search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saving"

    மாதத்திற்கு எது அவசியமாகத் தேவையோ அதை மட்டும் வாங்குவதற்குத் தீர்மானியுங்கள். அதை நீங்கள் போடும் பட்ஜெட்டுக்குள் அடக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
    கை மீறும் செலவைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பதற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் முறைதான் ‘30 நாள் விதி’. இந்த விதியை செயல்படுத்துவது எளிதானது. இதைத் தொடர்ந்து பின்பற்றும்போது, சேமிப்பை எளிதாக உயர்த்த முடியும்.

    பெரும்பாலானவர்கள் ஆன்-லைன் விற்பனை மையங்கள் வழங்கும் சலுகைகளால் ஈர்க்கப்பட்டு பொருட்கள் வாங்குவார்கள். இந்த செயல்பாடே சேமிப்பைத் தொலைப்பதற்கான முக்கிய காரணம். இவ்வாறு எதைப் பார்த்தாலும் உடனே வாங்கி விடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், சம்பாத்தியத்தை சரியான இடங்களில் ஒதுக்க முடியாமல் திணறுபவர்களுக்கும் ‘30 நாள் திட்டம்’ ஏற்றதாக இருக்கும். இதைப் பின்பற்றும்போது, பணத்தை எதற்காக செலவிடுகிறோம்? என்பதில் தெளிவு ஏற்படும்.

    30 நாள் விதியை எப்படிப் பின்பற்றுவது?

    ‘தேவை’ என்பது அனைவருக்கும் பொதுவானது. அதை அத்தியாவசியத் தேவை, நிதானத் தேவை என இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். மாதந்தோறும் குடும்பத்துக்காக மேற்கொள்ளும் செலவுகள் அத்தியாவசியத் தேவையில் சேரும். இதிலும், அந்த மாதத்திற்கு எது அவசியமாகத் தேவையோ அதை மட்டும் வாங்குவதற்குத் தீர்மானியுங்கள். அதை நீங்கள் போடும் பட்ஜெட்டுக்குள் அடக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.

    இதற்கு அடுத்தபடியாக, நிதானமானத் தேவை. இதில் நாம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டும், தற்சமயம் நமக்கு அவசரமாகவும், அத்தியாவசியமாகவும் தேவைப்படாத, பொருட்கள் அடங்கும். அந்தப் பொருளை வாங்குவதற்கு முன்னும், பின்னும் அதற்கான பணமதிப்பைக் கூர்ந்து கவனியுங்கள். இதுதான் ‘30 நாள் விதி’யின் அடிப்படை.

    பின்பு, நீங்கள் வாங்குவதற்கு நினைக்கும் பொருளை முதலில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை வாங்கும் முன், அந்தப் பொருளின் தன்மை, தயாரிப்பு நிறுவனம், விலை மற்றும் வாங்குவதில் கிடைக்கும் சலுகைகள் என அனைத்து விவரங்களையும் சேகரியுங்கள். அடுத்து அந்தப் பொருளை வாங்கும் எண்ணத்தை 30 நாட்கள் தள்ளி வையுங்கள். பொருட்களை வாங்க வேண்டும் என தீர்மானித்து முடிவு எடுத்த பின்பு அதைத் தள்ளி வைப்பதால் என்ன பயன் ஏற்படும்? இந்தக் கால இடைவெளியில், அந்தப் பொருள் மீதான ஈர்ப்பு குறைந்திருப்பதை உணர முடியும்.

    30 நாட்களில், குறிப்பிட்ட பொருளின் விற்பனை, விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களைக் கவனிக்க வேண்டும். மேலும், அந்த நேரத்தில், அது அவசியமானதா? என்பதை யோசிக்கும்போது, சரியான தீர்வை எளிதில் காண முடியும். இதை அனைத்து தேவைகளிலும் செயல்படுத்தினால், செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முடியும். 30-நாள் விதியின்படி, வாழ்க்கை முறையை மாற்றினால் அது சேமிப்பிற்கான சரியான பாதையில் செல்வதற்கு உதவும்.
    இ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.
    வீடு மற்றும் வீட்டுமனை வாங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து 90 சதவிகித தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற திட்டம் சொந்த வீட்டு கனவில் உள்ள பலருக்கும் பயனளிப்பதாக உள்ளது. அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், மத்திய அரசின் விதிமுறைகளின்கீழ் அவர்களது இ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் மூலம் 2022-ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் 4 கோடி இ.பி.எப் உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒரு கூட்டுறவு சங்கம் முலமாகவோ அல்லது இ.பி.எப் உறுப்பினர்கள் தாங்களாகவே தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கம் மூலமாகவோ அவர்களது சேமிப்பிலிருந்தே சொந்த வீடு வாங்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.

