search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sayarpuram"

    • அதிகாலை 4 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.
    • சபை மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் படைத்த அசன பொருட்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அசன வேலைகள் ஆரம்பமாயிற்று.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் பரி மாற்கு ஆலயத்தின் 163-வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா நடந்தது. அதிகாலை 4 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. சேகர குரு இஸ்ரவேல் ராஜதுரைசிங் ஆராதனையை நடத்தினார். சபை குரு ஆமோஸ் மற்றும் குருவானவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். சபை மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் படைத்த அசன பொருட்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அசன வேலைகள் ஆரம்பமாயிற்று.

    மாலை 5 மணிக்கு அசன பண்டிகை நடந்தது. நிகழ்ச்சியில் டி.எஸ்.எப்.சீ புட்ஸ் நிர்வாக இயக்குனர் சத்தியநாதன் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், உப தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் மற்றும் திருமண்டல பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அசன விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த பொறுப்பாளர்கள் அருள்ராஜ், சசிகுமார், ரூபன், அமிர்தராஜ் மற்றும் சபை நிர்வாக செயலாளர் ஸ்டீபன், சபை நிர்வாக பொருளாளர் கன்னையா கனகராஜ் மற்றும் சேகர செயலாளர் செல்வகுமார் ஆகியோரை திருமண்டல நிர்வாகஸ்தர்கள் பாராட்டினர். ஆலயமணி வரவேற்றார். சபை மன்ற நண்பர்கள் ஐக்கியம் சார்பில் நிர்வாகஸ்தர்களுக்கு பண்ணைவிளை உதங்கன் மற்றும் நடுவக்குறிச்சி சாலொமோன் பொன்ராஜ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான மக்கள் அசன விழாவில் கலந்துகொண்டனர்.

    • மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகள் சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
    • போட்டிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி ஸ்பார்டன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடமி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கராத்தே அசோசியேஷன் ஆகியவை இணைந்து நடத்திய 5-வது ஆண்டு மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகள் சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    தமிழக மீனவளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டி களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆறுமுக பெருமாள், முக்காணி கூட்டுறவு வங்கி தலைவர் உமரி சங்கர், சாயர்புரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டாரம், தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் மத்திய பகுதி பி.ஜி.ரவி, மேற்கு கொம்பையா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், சாயர்புரம் பேரூராட்சி தலைவி பாக்கிய லெட்சுமி, அறவாழி, பேரூர் செயலா ளர்கள் ஏரல் ராயப்பன், சாயர்புரம் கண்ணன், பெருங்குளம் நவநீத முத்துக் குமார், ஸ்ரீவைகுண்டம் சுப்புராஜ், மாவட்ட பிரதி நிதிகள் பேய்க்குளம் ஜெயக் குமார், அருண் கிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் சண்முக ராஜா, குலையன் கரிசல் கூட்டுறவு வங்கி தலைவர் சுரேஷ், முன்னாள் சாயர் புரம் நகர செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், நடுவக் குறிச்சி நாராயணன், பழைய காயல் சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கராத்தே மற்றும் சிலம்பம் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கராத்தே முதன்மை மாஸ்டர் சுரேஷ் குமார் தலைமையில் கராத்தே மாஸ்டர்கள் பாட்ஷா, கணேஷ்குமார், முகில் மாறன், திலீப் மற்றும் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சாயர்புரம் அருகே காசநோய் பரிசோதனை முகாம் நட்டாத்தி பஞ்சாயத்து சேவை மையத்தில் நடந்தது.
    • சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை, நீரழிவு நோய் சோதனை ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே காசநோய் பரிசோதனை முகாம் நட்டாத்தி பஞ்சாயத்து சேவை மையத்தில் நடந்தது. துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சின்ன நட்டாத்தி ஆகிய ஊர்களில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே ஆம்புலன்ஸ் அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை, நீரழிவு நோய் சோதனை ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கொம்புகாரன் பொட்டல் வார்டு உறுப்பினர் பண்டாரம், நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்துராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் மலைவிக்னேஷ், கண்ணன்,ஏரல் ஆய்வக மேற்பார்வையாளர்சுரேஷ், சுகாதார பார்வையாளர் சுதா மணிமேகலை, நட்டாத்தி இடைநிலை சுகாதார செவிலியர் பூர்ணா கலையரசி, நுண் கதிர் வீச்சாளர்கள் சுரேஷ்,மாலதி, நுண்கதிர் உதவியாளர் எட்டையா, சுகாதார தன்னார்வலர்கள், மஸ்தூர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை நட்டாத்தி இடைநிலை சுகாதார செவிலியர் பூர்ணா கலையரசி செய்து இருந்தார்.

