search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "satellite"

    • இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ஆர்யப்பட்டா, காஸ்மோஸ்-3எம் என்ற ராக்கெட்டால் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • இந்திய அரசு அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகளில் ஆர்யபட்டாவின் படங்கள் இடம்பெற செய்து கவுரவப்படுத்தியது.

    இந்திய அறிவியல் வரலாற்றில் 1975-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்று இந்தியாவின் கனவை ஒரு விண்ணோட சுமந்து சென்று வெற்றிக்கரமாக அந்த கனவை சரித்திரமாக மாற்றிய வரலாற்று சிறப்புமிக்க நாள்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 50 அறிவியல் விஞ்ஞானிகள் ஒன்று கூடி ரஷ்யாவின் சோவியத் செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து ஒரு ராக்கெட்டை ஏவினர். அந்த விண்ணோடம் ஏப்ரல் 19, 1975-ம் ஆண்டில் கொண்டு சென்ற செயற்கை கோள் தான் ஆர்யப்பட்டா.

    இந்தியாவின் முதல் கணிதவியலாளர் மற்றும் வானியலாளராக அறியப்படுகின்ற ஆர்யப்பட்டாவின் பெயரை இந்த செயற்கைகோளுக்கு வைக்கப்பட்டது.

    5-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்யப்பட்டா சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்தின் நிகழ்வுகளை சரியாக கணித்து கூறி, இந்தியாவின் விஞ்ஞான சரித்திரத்தில் இடம்பிடித்தார்.

    அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தியிடம் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்யப்பட்டா பெயருடன் மைத்ரி, ஜவஹர் போன்ற பெயர்களையும் செயற்கை கோளிற்காக பரிந்துரை செய்தனர். இறுதியில் இந்திராகாந்தி தேர்வு செய்த பெயரே ஆர்யப்பட்டா.

    முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ஆர்யப்பட்டா, காஸ்மோஸ்-3எம் என்ற ராக்கெட்டால் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது. 360 கிலோ கிராம் எடை கொண்ட இது 26 முனைகளுடன், 1.4 விட்டம் அளவில் தயாரிக்கப்பட்டது.

    இந்த செயற்கைக்கோளை உருவாக்க சுமார் ரூ.5 கோடி செலவிடப்பட்டது. 26 மாதங்கள் விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து செயற்கை கோளை உருவாக்கினர். இந்த செயற்கைக் கோள் பூமியிலிருந்து சுமார் 695 கி.மீ. உயரத்தில் அமையுமாறு ஏவப்பட்டது. இது உலகை ஒருமுறை சுற்றிவர 96.6 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. ஒரு நாளைக்கு 15 சுற்றுக்கள் வீதம் உலகைச் சுற்றி வந்தது. இதன் சராசரி வேகம் விநாடிக்கு 8 கி.மீ. ஆகும்.

    ஆர்யப்பட்டாவின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை தவிர அனைத்து பேனல்களுமே சூர்ய மின்கலங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதனால் ஆர்யப்பட்டாவால் 46வால்ட் மின்சாரத்தை உற்பத்திசெய்துக் கொள்ள முடியும்.

    பூமியின் அயணி மண்டலத்தில் இருக்கக்கூடிய நிலைகளை ஆராயவும், நியூட்ரான்கள், சூரியனிலிருந்து வெளிப்படும் காமா கதிர்கள் ஆகியவற்றை அளவீடு செய்வதும் ஆர்யப்பட்டாவின் பணியாக இருந்தது. மேலும் இது வானியல் எக்ஸ்ரேக்களின் செயல்திறனை கண்டறிவதும் இதனுடைய முக்கிய பணியாக இருந்தது. சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின் முதல் 4 நாட்கள் ஆர்யப்பட்டாவின் பணி சிறப்பாகவே இருந்தது. ஆனால் திடீரென்று ஏற்பட்ட மின்சார விநியோகக் கோளாறால், 5-வது நாளில் செயல்பாடுகள் அனைத்தும் தோல்வியடைந்து, ஆர்யப்பட்டாவிலிருந்த அனைத்து கருவிகளும் செயலற்று போயின.