    வீட்டுமனை திட்டத்தில் அல்லது வீட்டு கட்டுமான திட்டத்தில் பதிவு பெற்ற ஒரு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கும்போது அதில் இ.பி.எப் கணக்கு வைத்துள்ள 9 நபர்களாவது வீடு வாங்கும் உறுப்பினரோடு இணைந்து வாங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அதிகபட்ச பயன்பாடு

    இதற்கு முன்னதாக 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் அவர்களது 36 மாத சம்பளத்துக்கு (பேசிக் மற்றும் டி.ஏ சேர்ந்த தொகை) இணையான தொகையை பி.எப் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், சமீபத்திய அறிவிப்பில் இ.பி.எப் திட்டத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் சொந்த வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்காக 90 சதவிகித தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், கடன் தொகையை முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவிலோ திருப்பி செலுத்துவதற்காக அவர்களது மாதாந்திர பி.எப் தொகையை பயன்படுத்திக்கொள்ளும் விருப்பத் தேர்வு அனுமதியும் அளிக்கப்படுவதாக இ.பி.எப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடு

    குறிப்பாக, வீட்டு மனைகள் வாங்குவதற்கு அல்லது சொந்த வீடு கட்டுவதற்கு இ.பி.எப்.ஓ அலுவலகம் நேரடியாக தொகையை இ.பி.எப் உறுப்பினர்களிடம் தராது. அதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கம், ஹவுசிங் ஏஜென்சி அல்லது சம்பந்தப்பட்ட பில்டர் ஆகியவர்களிடம் மட்டுமே வீடு அல்லது வீட்டு மனைக்கான தொகை தரப்படும்.

    அவ்வாறு அளிக்கப்பட்ட பணம் மூலம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்படவில்லை அல்லது குறிப்பிட்ட வீட்டு மனை ஒதுக்கப்படவில்லை என்ற நிலை ஏற்படலாம்.

    அந்த நிலையில் இ.பி.எப் சேமிப்பிலிருந்து பெறப்பட்ட தொகையை மீண்டும் உறுப்பினர் கணக்கில் 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படுவதை அவர்கள் உறுதி செய்ய உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்றும் இ.பி.எப் தலைமை அலுவலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கும் வங்கிகள், அதற்கேற்ப பல கட்டணங்களை விதிக்கின்றன. அவை பற்றித் தெரிந்து கொள்வோம்...
    வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கும் வங்கிகள், அதற்கேற்ப பல கட்டணங்களை விதிக்கின்றன. அவை பற்றித் தெரிந்து கொள்வோம்...

    குறைந்தபட்ச இருப்பு இல்லாமைக்கான கட்டணம்:

    சேமிப்புக் கணக்கு களுக்கு ரூ. ஐநூறு முதல் ரூ. 10 ஆயிரம் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதக் கட்டணத்தை வசூலிக்கின்றன. எனவே, செயல்படாத அல்லது குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க இயலாத வங்கிக் கணக்கு களின் இயக்கத்தை நிறுத்திவிடுவது நல்லது.

    பணம் எடுத்தல்:

    நம் கணக்கு உள்ள வங்கியைச் சாராத பிற ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தல், நாம் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தல் ஆகியவற்றின்போது வங்கிகள் நம்மிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன.

