search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saplings"

    • சத்குரு பிறந்த நாளையொட்டி 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படுகிறது.
    • இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    சத்குரு பிறந்த நாளையொட்டி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக ஈஷாவால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 132 விவசாய நிலங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படுகிறது. நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் வகையிலும் காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் கடந்த 2020 ஆண்டில் இருந்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 2 லட்சத்திற்கும் அதிகமமான மரங்கள் நடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 1.10 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 34 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி அருகே உள்ள பூசலபுரம் கிராத்தில் ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன், கிராம அலுவலர் ஜெயராணி ஆகியோர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்றுகள் நடும் விழாவில் மொத்தம் 175 மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 22 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    காங்கயம்:

    காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 22 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக காங்கயம் ஸ்ரீவராஹி கேட்டேட் டவுன்சிப் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது துளிகள் அமைப்பு நிர்வாகிகள், ஸ்ரீவராஹி ரியலிட்டி குரூப் (எஸ்.வி.ஆர்.குரூப்) நிர்வாகிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

    நிகழ்ச்சியில் 175 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஸ்ரீவராஹி கேட்டேட் டவுன்சிப் குடும்ப உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்றது.
    • நாட்டு நல பணி திட்டத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    புதுச்சேரி:

    கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடியின் என் மனம் என் நாடு திட்டத்தின் மூலம் 50-நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் சின்ன வீராம்பட்டினம் ஓட வெளி கிராம பஞ்சாயத்தாரும் இணைந்து அப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி யூனியன் பிரதேச சமூக நல சங்கம் தலைவர் காத்தவராயன் செயலாளர் மதிஒளி , சுதந்திர போராட்ட தியாகி அசோக்ராஜ் , உதவி பொறியாளர் ராஜ்குமார் , இளநிலை செயற்பொறியாளர் சிவஞானம், 100 நாள் வேலை திட்டப்பணி யாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். மேலும் நாட்டு நல பணி திட்டத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளி துணை முதல்வர் வினோலியா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    இந்நிகழ்ச்சியில் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.

    • அ.தி.மு.க. மாநாட்டிற்கு மரக்கன்று வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
    • இளைஞரணி கேபிள் மணி நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ந் தேதி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அழைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நடைபெற்ற நிகச் சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரி யர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், டாக்டர் சரவணன், தமிழ ரசன் கருப்பையா, மாணிக் கம், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றகள் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

    இதில் மாநில நிர்வாகிகள் துரை தன்ராஜ், வெற்றிவேல், இளங்கோவன், பேரூராட்சி கவுன்சிலர்கள் வசந்தி கணேசன், ரேகா ராமச்சந்திரன், சரண்யா கண்ணன், டீக்கடை கணே சன், சண்முக பாண்டிய ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் கருப் பட்டி தங்கப்பாண்டி மருத்துவரணி கருப்பட்டி கருப்பையா, கச்சிராயிருப்பு முனியாண்டி, தென்கரை ராமலிங்கம், தண்டபாணி, மணிகண்டன்.

    செழியன் மருது, சேது, மன்னாடி மங்கலம் ராஜ பாண்டி, ராமு குருவித்துறை பாபு, மேலக்கால் காசி லிங்கம் சோழவந்தான் துரைக்கண்ணன், ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி கேபிள் மணி நன்றி கூறினார்.

    • எனது மண் எனது நாடு என்னும் தலைப்பில் கோவில்பட்டி அய்யனேரி கிராம சுற்று வட்டாரம் மற்றும் பள்ளிகளில் நேஷனல் கல்லூரி மாணவர்கள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.
    • இதில் 30-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளில் அவரை நினைவு கூறும் வகையில் சுற்றுசூழலின் நலன் கருதி எனது மண் எனது நாடு என்னும் தலைப்பில் கோவில்பட்டி அய்யனேரி கிராம சுற்று வட்டாரம் மற்றும் பள்ளிகளில் 100 மரக்கன்றுகளை நட்டனர். இதில் 30-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுடைய சமூக சமுதாய செயல்பாடுகளை வெளிப்படுத்தினர்.

    இதில் அய்யனேரி ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி காளியப்பன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கே.பாண்டி முனியம்மாள் காளியப்பன், கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல் மற்றும் கல்லூரி முதல்வர்கே.காளிதாச முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கினைப்பாளர் துணைப் பேராசிரியர் கே.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களை வழிநடத்தினார்.

    • வளாகத்தைச் சுற்றி சிமெண்ட் சாலைகள் ரூ . 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது.இந்த வளா கத்தில் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக வரும் வாதிகள் பிரதிவாதிகள் மற்றும்நீதிமன்ற பணியாளர்கள் தங்களின் நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கரம் வாகனம் நிறுத்த வசதி மற்றும் வளாகத்தைச் சுற்றி சிமெண்ட் சாலைகள் ரூ . 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் நடும் விழா இன்று விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இவ் விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூரணிம்மா வரவேற்றார் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்ட பாணி கலந்துகொண்டு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகன நிறுத்த வசதிகளை திறந்து வைத்து . கார் நிறுத்துவதற்கானமுதல் டோக்கனை விழுப்புரம் மாவட்ட அரசு வக்கீல் சுப்பிரமணியிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயன் தரும் மரக்கன்றுகளையும் மூலிகை செடிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தண்டபாணி,சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் நட்டனர்.