    மின்சார விநியோகம் தடைபடும் வரை பெங்களூரிலுள்ள இஸ்ரோவின் தலைமை அலுவலகத்திற்கு ஆர்யப்பட்டா சில தகவல்களை அனுப்பிவைத்தது.

    செயலிழந்து நின்றாலும், ஆர்யப்பட்டா பூமியின் சுற்றுப்பாதையில் கிட்டத்தட்ட 1992-ம் ஆண்டு வரை சுற்றி வந்தது. 17 ஆண்டுகள் கழித்து 1992-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி ஆர்யப்பட்டா பூமியின் மேற்பரப்பில் வெடித்து சிதறியது. ஆர்யபட்டா செயற்கை கோளின் வெடித்த துகள்கள், பாகங்கள் அனைத்தும் மீண்டும் வளிமண்டலத்திற்குள் பிரேவசித்து, இந்தியாவின் கனவு அன்றே மறைந்தது.

    இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு அச்சாரம் அமைத்து கொடுத்த ஆர்யப்பட்டா செயற்கைகோளை நினைவுகூறும் விதமாக, இந்திய அரசு அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகளில் ஆர்யபட்டாவின் படங்கள் இடம்பெற செய்து கவுரவப்படுத்தியது.

    இந்த சரித்திர தினத்தை நாளை நினைவு கூறும் நாளாகும்.

    • ஒன் வெப் விண்வெளி செயற்கை கோள்களில் 2-வது மற்றும் கடைசி தொகுதி செயற்கை கோள்களை இது சுமந்து செல்கிறது.
    • ஏவப்படும் 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5805 கிலோ ஆகும்.

    சென்னை:

    இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் நாளை (26-ந் தேதி) விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது தளத்தில் இருந்து நாளை காலை 9 மணிக்கு விண்வெளிக்கு புறப்படுகிறது.

    ஒன் வெப் விண்வெளி செயற்கை கோள்களில் 2-வது மற்றும் கடைசி தொகுதி செயற்கை கோள்களை இது சுமந்து செல்கிறது.

    தற்போது ஏவப்படும் 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5805 கிலோ ஆகும். எல்.வி.எம்.3 ராக்கெட்டுகள் 8 டன் எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட ஒன் வெப், இங்கிலாந்து அரசு மற்றும் இந்தியாவின் பாரதிய நிறுவனத்தின் ஆதரவுடன் அதிவேக தாமதமில்லா உலகளாவிய தொலை தொடர்பு மற்றும் இணைய இணைப்பை வழங்குகிறது.

    • 3,500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்தது.
    • செயற்கை கோள் புரட்சியை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

    மாமல்லபுரம்

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையில் இருந்து இன்று காலை 8.15 மணிக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இன்டர் நேஷனல் பவுண்டேஷன் சார்பில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறிய ரக செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது.

    இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் ஆணந்த் தலைமையிலான இஸ்ரோ தொழில்நுட்ப விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டை இயக்கினர். இதில் தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இயக்குனர் வெங்கட்ராமன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பாலாஜி ரோஸ் மார்ட்டீன், ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன், ஏ.பி.ஜெ.எம்.நஜீமா மரைக்காயர், ஷேக்ச லீம், ஷேக்தாவூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் எனப்படுவது குறைந்த உயரத்தில் செலுத்தக் கூடியதாகவும், சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்துவதற்காகவும், செயற்கை கோள்களின் தரவுகளை சேகரிப்ப தற்காகவும் அனுப்பப்படுகிறது. இன்று விண்ணில் செலுத்த ப்பட்டுள்ள ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் சுமார் 2.4 கி.மீ. உயரம் வரை செல்லக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ராக்கெட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக பார்வையிட்டனர். விண்ணில் ஏவப்பட்டு உள்ள சிறிய ரக செயற்கைகோள்கள் மூலம் வானிலை, கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை உள்ளிட்ட பல்வேறு தரவு களை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    செயற்கைகோள் விண்ணில் பாய்வதை பார்ப்பதற்காக அதனை தயாரித்த மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் குஜராத், பெங்களூர், ஜெய்பூர், கேரளா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில மாணவர்கள், அணுசக்தி துறையினர் சுமார் 5 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