    பணம் டெபாசிட் செய்தல்:

    வங்கிக் கணக்கு வைத்துள்ள கிளை அல்லாத பிற கிளை வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும்போது அதற்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

    காசோலைகள்:

    ஒரு மாதத்துக்கு ஒரு காசோலைக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படும். வெளியூர் வங்கிகளைச் சேர்ந்த காசோலைப் பரிவர்த்தனைகளுக்குத் தனியான சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    குறுஞ்செய்தி சேவைக் கட்டணம்:


    நம்முடைய வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக கைபேசிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

    டெபிட் கார்டு வழங்கும்போது:

    தொலைந்துபோன அல்லது திருட்டுப்போன டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்தால் அதற்கென தனியான அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    வணிகப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள்:

    இணையம் வழியான வணிகப் பரிவர்த்தனைகளின்போது பொதுவாக கட்டணங்கள் விதிக்கப்படுவது இல்லை. ஆனால், நம்முடைய வங்கி அல்லாத பிற முகமை நிறுவனங்கள் மூலமாக வணிக நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தப்படும்போது சேவைக் கட்டணம் விதிக்கப்படுகிறது. உதாரணமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமாக ரெயில் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தும்போது, குறைந்தபட்சக் கட்டணம் அல்லது செலுத்தப்படும் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதத்தில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

    வெளிநாட்டுப் பண மாற்றப் பரிவர்த்தனைகள்:

    கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் 2 முதல் 4 சதவீதம் வரை சேவைக் கட்டணம் விதிக்கப்படுகிறது.
    பலரையும் கவரும் கவர்ச்சிகரமான கடனாக தனிநபர் கடன் உள்ளது. எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது.
    எந்தவித ‘செக்யூரிட்டி’யும் கோராமல் வழங்கப்படுவது என்பதால், பலரையும் கவரும் கவர்ச்சிகரமான கடனாக தனிநபர் கடன் உள்ளது.

    மருத்துவச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றுக்குப் பணம் தேவை என்னும்போது உடனடியாக கை கொடுப்பது தனிநபர் கடன் ஆகும். இதற்கான வட்டி விகிதமும் 10 முதல் 13 சதவீதம் என்பது மிகவும் அதிகம் என்றாலும், அவசியமாகத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

    ஆனால், எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது. அவை பற்றி...

    தனிநபர் கடனாகப் பெற்ற பணத்தை பங்குச் சந்தை அல்லது பிற ‘ரிஸ்க்’கான முதலீடுகளில் போடாதீர்கள். அவை போன்ற ரிஸ்க்கான திட்டங்கள் லாபம் அளிக்காமல் முதலீடு செய்ததை விடக் குறைவான மதிப்புக்குச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.

    வாகனம் வாங்க அல்லது அதுபோன்ற பிற செலவுகளுக்கு தனிநபர் கடன் வாங்க வேண்டாம். தனிநபர் கடன் எந்த ஓர் உத்தரவாதமும் இல்லாமல் அளிக்கப்படுவதால் வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க எல்லாம் தனிநபர் கடனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.

    உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்க வேண்டும் என்பதற்காகவும் தனிநபர் கடன் வாங்க வேண்டாம். இன்றைய சூழலில் பல நிறு வனங்கள் தங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக வட்டியில்லாத ஈ.எம்.ஐ. சேவைகளை எல்லாம் வழங்குகின்றன.

    பிறரின் தேவைக்காகக் கடன் பெற்று கொடுத்துவிட்டு அவர்கள் சரியான நேரத்தில் உங்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கவில்லை என்றால் அதனால் உங்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும். அதுமட்டும் அல்லாமல், நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும்போது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வேறு எந்தக் கடனும் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

    தொழில் தொடங்க தனிநபர் கடன் பெற வேண்டாம். தனிநபர் கடனை தவிர்த்து தொழில் துவங்க அரசு பலவகைகளிலும் கடன் அளித்து உதவி செய்கிறது. புதியதாகத் துவங்கும் ஒரு தொழிலில் உடனே வருவாய் பெற்றுக் கடனை திருப்பிச் செலுத்திவிடலாம் என்பதும் முடியாத காரியம் ஆகும். எனவே தனிநபர் கடன் என்பது அவசரத் தேவையின்போது உங்களுக்கு உதவ மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? அதற்குமுன், சில விஷயங்களில் தெளிவு பெறுவது அவசியம்.
    பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? அதற்குமுன், சில விஷயங்களில் தெளிவு பெறுவது அவசியம்.

