search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanitation"

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தெருக்களில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கால்வாய்களை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்தப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாச் சேரி தெரு திருவண்ணாமலை ஊராட்சியின் எல்லையில் உள்ளது. இந்தப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இங்கு பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தெருக் களில் கழிவுநீர் தேங்குகிறது. கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவு நீர் வடியாமால் குடியிருப்பு களை சுற்றி தேங்கி நிற்கிறது.

    அங்கன்வாடி மையம், சமுதாய கூடம், சிறுவர் பூங்கா மற்றும் கோயில் அருகிலும் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தை கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    எனவே கழிவுநீர் கால் வாய்களை தூர்வார வேண் டும் என்றும், தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் திருவண்ணா மலை ஊராட்சி நிர்வாகத் திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
    • சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொது சுகாதாரத் துறையின் சேவைகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், சமுதாயத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும். அனைத்து குடிமக்களின் சுகாதார உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய புரிந்துணர்வு மேம்பாட்டிற்காக மாநில மற்றும் மாவட்ட சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதார சிக்கல்கள் மற்றும் தேவைகளை கண்டறிதலும், சுகாதார பங்கீட்டாளர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துதலும் இதன் முக்கியமான நோக்கம் ஆகும். ஒவ்வொரு மருத்து வர்களும், வட்டார மருத்துவர்களும் ஊராட்சி பணியாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் உள்ளிட்ட களப்பணி யாளர்களின் கருத்துக்களை பெற்று, முன்னுரிமை அடிப்ப டையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    அரசு மருத்துவமனை களில் இருக்கக்கூடிய வசதிகளை வைத்து, சிறப்பான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் தங்களது வட்டாரங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்தும் அத்தியாவசிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதி குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருத்தியமைக்கப்பட்ட காசநோய் திட்டம், தேசிய தொழுநோய் திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பொது சுகாதாரத்துறை ஆகிய துறைகள் மூலம் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் சங்குமணி, இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி(விருதுநகர்), கலுசிவலிங்கம்(சிவகாசி), துணை இயக்குநர் (குடும்ப நலப்பணிகள்) கவுசல்யாதேவி, துணை இயக்குநர் (காசநோய்) ராஜன், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சசிகலா, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கப்பலூர் சிட்கோ பகுதியில் குப்பைகளை சரிவர அள்ளாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
    • இதில் 500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதில்

    500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சிட்கோ இதுவாகும்.

    கடந்த சில மாதங்களாக சிட்கோவில் முக்கிய பகுதிகளில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

    இங்கு பஞ்சுக்கழிவுகள், துணிமூடைகள், காகித குப்பைகள், பழைய இரும்பு கழிவுகள் உள்ளிட்டவை ேசர்ந்து காணப்படுகின்றன.

    இது குறித்து சிட்கோவில் நிறுவனம் நடத்திவரும் கதிரேசன் கூறுகையில், கப்பலூர் சிட்கோவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் குப்பை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உச்சப்பட்டி பஞ்சாயத்திற்கு செலுத்தி வருகிறோம். மதுரை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் பஞ்சாயத்தாக உச்சப்பட்டி பஞ்சாயத்து உள்ளது. ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் சிட்கோவைப் பொறுத்தவரை பராமுகமாக இருந்து வருகிறது. குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை.

    இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் சிட்கோ தொழில்அதிபர் சங்கத்தில் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. குப்பைகள் அதிகமாக தேங்குவதால் துர்நாற்றம் வீசி தொழிலாளர்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது என்றார். சிட்கோ தொழில் அதிபர்கள் சங்கத்தலைவர் ரகுநாதராஜா கூறுகையில், மின்கட்டணம் செலுத்துதல், மாசுபரவாமல் இருக்க அடர்காடுகளுடன் மரங்கள் வளர்த்தல், இரவு நேர காவலாளி ஊதியம் உள்ளிட்டவற்றை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

    இதுதவிர அனைத்து விதமான வரிகளையும் உச்சப்பட்டி பஞ்சாயத்திற்கு செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் குப்பைகளை அள்ள வருவதில்லை. சாலை வசதிகளை செய்துதர மறுக்கின்றனர்.

    இது சம்பந்தமாக திருமங்கலம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் புகார் செய்தோம். அவர் விரைவில் திருமங்கலம் யூனியனுக்கு பேட்டரி வாகனங்கள் வரவுள்ளன. அவற்றில் ஒன்றை சிட்கோவிற்கு குப்பைகள் அள்ள ஒதுக்கிதருவாக கூறியுள்ளார் என்றார்.

    • தூய்மை பணியாளர்கள் கருஞ்சட்டை பேரணியில் ஈடுபட்டனர்.
    • 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் சுகாதார பிரிவில் நிரந்தர பணியாளர்கள், தொகுப் பூதிய பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் என பல்வேறு முறைகளில் 100 வார்டுகளிலும் பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று காலை ஆண்கள் கருப்பு சட்டை அணிந்தும், பெண்கள் கருப்பு சேலைகள் அணிந்தும் காந்தி மியூசியம் முன்பு திரண்டனர்.

    இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார பணியா ளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்.

    பேரணி மதுரை மாநக ராட்சி அண்ணா மாளி கையில் நிறைவடைந்தது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் பின்னர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், தூய்மை பணியா ளர்களுக்கு எதிராகவும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் அரசாணை எண் 152-ஐ உடனே ரத்து செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அனைத்து பண பலன்களையும் உடனே வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ. 172 வழங்க வேண்டும்.