    அவர்கள் விண்ணில் ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்ததும் ஆரவாரத்தில் கைதட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும் போது, செயற்கை கோள் புரட்சியை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மாணவர்களால் செயற்கை கோள் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கைக்கான வித்து.

    விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மாணவர்கள் குழுவாக செயல்பட முடியும். மாணவர்களின் குழு மனப்பான்மையை வளர்க்கும் விதமாக இது உள்ளது.

    மாணவர்கள் துறை ரீதியாக சாதிக்க பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும். சிறு வயது முதலே அனைவருடனும் இணைந்து செயல்படுவதற்கான பயிற்சி.

    தற்போது செயற்கை கோள் புரட்சி ஏற்பட்டு உள்ளது. பொறியாளர்களை பள்ளியிலேயே உருவாக்க வேண்டும். செயற்கை கோள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது" என்றார்.

    • செயற்கைகோள் மென்பொருள் தயாரித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 10 பேர் மென்பொருள் தயாரித்தனர்.

    திருமங்கலம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் ஆசாதி-2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் மென்பொருள் தயாரித்தனர். அவர்கள் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சிக்கு இஸ்ரோ சென்று வந்தனர். செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து மாணவிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

    இந்த நிலையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து செயற்கைக்கோள் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    • சீனா ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து குவாக்பு-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
    • சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் நிகழ்வுகளை ஹார்ட் எக்ஸ்ரே இமேஜர் மூலம் தயாரித்து வெளியிட்டு உள்ளது.

    சூரியனின் மேற்பரப்பு எப்படி இருக்கும் என்ற வீடியோ காட்சிகளை சீனா வெளியிட்டு உள்ளது. சீனாவின் அறிவியல் அகாடமி கடந்த அக்டோபர் மாதம் ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து குவாக்பு-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

    சூரியனை ஆய்வு செய்யும் வகையில் அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை கொண்டு சீனாவின் சூரிய ஆய்வகம் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் நிகழ்வுகளை ஹார்ட் எக்ஸ்ரே இமேஜர் மூலம் தயாரித்து வெளியிட்டு உள்ளது.

    • செயற்கை கோளுக்கு மென்பொருள் தயாரித்து திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாணவிகளை வாழ்த்தினார்.

    திருமங்கலம்

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ சார்பில் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் புதிய செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டின் மூலம் செலுத்தப்பட்ட ஆசாதி சாட் எனப்படும் செயற்கை கோளை தயாரிக்க நாடு முழுவதும் 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளைக் கொண்டு செயற்கைக்கோள் மென்பொருள்களை தயாரிப்பதற்காக இஸ்ரோ தேர்வு செய்தது.

    இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு செயற்கை கோளுக்கான மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதால் அவர்கள் ஸ்ரீஹரிகோட்டா சென்று வந்தனர்.

    முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து மாணவிகளை பாராட்டினார். இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டினர்.

    மேலும் ஒன்றிய அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும் பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் தன்ராஜ், சிவசுப்பிரமணி, மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் சரவணபாண்டி, மகேந்திரபாண்டி, சிங்கராஜ் பாண்டியன், வாகைகுளம் சிவசக்தி, மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் தமிழ்ச்செல்வம், திருப்பதி, ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அன்பழகன், நிர்வாகிகள் ஆண்டிச்சாமி, காசி, விஜி, தலைமை ஆசிரியர் கர்ணன், ஆசிரியைகள் சந்தியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஸ்ரீதேவி சண்முகபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • டி.எஸ்-இஓ செயற்கைக் கோள் அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுக்கும் தன்மை கொண்டது.
    • கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூர் மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்தியாவில் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அத்துடன், வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    அவ்வகையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டி.எஸ்-இஓ, நியூசர் உள்பட 3 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவ முடிவு செய்யப்பட்டு, அதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

    ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை சரியாக 6.02 மணிக்கு செயற்கைக் கோள்களை தாங்கிய பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

    இந்த ராக்கெட்டில் முதன்மை செயற்கை கோளான டி.எஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம்பிடிக்கும் திறன் உடையது. மேலும் நியூசர் செயற்கை கோள் 155 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர்ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும் தன்மை கொண்டது.

    மேலும் இதனுடன் கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது 2.8 கிலோ எடை கொண்டது. 

    • செயற்கைக்கோள் அதிக தெளிவுடன் ஒரே நேரத்தில் பலகோணங்களில் பூமியை படம் எடுக்கும் திறனுடையது.
    • நாளை மாலை 6 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

    இந்தியாவில் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான செயற்கை கோள்கள் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டி.எஸ்-இஓ, நியூசர் உள்பட 3 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (30-ந்தேதி) மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளுக்கான 25 மணி நேர 'கவுன்டவுன்' இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் முதன்மை செயற்கை கோளான டி.எஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. வண்ண புகைப்படம் எடுக்கும் திறன் உடையது. மேலும் நியூசர் செயற்கை கோள் 155 கிலோ எடை கொண்டது.

    இது சிந்தடிக் அப்ரேச்சர்ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும் தன்மை கொண்டது.

    மேலும் இதனுடன் கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இது 2.8 கிலோ எடை கொண்டது.

    இந்த செயற்கைகோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பிறகு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் இறுதி பாகமான பி.எஸ்.4 எந்திரம் உதவியுடன் சில ஆய்வுக் கருவிகளும் வலம் வர உள்ளன.

    இந்த சோதனையானது, இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட கண்காணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் பயணிக்கும் கழிவு பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கான சிறிய சுற்றுப்பாதை குப்பைகளை உருவாக்கியுள்ளது.
    வாஷிங்டன் :

    விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ரஷியா நேற்று முன்தினம் சோதித்தது. இந்த ஏவுகணை சோதனையில், ரஷியாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று வெடித்து சிதறியது. இது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விண்கலத்துக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனிடையே ரஷியாவின் இந்த ஏவுகணை சோதனை ஆபத்தான மற்றும் பொறுப்பற்றது என கூறி அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் “இன்று, ரஷிய கூட்டமைப்பு பொறுப்பற்ற முறையில் அதன் சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்றுக்கு எதிராக, நேரடியாக தாக்கக்கூடிய செயற்கைக்கோள்களுக்கு எதிரான ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த சோதனையானது, இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட கண்காணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் பயணிக்கும் கழிவு பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கான சிறிய சுற்றுப்பாதை குப்பைகளை உருவாக்கியுள்ளது, அவை இப்போது அனைத்து நாடுகளின் நலன்களையும் அச்சுறுத்துகின்றன” என கூறினார்.
    நேபாள விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நேபாளிசாட்-1, அமெரிக்காவில் இருந்து நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. #Satellite

    காத்மாண்டு:

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் முதன் முறையாக செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளது. நேபாள்சாட்-1 என பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைகோளை நேபாளத்தை சேர்ந்த ஆப்காஸ் மாஸ்கி மற்றும் ஹரிராம் ஸ்ரெத்தா ஆகியோர் தயாரித்தனர்.

    அந்த செயற்கைகோள் அமெரிக்காவின் விர்ஜினியாவில் இருந்து நேற்று மதியம் 2.31 மனிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தகவலை நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி தெரிவித்துள்ளது.