    நிதி முதலீடுகள் செய்யும்போது வரும் லாப, நஷ்டங்கள் தனிமனிதனின் பொருளாதாரத் தளங்களில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை. எனவே அது தொடர்பான அச்சமும் முதலீட்டாளர்களுக்கு இருக்கவே செய்யும். மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் பல்வேறு பரிணாமங்களில் கிடைப்பதால் அவற்றை லாவகமாகத் தேர்வு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

    நாம் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களாகக் கருதுபவர்களும்கூட தமது முந்தைய தவறுகளில் இருந்துதான் பாடம் கற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் ஒன்றையொன்று ஒப்பிடுவதில் ஏற்படும் தடுமாற்றங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனாலும் சரியான மியூச்சுவல் பண்ட் திட்டத்தைப் பிரித்தெடுக்கச் சில அளவுகோல்கள் உள்ளன.

    மியூச்சுவல் பண்டில் பண்ட் மானேஜரின் பின்புலம் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். பண்ட் மானேஜரின் கடந்த காலச் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும். அவர்கள் நிர்வகித்த பண்ட்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளதா என்பதையும், பெஞ்ச் மார்க் என்கிற நிலைக்குறிகளை அடைந்துள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். எத்தனை விதமான முதலீட்டுத் திட்டங்களைக் கையாண்டுள்ளார் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

    மியூச்சுவல் பண்ட்டில் ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் உண்டு. வளர்ச்சி, விலை உள்ளிட்டவை குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘வேல்யூ இன்வெஸ்டிங்’ எனப்படும் மதிப்பு முதலீடு, ‘குரோத் ஸ்டிராட்டர்ஜி’ எனப்படும் வளர்ச்சி வழி மற்றும் ‘பிளெண்டட் ஸ்டிராட்டர்ஜி’ எனப்படும் கலப்பு உபாயம் போன்ற நுட்பங்கள் முதலீட்டுத் திட்டங்களில் உள்ளன.

    நாம் தேர்வு செய்யும் மியூச்சுவல் பண்ட் கடந்த காலத்தில் வருவாயை ஈட்டுவதில் சரியாகச் செயல்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதேநேரம், கடந்த காலத்தில் வெற்றிகரமாகச் செயல்படாத ஒரு பண்ட், எதிர்காலத்திலும் அதேபோல் நீடிக்கும் என்ற முடிவுக்கு வரக்கூடாது. ஆக, மியூச்சுவல் பண்டில் எப்போதும் ஒரே அளவுகோலைப் பயன்படுத்தக்கூடாது.

    ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மியூச்சுவல் பண்ட் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ‘ஸ்டாண்டர்டு டீவியேஷன்’ எனப்படுகிறது. இதைப்போல பல பிரத்யேக பதங்கள் உள்ளன. அவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.

    பல்வேறு முகமைகள் வழங்கும் தரவரிசைகளைச் சரியான அளவுகோலுடன் ஆராய்ந்து ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம். கொடுக்கப்பட்ட மதிப்பீடுகள், தர வரிசைகளை ஆராய்ந்து, ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
    பெரு நகரங்களில் வில்லா அல்லது அடுக்கு மாடி வீடு வாங்க அவர்கள் முடிவு செய்யும் நிலையில் வங்கி கடன் என்பது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
    இன்றைய இளம் தலைமுறையினர் (Millennial) பணி வாய்ப்புகள் மற்றும் தொழில் நிலவரம் ஆகியவற்றில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தவுடன் தங்களுக்கென சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருப்பதாக பல்வேறு ரியல் எஸ்டேட் கள ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. பெரு நகரங்களில் வில்லா அல்லது அடுக்கு மாடி வீடு வாங்க அவர்கள் முடிவு செய்யும் நிலையில் வங்கி கடன் என்பது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

    தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள பல திட்டங்களின் மூலம் வீடு வாங்குபவர்களுக்கான பல சலுகைகள் நடைமுறையில் உள்ளன. வங்கிகள் அல்லது வீட்டு வசதி நிதி நிறுவனங்களும் எளிமையான நடைமுறைகளில் வீட்டு கடன்களை வழங்குகின்றன. வீட்டு கடன் பெற விண்ணப்பிக்கும்போது வங்கிகள் பல்வேறு கடன் திட்டங்கள் பற்றி குறிப்பிட வாய்ப்பு உள்ளது. அவற்றில் கவனிக்கத்தக்க இரு வகை கடன் திட்டங்கள் பற்றி ரியல் எஸ்டேட் நிதி ஆலோசகர்கள் தெரிவிப்பதாவது :

    * முதலாவது, கடன் பெற்ற முதல் ஒரு சில வருட காலகட்டத்திற்கு குறைவான மாதாந்திர தவணைகளை செலுத்தும் வகையில் உள்ள ‘ஸ்டெப் அப் லோன்’ ஆகும். இது ‘சர்ப்‘ (SURF-Step Up Repayment Facility) கடன் திட்டம் என்றும் சொல்லப்படும்.