    • நட்டாத்தி ஊராட்சி‌ சேவை மையத்தில் மருத்துவ காப்பீடு சேவை முகாம் நடந்தது.
    • நட்டாத்தி ஊராட்சி‌ பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சாயர்புரம்:

    நட்டாத்தி ஊராட்சி சேவை மையத்தில் மருத்துவ காப்பீடு சேவை முகாம் நடந்தது. இதில் பிரதம மந்திரி ஆயுஷ் மான் பாரத் மற்றும் முதல்-அமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தில் தகுதியான நபர்களுக்கு ரூ.5லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்யப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு நட்டாத்தி ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் அன்னகனி , பிரியா, சரோஜா, மணிமந்திரம்.திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி , சண்முகா டிஜிட்டல் ஜெராக்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து பயன் பெற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயல்அலுவலர் முத்துராஜ் செய்து இருந்தார்.

    • சாயர்புரம் தேர்வுநிலை பேரூராட்சியில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம் 10-வது வார்டு புளியநகரில் நடைபெற்றது.
    • புளிய நகர் வார்டு முழுவதும் கொசு மருந்துகள் வீடுவீடாக தெளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் தேர்வுநிலை பேரூராட்சியில் சிறப்பு ஒட்டு மொத்த தீவிர தூய்மை பணி முகாம் 10-வது வார்டு புளியநகரில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.சாயர்புரம் தி.மு.க. செயலாளர் கண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட அனைவரும் எனது குப்பை எனது பொறுப்பு, எனது சுத்தமான கிராமம் எனது பெருமை என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    முகாமில் புளிய நகர் வார்டு முழுவதும் கொசு மருந்துகள் வீடுவீடாக தெளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்த உள்ளது. இதில் சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் முத்துராஜ், சாயர்புரம், நாசரேத், ஏரல் பேரூராட்சி ஊழியர்கள், பரப்புரை யாளர்கள் ஜெயா, பெனிட்டா மேரி மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் செய்து இருந்தார்.

    • சாயர்புரம் பேரூராட்சியில் 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் இருந்தது.
    • புதுப்பிக்கபட்ட‌ ரேஷன் கடையை கலெக்டர் செந்தில் ராஜ் திறந்து வைத்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் இருந்தது. அதை சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் எஸ்.வி.பி.எஸ்.பொ. ஜெயக்குமார் மற்றும் சாயர்புரம் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் உள்ளிட்டோர் நிதி திரட்டி புதிய ரேஷன் கடையை புதுப்பிக்க ஏற்பாடு செய்தனர்.

    இந்நிலையில், புதுப்பிக்கபட்ட ரேஷன் கடையை கலெக்டர் செந்தில் ராஜ் திறந்து வைத்தார். பின்னர் வீடுவீடாக சென்று பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்களை பொது மக்களிடம் விநியோகம் செய்தார்.

    தொடர்ந்து, அப்பகுதியில் மரகன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார். சேகரகுரு இஸ்ரவேல் ராஜாதுரைசிங், ஏரல் தாசில்தார் கண்ணன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாயர்புரம் பேரூர் செயலாளர் கண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி, திருப்பணி செட்டி குளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், சாயர்புரம் செயல் அலுவலர் பிரபா, பேரூராட்சி துணை தலைவர் பிரியா மேரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெப தங்கம் பிரேமா, ப்ளாட்டினா மேரி, இந்திரா, சுமதி, முத்து மாரி, ராமமூர்த்தி, முத்துராஜ், மற்றும் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண், செபத்தையாபுரம் அரிமா சங்க தலைவர் ஆலயமணி, அகதாஸ், 14- வார்டு பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாயர்புரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் கிறிஸ்தவ பாடல் போட்டி மற்றும் குடில் போட்டி நடந்தது
    • வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி அணிகளுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது

    சாயர்புரம்:

    சாயர்புரத்தில் ஜி.யு. போப் சபை மன்றத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா போட்டிகள் சாயர்புரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் கிறிஸ்தவ பாடல் போட்டி மற்றும் குடில் போட்டி நடந்தது. இதில் சாயர்புரம் ஜி.யு.போப் சபை மன்றத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் ஆலய குழுக்கள் கலந்து கொண்டனர்.

