search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanatorium"

    • டெங்கு காய்ச்சல் பற்றியும், பரவும் விதம் பற்றியும் அப்புறப்படுத்தும் விதம் குறித்தும் எடுத்துக்கூறினார்.
    • யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று பயனடையவும் அறிவுறுத்தினார்.

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே வரகூர் உயர்நிலைப்பள்ளியில் நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு எதிர்ப்பு மாத விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியை கிருஷ்ணவேணி தலைமை யில் நடந்த முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் கலந்துகொண்டு டெங்கு காய்ச்சல் பற்றியும், பரவும் விதம், பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் வாழ்க்கை சுழற்சி, காய்ச்சல் வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கொசு உற்பத்தியாகும் இடங்கள் பற்றியும் அப்புறப்படுத்தும் விதம் குறித்தும் எடுத்துக்கூறினார். மேலும், யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று பயனடையவும் அறிவுறுத்தினார். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், வாசுதேவன் ஆகியோர் கலந்துகொண்டு டெங்கு விழிப்புணர்வு கருத்துக்களை மாணவ ர்களுக்கு எடுத்துரைத்தனர். நிறைவில் மாணவர்கள் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து க்கொண்டார்கள்.

    ×