    * இரண்டாவது கடன் திட்டமானது ஏற்கெனவே வங்கியில் வீட்டு கடன் பெற்று திருப்பி செலுத்தி வரும் நிலையில், வீடு விரிவாக்கம் அல்லது உள் கட்டமைப்பு மாற்றம் ஆகிய காரணங்களுக்காக பெறக்கூடிய ‘டாப் அப் லோன்’ (Top-Up Loan) ஆகும்.

    ‘ஸ்டெப் அப் லோன்’

    சொந்தமாக வீடு வாங்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு மாதாந்திர தவணை தொகை சுமையாக அமையாமல், இந்த திட்டத்தில் முதல் சில வருடங்களுக்கு இ.எம்.ஐ தொகையை குறைவாக கணக்கிடப்படும். பின்னர், காலப்போக்கில் பதவி உயர்வு மற்றும் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றுக்கேற்ப மாதாந்திர தவணை தொகையை அதிகமாக திருப்பி செலுத்தலாம்.

    ஒப்பீட்டு நோக்கில் கவனிக்கும்போது தற்போது வழங்கப்படும் வீட்டு கடன்களில், இவ்வகை திட்டத்தின் மாத தவணைகள் அதிகமாக இருப்பதுடன், கடனை திருப்பிச் செலுத்தும் காலமும் நீண்டதாக இருக்கும். அதாவது, தொடக்க ஆண்டுகளில் மாத தவணை குறைவாகவும், குறிப்பிட்ட காலம் சென்ற பின்னர் தவணை தொகையை அதிகமாகவும் திருப்பி செலுத்த இயலும்.

    தவணை தொகை அதிகரிப்பு எவ்வளவு என்பதை, கடன் பெற்றவருக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வருமான உயர்வுகளை பொறுத்து முடிவு செய்யப்படும். கடனுக்கான கால அவகாசத்தை கடன் பெறுபவரின் வயது, கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடனை திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கிகள் அல்லது வீட்டு கடன் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. இவ்வகை கடன் திட்டம் இளம் வயதினருக்கு நல்ல வாய்ப்பு என்பது பலரது கருத்தாகும்.

    ‘டாப் அப் லோன்’

    ஏற்கெனவே வீட்டு கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தி வரும் நிலையில் கூடுதலாக கடன் பெறும் வாய்ப்பை அளிப்பது டாப் அப் லோன் திட்டம் ஆகும். இதன் மூலம் வீட்டை புதுப்பித்தல், வீடு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கடன் பெறலாம். தனி நபர் கடனுடன் ஒப்பிடும்போது இவ்வகை கடனுக்கு வட்டி விகிதம் குறைவு என்பதையும் நிதி ஆலோசகர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

    இந்த திட்டத்தில் அளிக்கப்படும் கடன் தொகை அளவை, கடன் பெற்றவர் முந்தைய தவணைகளை திருப்பிய செலுத்திய விதம், கடன் மதிப்பு விகிதம், திருப்பி செலுத்தும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. பொதுவாக, ‘டாப் அப் கடன்’ பிரதான கடனுடன் இணைக்கப்பட்ட தனிப்பட்ட கடனாக கருதப்படும். இதற்கென தனியாக கடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். மேலும், இவ்வகை கடன்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்காது என்பது கவனிக்கத்தக்கது.

    இவ்வகை கடனை வாங்குபவர், கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர் என்ற நிலையில் ஆவணங்கள் அளிக்கவேண்டிய செயல்முறைகள் குறைவாக இருக்கும். கடன் விண்ணப்பமும் குறைவான காலகட்டத்திலேயே எளிதில் செயலாக்கம் பெற்றுவிடும்.
    வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.
    பொதுவாக நமது நாட்டை பொறுத்தவரை அக்காலத்தில் ஆண்கள் வேலை பார்த்து பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தந்து பணத்தை சேமித்து வைப்பர். பெண்களும் ஆண்களையே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர். எனினும் பல வீடுகளில் பெண்கள் சம்பாதித்து பணத்தை தங்கள் கணவன்மார்களிடமே தந்துவிடுகின்றனர்.