    போட்டிகளை சாயர்புரம் சேகர குரு இஸ்ரேல் ராஜா துரை சிங் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார் .

    குடில் போட்டியில் முதலிடம் பிடித்த இடையர் காடு குட் ஷெப்பர்ட் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், 2-ம் இடம் பிடித்த சாயர்புரம் நர்சரி பள்ளிக்கு ரூ.7,500 ரொக்கப் பரிசும், 3-ம் இடம் பிடித்த சாயர்புரம் ஜி.யு போப் பொறியியல் கல்லூரிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கமும், மற்றும் 3 அணிகளுக்கும் பரிசு கோப்பைகளும் வழங்கபட்டது.

    அதேபோல் கிறிஸ்தவ பாடல் போட்டியில் முதலிடம் பிடித்த ஜி.யு.போப் பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், 2-ம் இடம் பிடித்த சாயர்புரம் சபை பாடல் குழுவினர் அணிக்கு ரூ.7,500 ரொக்கம், 3-வது இடம் பிடித்த சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் பணமும், பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு லே செயலர் நீகர் பிரின்ஸ் தலைமை தாங்கினார். உப தலைவர் தமிழ் செல்வன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் மோகன் ராஜ் அருமை நாயகம்,போப் மேல்நிலைப்பள்ளி தாளா ளர் பிரேம் குமார் ராஜா சிங்,போப் சபை மன்ற தலைவர் அகஸ்டின் கோயில் ராஜ், ரட்சன்யபுரம் சேகர தலைவர் பாக்கியராஜ், சாயர்புரம் சபை ஊழியர் சாமுவேல் பொன்சிங்,விழா குழு உறுப்பினர்கள் ராஜேஷ் ரவி சந்தர், அலெக்சாண்டர், அபிஷேகம், ராஜதுரை ஏசுவடியான்,ஆன்ட்ரு அதிசயராஜ், ஜான்சன் பொன்சிங் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவி கள், சபை மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டாண்டி விளை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை உள்ளது.
    • நியாய விலைக்கடையில் வாரம் 2 நாட்கள் ரேசன் பொருட்கள் வழங்க கோரி அப்பகுதியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டாண்டி விளை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை உள்ளது. இங்கு வாரம் ஒரு நாள் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நியாய விலைக்கடையில் வாரம் 2 நாட்கள் ரேசன் பொருட்கள் வழங்க கோரி அப்பகுதியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாதம் ஒரு நாள் மட்டுமே பட்டாண்டி விளை கடையில் பொருட்கள் வழங்கப்படும் என்று சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொது மக்கள் காலை முதல் மாலை வரை ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.  

    • அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த டெல்பின் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே பட்டாண்டிவிளை நேரு தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி டெல்பின் (வயது 51).

    இவர்களது மகள் நியூனா (23). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 22-ந்தேதி டெல்பின் வீட்டு காம்பவுண்டக்குள் குப்பையை தீ வைத்து எரித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ டெல்பின் மீது பட்டு பலத்த தீகாயங்கள் ஏற்பட்டது. அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த டெல்பின் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது.
    • சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கினார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கினார். இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    குறிப்பாக வங்கி எல்கைக்கு உட்பட்ட நட்டாத்தி பஞ்சாயத்து பட்டான்டிவிளை கிராமத்தில் வாரத்தில் ஒரு நாள் செயல்படும் பகுதி நேர நியாய விலை கடையை 2 நாட்கள் திறந்து வைப்பது, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    சங்க செயலாளர் சகுந்தலா தேவி வரவேற்றார். வங்கி பணியாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். காசாளர் கிருபாகரன் தவமணி நன்றி கூறினார்.

    ×