    நேபாளம் முதன்முறையாக சொந்தமாக தயாரித்த செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. இது நாட்டுக்கு பெருமை என நேபாள பிரதமர் கே.ஆர்.சர்மா ஒலி தெரிவித்துள்ளார். #Satellite

    அமேசான் நிறுவனம் செயற்கைகோள் உதவியுடன் மலிவு விலையில் இணைய வசதியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon



    அமேசான் நிறுவனம் பிராஜெக்ட் குய்பர் என்ற திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உலகம் முழுக்க அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் முடிவு செய்துள்ளது.

    அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் 3000 செயற்கைக்கோள்களை அமேசான் பயன்படுத்த இருக்கிறது. இவற்றின் உதவியுடன் உலகம் முழுக்க இடையூறின்றி இணைய சேவையை வழங்க முடியும் என அமேசான் நினைக்கிறது. 3000 செயற்கைக்கோள் மூலம் உலக மக்கள் தொகையின் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் ஆண்ட்ராய்டு போலீஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் உலகம் முழுக்க செயற்கைக்கோள்களை நிறுவ அமேசான் திட்டமிட்டுள்ளது. குய்பர் நீண்ட கால திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் திட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் அதிகமாக இணைய வசதியை வழங்க முடியும்.



    அனைவருக்கும் இணைய வசதியை வழங்கும் நோக்கம் கொண்ட மற்ற பிராண்டுகளுடன் கைகோர்க்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் மொத்தம் 3236 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இத்திட்டத்தை வெற்றியடைய வைக்க அமேசான் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அமேசான் நிறுவனம் துவக்கத்தில் இணைய கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது ஜிகாஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவை நாடு முழுக்க அதிவேக பிராட்பேண்ட் இணைய வசதியை மலிவு விலையில் வழங்க இருக்கிறது. 
    மே மாதம் முதல் மாதந்தோறும் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #ISRO
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ‘ககன்யான்’ திட்டம் மூலம் 2021-ம் ஆண்டில் விண்வெளி ஆய்வுக்காக விஞ்ஞானிகளை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது.

    மேலும் பூமி கண்காணிப்பு, காலநிலையை முன்கூட்டி அறிந்து கொள்வது, தொலைதொடர்பு வசதி போன்ற பல்வேறு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தி அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. தொடர்ந்து பாதுகாப்புக்கான செயற்கைகோள்களை அதிக அளவு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    பாதுகாப்பு மட்டுமின்றி பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவிவருகிறது. அனைத்து வகை செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக மாறி உள்ளது.

    தற்போது நாட்டின் பாதுகாப்பு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது. இதனை படிப்படியாக விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது பூமி கண்காணிப்புக்கான 8 செயற்கைகோள்கள் அடுத்த மாதத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.



    ரேடார்களை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்’ வகை செயற்கைகோள் மற்றும் ‘கார்ட்டோசாட்-3’ வரைபட செயற்கைகோள் பாதுகாப்பு துறை பயன்பாட்டுக்காக விண்ணில் ஏவப்பட உள்ளன. ஏற்கனவே ஏவப்பட்ட ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்களில் இருந்து துல்லியமான தகவல் களை பெறமுடியாததால் தற்போது ஏவப்பட உள்ள செயற்கைகோள்களில் துல்லியமான தரவுகளை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக இந்த செயற்கைகோள்கள் மூலம் இரவு நேரத்திலும், மழைக்காலங்களிலும் தரவுகளை தெளிவாக பெற முடியும். எல்லையை கண்காணிக்க இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். செயலிழந்த செயற்கைகோள்களுக்கு பதிலாக தான் புதிய செயற்கைகோள்கள் ஏவப்பட இருக்கிறது.

    ரீசாட்-2பி மே மாதமும், கார்ட்டோசாட்-3 ஜூன் மாதமும், ரீசாட்-2பிஆர்1 ஜூலை மாதமும், ஜீசாட்-1 (புதியது) செப்டம்பர் மாதமும், ஆர்1சாட்- 2பிஆர்2 அக்டோபர் மாதமும், ஜி1சாட்-2 மற்றும் ஆர்1சாட்-1ஏ நவம்பர் மாதமும், ஜி-சாட்-32 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள். #ISRO
    ×