    தனக்காக எதையுமே சேமிக்காமல் வாழ்கின்றனர். இதனால் பின்னாளில், ஏதாவது பிரச்சனை என்று வரும் போது சம்பாதித்த பணம் கூட கையில் இல்லாமல் அவதியுறுகிறார்கள். ஆகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.

    • சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.

    • நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.

    • பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.

    • ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.

    • முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.

    • வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.

    • பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம். 
    நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம்.
    நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதியையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ முடியாது. அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதையும் பார்க்க வேண்டும். நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமத கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும்.

    எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம். கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திவிட வேண்டும்.

    மொத்த நிலுவை தொகையில் குறைந்தபட்ச தொகையை செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதம் உள்ள தொகையை கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம். கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்ற கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 எடுத்தால் அதற்கு 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்டணமாக இருக்கும்.



    மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி 35 சதவீதம் முதல் 40 சதவீதம் என்கிற அளவில் இருக்கும். கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பிச் செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்தில் இருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.

    நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவை குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம். கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும்.

    இதற்கு சில சலுகைகள் உண்டு. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும். சரியாக கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது.

    எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும். கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து ‘நோ டியூ’ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.
    பல்வேறுபட்ட விதங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது உங்களது வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்கும் ஒரு நிச்சயமான வழி ஆகும். என்ன புத்திசாலித்தனமான முதலீடு, அதன் அம்சங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்...
    நம் அனைவருக்கும் பொருளாதாரம் சார்ந்த கனவுகள், இலக்குகள் உண்டு. அது, வீடு வாங்குவதாக இருக்கலாம், நிலம் வாங்குவதாக இருக்கலாம், கார் வாங்குவதாக இருக்கலாம், வங்கி இருப்பு குறிப்பிட்ட தொகையை எட்ட வேண்டும் என்பதாக இருக்கலாம்.

    திட்டமிட்டுச் செயல்பட்டால் இத்தகைய கனவுகளை ஒருநாள் நனவாக்க முடியும். உதாரணமாக, முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    பல்வேறுபட்ட விதங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது உங்களது வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்கும் ஒரு நிச்சயமான வழி ஆகும். ஆனால் உங்கள் பணத்தை அதிவேகமாக வளர்ப்பதற்கு புத்திசாலித்தனமான முதலீடு முக்கியம்.

    அது என்ன புத்திசாலித்தனமான முதலீடு, அதன் அம்சங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்...

    * முதலீடு செய்வதற்கு முன்னர், உங்கள் முதலீட்டில் இருந்து நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும்.

    * ஒருவர் முதலீட்டு செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பே நிகரச் சொத்துகள் மற்றும் கடன் களைக் கணக்கிடுவது முக்கியம். தற்போதைய முதலீடுகளைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் பணத்தை அறிவுப்பூர்வமாக முதலீடு செய்வது எளிதாக இருக்கும்.

    * முதலீடு குறித்த முறையான ஆராய்ச்சி முக்கியம். நீங்கள் முதலீடு செய்யும் துறையைப் பற்றிய தெளிவான அறிவு பெறும்வரை முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

    * முதலீட்டில் சோதனை முயற்சி வேண்டாம். எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், பங்குச் சந்தை எங்கு செல்லும் என்பதை ஊகிக்க முயற்சிக்க வேண்டாம். இன்றே முதலீடு செய்து உங்கள் முதலீட்டுத் தொகையை விரிவாக்கவும்.

    * நீங்கள் முதலீடு செய்வதற்குப் புதியவராக இருந்தால், நீங்கள் அறிந்திருக்கும் துறைகளில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது. இது நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும்.

    * பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்யுங்கள். இதனால் ஒன்றில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், மற்றொன்றில் இருந்து கிடைக்கும் லாபத்தால் அந்த நஷ்டம் ஈடு செய்யப்படும்.

    * உங்கள் முதலீடுகளின் செயல் திறனைச் சரிபார்க்க வழக்கமான இடைவெளியில் எப்போதும் உங்கள் ‘போர்ட்போலியோ’ செயல்திறனைக் கண்காணிக்கவும். மேலும், திருமணம் போன்ற சிறப்புச் சந்தர்ப்பங்களில் ஒரு பகுப்பாய்வு தேவைப்படலாம்.

