தங்கள் கிராமத்துக்கே திரும்ப வந்து விடுகின்றனர்.

    இது குறித்து மலைவாழ் கிராம மக்கள் கூறியதாவது:- எங்கள் குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறவே மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு மலை கிராமங்களில், பள்ளிகள் துவக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் பள்ளி கட்டிடங்கள் இடிந்துஅனைத்து பள்ளிகளும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது தற்காலிமாக வகுப்புகள் நடந்து வருகிறது.பல தலைமுறைகளாக கல்விக்காக போராடும் எங்கள் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க தொடர்ந்து மனு அனுப்பி வருகிறோம் என்றார்.

    மலை கிராம பள்ளிகளில் பணியாற்ற நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, அங்கு தங்குவதற்கு எவ்வித வசதியும் இல்லை. நாள்தோறும் சமவெளிப்பகுதியில் இருந்து பயணித்து பள்ளிக்கு செல்வதும் சாத்தியமில்லை.எனவே, பள்ளி கட்டிடங்களை புதுப்பிக்கும் போது, ஆசிரியர்களுக்கான தங்கும் அறை, கழிப்பிடம் கட்டித்தர வேண்டும். இல்லாவிட்டால், ஆசிரியர்கள், மலை கிராம பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக செல்வது கேள்விக்குறியாகி, கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படும். அப்பகுதி மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றனர்.  

    சிங்கம்புணரி அருகே அரசு பள்ளி கட்டிடம் சேதம் அடைந்ததால், வகுப்பறையை தவிர்த்து மாணவர்கள் பள்ளி மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சி கிருங்காக்கோட்டை ஊராட்சி. இங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 120 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம் 1960-ல் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. இந்த கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்த நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு 1, 2, 3 ஆகிய வகுப்புகள் புதுகட்டிடத்தில் இயங்கி வந்தன.

    இந்த நிலையில் பழைய ஓட்டுக்கட்டிடத்தில் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் மட்டும் பயின்று வந்தனர். இந்த கட்டிடம் மிக மோசமாக பழுதடைந்த நிலையில், மேற்கூரை ஓடுகள் உடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் எப்போது விழுமோ என்ற அபாயத்தில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்பறையை தவிர்த்து, பள்ளி மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

    மேலும் இந்த பள்ளி வளாகத்தில் பழமையான மரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதுகுறித்து இந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பழமையான இந்த பள்ளிக்கட்டிடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இந்த பள்ளி ஓட்டுக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான மரங்களில் முறிந்த கிளைகளை வெட்ட வேண்டும்.

    இதை போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

    மேலும் இடியும் நிலையில் உள்ள இந்த பள்ளி ஓட்டுக் கட்டிடம் தான் தேர்தலின் போது வாக்குச்சாவடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    பள்ளி கட்டிடம் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர், என்ஜினீயர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் முத்தூர் புதுக்காலனியில் அழகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான மகரிஷி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் தரை தளத்துடன் சேர்த்து 2 தளங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஒடிசா மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இப்பள்ளியில் தரை தளத்திலும், முதல் தளத்திலும் கடந்த 10 நாட்களுக்கு முன் கான்கிரீட் போட்டு மேற்கூரை அமைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கட்டிடத்தின் 2-வது தளத்திலும் மேற்கூரை அமைப்பதற்கு சென்ட்ரிங் கம்பிகள் கட்டி கான்கிரீட் கலவை போடும் பணியில் 19 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது திடீரென 2-வது தளம் இடிந்து விழுந்தது. மேலும் முதல் தளத்தின் மேற்கூரையும், தரை தளத்தின் மேற்கூரையும் மொத்தமாக இடிந்து விழுந்தது.

    இதில் இடிபாடுகளுக்குள் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்கள் அலறினார்கள். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த தொழிலாளர்களும், பொது மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 15 தொழிலாளர்களை மீட்டனர். இதில் ஒடிசாவை சேர்ந்த கண்ணா (18) என்பவர் சம்பவ இடத்திலே இறந்தார்.

    ஒடிசாவை சேர்ந்த லட்சுமி நாராயணன் (18), நரேன்(24), வசந்த் (35), நிரஞ்சன் (20), பிண்டு (20), தேவா (19), தினேஷ் (25) கொல்கத்தாவை சேர்ந்த ஜோதிப் (30), முத்தூர் அஜித் (21), ராமப்பட்டிணத்தை சேர்ந்த சதிஷ் (20), ஜமீன் முத்தூரை சேர்ந்த நரேன் (27), மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராகுல் (28), நல்லூரை சேர்ந்த மேற்பார்வையாளர் சிவமணி (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



    அவர்கள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சம்பவம் நடந்த இடத்தை தாசில்தார் செல்வபாண்டி, டி.எஸ்.பி. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை சப்-கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கட்டிடம் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளரும், கட்டிட உரிமையாளருமான அழகேஸ்வரி, என்ஜினீயர் கணேஷ்குமார், மேற்பார்வையாளர் சிவமணி, சிமெண்ட் கலவை கலக்கும் எந்திர ஆபரேட்டர் சுமன் ஆகிய 4 பேர் மீது பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    எந்திரத்தை பாதுகாப்பு இன்றி இயக்குதல், விபத்தை ஏற்படுத்துதல், தவறான முறையில் பணி செய்ய தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கட்டிடம் இடிந்து விழுந்து காயம் அடைந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று காலை பார்த்து ஆறுதல் கூறினார்.

    மேலும் இடிந்து விழுந்த கட்டிடத்தையும் அவர் பார்வையிட்டார்.

    இடிந்த பள்ளி கட்டிடம் இந்த கல்வி ஆண்டே திறக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் கட்டப்பட்டதாகவும், தரம் இல்லாமலும், ஒரு தளத்திற்கும் மற்ற தளத்திற்கும் போதிய கால இடைவெளி இல்லாமலும் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு நூற்றுக்கணக்கான மாணவர்களை சேர்த்து கட்டணமும் பெற்று விட்டதால் மாணவர்களை சில நாட்களில் சேர்க்க வேண்டும் என திட்டமிட்டு கட்டிட பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வந்துள்ளது.

    இதன் காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். #tamilnews
    ×