    அனைத்து பணியாளர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 25 ஆண்டு காலமாக தொகுப்பூதிய அடிப் படையில் பணியாற்று பவர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    • நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்க உள்ளது.
    • தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள குப்பைகள் நனைந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன.இங்குள்ள வீடுகள், கடைகளில் உள்ள குப்பைகள் நாள் தோறும் நகராட்சி தூய்மை–பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான ஈசானியத்தெரு குப்பை உரகிடங்கில் கொட்டப்பட்டு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக பொது மக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மைபணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்காத குப்பைகள் வாங்க வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தியதால் வீடுகளில் தரம் பிரிக்காத குப்பைகள் வாங்கப்படுவதில்லை.

    அதேபோல் நகரில் சாலைகள் கொட்டப்படும் குப்பைகளையும் தரம் பிரித்து மட்டுமே உரகிடங்கிற்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என உத்தர–விடப்பட்டுள்ளதால் குறைந்த அளவே உள்ள தூய்மை பணியாளர்கள் முழுமையாக குப்பைகள் தரம் பிரித்து கொண்டு செல்லமுடியவில்லையாம்.

    இதனால் நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்க முடியாமல் கடந்த 6 நாட்களாக கொட்டப்பட்ட குப்பைகள் மலைபோல் தேங்கி அள்ளப்படாமல் கிடக்கிறது.

    இதனால் நகரில் கடும் சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்–ளதால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சாலையோரம் கொட்டி தேங்கி கிடக்கும் குப்பைகளை கால்நடைகள கிளறி மேய்வதால் குப்பைகள் சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது.

    தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள குப்பைகள் நனைந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.கொசுவினால் ஏற்படும் நோயை தடுக்கவேண்டிய நகராட்சி நிர்வாகமே, குப்பைகளில் உள்ள பிளாஸ்டி டீ கப்புகள், உடைந்த பாட்டில்கள், தேங்காய்மட்டைகளில் மழைநீர் தேங்கி கிடப்பதை அள்ளி அப்புறப்படுதாமல் அலட்சியம் காட்டுவது நகர மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    குப்பைகள் தரம் பிரித்து அள்ளுவது ஒரு புறம் இருந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையில் தேங்கியுள்ள குப்பைகள் உடனடியாக அகற்றிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர்.
    • சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் வசிக்கவே இயலாத சூழ்நிலை நிலவுவதாக பலமுறை புகார் அளித்தும் குப்பைகள் அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • தூய்மைப்பணியில் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.சி.சி. மாணவர்கள் சுமார் 48 பேர் ஈடுபட்டனர்.
    • மோகனூர் காவிரி நதிக்கரையினை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    15 பட்டாலியன் என்.சி.சி கமாண்டிங் ஆபீசர் கர்னல் ஜெய்தீப் ஆணைப்படியும் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீசர் லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல் படியும், மோகனூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருணாசலம் தலைமை–யில் மோகனூர் காவிரி நதிக்கரையினை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த தூய்மைப்பணியில் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.சி.சி. மாணவர்கள் சுமார் 48 பேர் ஈடுபட்டனர். தூய்மைப்பணியின் போது பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், நீரில் தேங்கியிருந்த ஆடைகள் போன்றவற்றை அகற்றி மோகனூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி சங்கர் செய்திருந்தார்.

    • பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது.
    • பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பெருமைக்கு உரியது.

    இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி நடைபெற்றது

    தொடர்ந்து நேற்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது ஆலயத்திற்கு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது

    தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் காவல்து றை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் நன்றி தெரிவி க்கப்பட்டது.

    விழாவில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிகாரி இருதயராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், நாகை சுகாதாரப் பணிகள் உதவி இயக்குனர்விஜய குமார் ஆகியோர் வழிகாட்டு தலின்படி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தியாகதுருகத்தில் கழிவுநீர் கால்வாயில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், டப்பாக்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம்- திருக்கோவிலூர் சாலையில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாக ங்களில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் இந்த கால்வாய் வழியாக செல்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கால்வாய் சந்தைமேடு செல்லும் பாலத்தில் தூர்ந்து போனது. இதனால் கழிவு நீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கிறது. இவ்வாறு தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், டப்பாக்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன. இந்த கழிவு நீர் கால்வாய் கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக திகழ்கிறதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாயை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உடுமலை பழனி ரோட்டு ஹவுசிங் யூனிடில் அரசு பணியில் இருப்போர் குடியிருந்து வருகின்றனர்.
    • இப்பகுதி வழியாக ரோட்டுக்கு கடந்து செல்பவர்களும் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    உடுமலை :

    உடுமலை பழனி ரோட்டில் ஹவுசிங் யூனிட் உள்ளது. இங்கு அரசு பணியில் இருப்போர் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடைகள் தூர்வாரப்படாமலும் குப்பைகளும் மலை போல் குவிந்துள்ளதால் குப்பையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.

    மேலும் குப்பைகளில் இருந்து விஷஜந்துகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு வருவதால் மிகவும் அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. மேலும் இப்பகுதி வழியாக ரோட்டுக்கு கடந்து செல்பவர்களும் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சாக்கடையை தூர்வாரியும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×