    * சில முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் பணவீக்கத்தின் தாக்கத்தைப் புரிந்து கொள்கிறார்கள். உங்கள் வருமானம் மற்றும் முதலீடுகளின் உண்மையான மதிப்பை அறிய பணவீக்கத்தின் காரணியை அறிந்துகொள்ளுங்கள்.

    * ஒரு சில முதலீடுகள் உடனடியாகப் பணம் எடுக்கக்கூடியதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எந்த ஓர் அவசர சூழ்நிலையிலும் அத்தகைய முதலீடு உங்களுக்குக் கைகொடுக்கும். உங்கள் எல்லா நிதியையும் நீண்டகால முதலீடாக வைத்துக்கொள்ள வேண்டாம்.

    * முதலீடு பற்றிய முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முதலீடு தொடர்பான இத்தகைய முடிவுகளை யதார்த்தமாகவும், அறிவார்ந்த விதத்திலும் எடுங்கள். எப்போதும் உங்கள் எதிர்பார்ப்புகள் யதார்த்தமாக இருக்க வேண்டும். ஒருபோதும் வானத்தில் கோட்டை கட்ட நினைக்க வேண்டாம். யதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட நிதி இலக்குகளை எட்ட முடியாது என்பதை உணருங்கள்.
    ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படி ‘பிக்சட் டெபாசிட்’ மூலம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது எனப் பார்க்கலாம்...
    எந்த விஷயத்திலும் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். பொருளாதாரத்திலும் அப்படித்தான். சேமிப்பு, முதலீடுதான் நம் பொருளாதார அஸ்திவாரத்தை வலுவாக்கும்.

    சேமிப்பு என்கிறபோது, உலகப் பெரும் பணக்காரர் வாரன் பபெட் கூறிய மந்திர வார்த்தைகளைப் பின்பற்றினால் மாயாஜாலம் நிகழும். அதாவது, ‘செலவு செய்தபின் மிஞ்சிய பணத்தைச் சேமிக்காமல், சேமித்தபிறகு மிஞ்சும் பணத்தைச் செலவு செய்ய வேண்டும்’ என்கிறார், பபெட்.

    அதேபோல, ‘தூங்கும்போதும் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய வழியை நீங்கள் கண்டுபிடிக்காவிட்டால், சாகும்வரை நீங்கள் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என்றும் பபெட் சொல்கிறார்.

    உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா?

    பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகளில் உங்களிடம் உள்ள பணத்தை வேகமாக இரட்டிப்பாக்க முடியும் என்றாலும் அவற்றில் ‘ரிஸ்க்’ உண்டு. எனவே, அவை போன்று ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படி ‘பிக்சட் டெபாசிட்’ மூலம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது எனப் பார்க்கலாம்...

    உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஆண்டுக்கு 8 சதவீதம் லாபம் அளிக்கக்கூடிய ஒரு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடத்துக்கு முதலீடு செய்யுங்கள்.

    இப்படிச் செய்யும்போது நீங்கள் முதலீடு செய்த ஒரு லட்சம் ரூபாய், ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.

    இதுவே இரண்டாம் வருடம் முடியும்போது ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் 8 சதவீதக் கூட்டு வட்டி கிடைக்கும். இப்படியே தொடர்ந்து 10 வருடம் செய்திருக்கும்போது உங்கள் பணம் இரட்டிப்பாகி 2 லட்சத்து 15 ஆயிரத்து 892 ரூபாயாக இருக்கும்.

    ஆனால் தற்போது பெரும்பாலான வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 6.8 சதவீத வட்டி விகித லாபத்தை மட்டுமே அளிக்கின்றன. எனவே 8 சதவீதத்துக்கும் அதிகமான லாபம் அளிக்கும் வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது எளிமையாக 10 வருடத்தில் இரட்டிப்பாக்க முடியும்.

    வீடு, கார் அல்லது அது போன்றவற்றை நீங்கள் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும்போது பணத்தை இப்படிச் சேமிக்கும் போது எளிதாக ரிஸ்க், பயம் ஏதுமில்லாமல் முதலீட்டைப் பெருக்கலாம்.