    விழாவில் விழுப்புரம் மாவட்ட கிழமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி,விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி,விழுப்புரம் எஸ்.பி.சசாங் சாய், அரசு வக்கீல்கள் நாகராஜன் எம். எஸ். நட ராஜன்விழுப்புரத்தில் உள்ள அனைத்து வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தயானந்தம், காளிதாஸ்,சண்முகம்,பத்மநாபன்,மூத்த வழக்கறிஞர்கள் இள ங்கோவன், ராஜாராமன், ராதாகிருஷ்ணன், மற்றும் நீதிமன்ற அலுவலக அலுவலர்கள்,தலைமை எழுத்துகள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • வாழப்பாடி அருகே மேட்டுடையார்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அன்னை தொண்டு நிறுவனம் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு, மேட்டுடையார் பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பொன்.செந்தில் குமார் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுடையார்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உப கரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அன்னை தொண்டு நிறு வனம் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு, மேட்டுடையார் பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பொன்.செந்தில் குமார் தலைமை வகித்தார். அன்னை தொண்டு நிறுவன நிர்வாகி சி.ராதாசெல்வம் வரவேற்றார்.

    பெத்த நாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். செல்வம், க. சந்திரசேகரன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தனர். வனச்சரகர் திருமுருகன் மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் பராமரிக்க வேண்டிய முறை குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    வருவாய் ஆய்வாளர் நீதிபதி, சமூக ஆர்வலர் தும்பல் ஜீவா ஆகியோர், அன்னை அறக்கட்டளை சார்பாக, 10 மாணவ- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர். இந்த விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன், ஸ்ரீதேவி வெங்க டேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சுசீலா நன்றி கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராசாம் பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சேலம் மண்டல திட்ட இயக்குனர் கொல்லாரமேஷ் தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுதந்திர திரு நாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராசாம் பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சேலம் மண்டல திட்ட இயக்குனர் கொல்லாரமேஷ் தலைமை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை துறை ஆலோசனை குழு தலைவர் முரளி கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.

    சுங்கச்சாவடி திட்ட மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தி னர்களாக நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், நாமக்கல் (வடக்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் ஆகி யோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கீரம்பூர் முதல் கோனூர் கந்தம்பாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை சாலை பாதுகாப்பு அதிகாரி சிவகாம சுந்தரம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் சுங்கச்சாவடி ஊழியர்கள், இந்திய தேசிய நெடுஞ்சா லைத்துறையினர் கலந்து கொண்டனர்

    • 123-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா வடக்கு புதுப்பாைளயம் அனுகிரஹா மில் அருகில் நடைபெற்றது.
    • காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் இதுவரை 22,150 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் துளிகள் அமைப்பின் 123-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா வடக்கு புதுப்பாைளயம் அனுகிரஹா மில் அருகில் நடைபெற்றது. இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஷ்குமார், பொத்தியபாளையம் ஊராட்சி தலைவர் சந்திரசேகர், துைண தலைவர் திருநாவுக்கரசு, அனுகிரஹா பேஷன் மில் மோகன், எம்.பி.எம். டெக்ஸ்டைல்ஸ் பால்மணி, பொத்தியபாளையம் ஊராட்சி உறுப்பினர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் இதுவரை 22,150 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 

    • திருப்பூர் நடராஜ் தியேட்டர் சாலை ஆலாங்காடு பிரிவு அருகில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

    திருப்பூர்

    திருப்பூர் மாநகராட்சியை பசுமை மாநகராட்சியாக மாற்றுவதற்காக, மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாநகராட்சி மற்றும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்புடன் இணைந்து கடம்ப வனம் எனும் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் 75ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அதனை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன் முதற்கட்டமாக இன்று திருப்பூர் நடராஜ் தியேட்டர் சாலை ஆலாங்காடு பிரிவு அருகில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.இதனை செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், மண்டல தலைவர்கள் ,கவுன்சிலர்கள் ,மற்றும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 8 ஆண்டுகளில் 15.85 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறோம்.
    • மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர் 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர்:

    வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலை வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க முன்வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட இயக்குனர் சிவராம் கூறியதாவது:-

    வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 8 ஆண்டுகளில் 15.85 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறோம். இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் இலக்குடன் ஒன்பதாவது திட்டம் துவங்கியுள்ளது.ஒன்பதாம் ஆண்டு திட்டத்தில் வழக்கம் போல் விவசாய நிலம், தொழிற்சாலை நிலம், கோவில் நிலங்களில் மரக்கன்றுகள் நடப்படும். அத்துடன் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலை வளாகத்திலும் மரக்கன்று நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளோம்.

    தங்கள் வளாகத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்பும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலைகள், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவை அணுகலாம். பாரம்பரியமாக வளர்க்கப்படும், அரியவகை நாட்டு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வழிகாட்டுதல் வழங்கப்படும். மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர் 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார். 

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது
    • கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன், மரக்கன்றுகளை வழங்கினர்

    பொன்னமராவதி,

    பொன்னமராவதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருமயம் தொகுதி துணை தலைவர் எம்.அக்பர் அலி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன், மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நகர பொருளாளர் எஸ்.அமீர் ஹம்ஜா கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் நகர ஒருங்கிணைப்பாளர் இப்ராஹீம், நகரதலைவர்ஷேக் முகம்மது, நகர செயலாளர் ஆரிப், கிளை பொருளாளர் நூருல் அமீன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    ×