    மொத்தமாக பெரும் தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது? அவர்கள், ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாத தவணையாக முதலீடு செய்து தமது பணத்தின் மீது லாபம் பெற முடியும். 
    வீட்டு கடன் பெற்றவர் திருப்பி செலுத்த முடியாமல் போவதற்கு கடும் நோய் (அ)இறப்பு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுபோன்ற நிலையில் கடன் பெற்று வாங்கிய வீட்டின்மீது செய்யப்பட்ட காப்பீடு பெரும் உதவியாக இருக்கும்.
    வீட்டு கடன் பெறுவதன் மூலம் சொந்த வீடு வாங்குவதுதான் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வழக்கமாக உள்ளது. அவ்வாறு பெறப்படும் கடனை மாத தவணைகளாக திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 10 முதல் 25 வருடங்களாக இருக்கும் நிலையில் அந்த நீண்ட கால அவகாசத்தில் கடன் பெற்றவருக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு அல்லது இறப்பு ஆகிய காரணங்களால் கடனை திருப்பி செலுத்துவது தடைபடலாம். அதன் காரணமாக அவர் குடும்பத்தினர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு என்று நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    உதவும் காப்பீட்டு திட்டங்கள்

    அவர்களது கருத்துப்படி, கடன் பெற்றவர் திருப்பி செலுத்த முடியாமல் போவதற்கு கடும் நோய் அல்லது இறப்பு ஆகிய இரண்டும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுபோன்ற நிலையில் கடன் பெற்று வாங்கிய வீட்டின்மீது செய்யப்பட்ட காப்பீடு பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    கடன் மறு சீரமைப்பு

    வீட்டு கடனை முற்றிலும் செலுத்தாத நிலையில் கடன்தாரருக்கு இறப்பு நேரிடும் பட்சத்தில் கடனுக்கான இணை விண்ணப்பதாரர் அல்லது அவரது சட்ட ரீதியான வாரிசு ஆகியோர் கடனை திருப்பி செலுத்தவேண்டும். அதுபோன்ற தருணங்களில் கடன் அளித்த நிதி நிறுவனம் அல்லது வங்கி ஆகியவற்றை அவர்கள் அணுகினால் விதிமுறைகளின்படி கடனை மறுகட்டமைப்பு செய்தோ அல்லது இ.எம்.ஐ செலுத்துவதற்கான கால அவகாச நீட்டிப்பு அளித்தோ உதவிகள் செய்ய வாய்ப்புகள் உண்டு.

    கூடுதல் தொகை காப்பீடு

    பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் வீட்டு கடன் வழங்குவதற்கு முன்னர் போதுமான தொகைக்கு காப்பீடு செய்யும்படி வலியுறுத்துகின்றன. அத்தகைய நிலையில் வீட்டு கடனுக்கு ‘டெர்ம் காப்பீடு’ செய்யும் முன்னர் காப்பீட்டு தொகை, பெறப்பட்ட கடன் தொகையை விட அதிகமாக இருந்தால்தான் கடன் பெற்றவரது வாரிசுகளுக்கு சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

    வங்கிகள் அளிக்கும் சலுகைகள்

    காப்பீடு மூலம் கிடைத்த தொகை போதுமானதாக இல்லை என்ற நிலையில் கடனுக்கான சொத்தை விற்பதன் மூலம் நிலுவை தொகையை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் திரும்ப பெறும் சூழல் ஏற்படலாம். ஆனால், வீட்டு கடனை பொறுத்தவரை வங்கிகள் உடனடியாக சொத்துக்களை விற்பனை செய்யும் வழிமுறைகளை மேற்கொள்வதில்லை.

    கடன் பெற்றவர்கள் அல்லது அவர்களது வாரிசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடன் மறு சீரமைப்பு அல்லது இ.எம்.ஐ செலுத்த கூடுதல் கால அவகாசம் போன்ற சலுகைகளை வழங்க முன் வருகின்றன.

    கடனோடு இணைந்த காப்பீடு

    வீட்டு கடன் தணைகளை செலுத்தும்போது வரக்கூடிய எதிர்பாராத சங்கடங்களை சமாளிக்க காப்பீடு அவசியம் என்ற நிலையில் வீட்டு கடன் அளிக்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களுக்கு உதவும் விதமாக ‘பில்ட் இன்’ காப்பீடு திட்டங்களை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    ×