search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sale"

    • கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது.
    • வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சென்னை:

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக மீன்வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். சுமார், 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்களுக்கு கடலில் அதிக அளவு மீன்கள் கிடைத்ததால், காசிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனைகளை கட்டியது.

    வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், கானாங் கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஏலம் முறையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் மீன்களின் விலையும் அதிகரித்தது.

    இதுவரை கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900 ஆக அதிகரித்தது. வெள்ளை நிற வவ்வால், கொடுவா மீன் ஆகியவை ரூ.600-க்கும், சிறிய வகை வவ்வால், சங்கரா மீன் ஆகியவை ரூ.500-க்கும், பாறை ரூ.400-க்கும், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது ஆகியவை தலா ரூ.300-க்கும், நவரை, கானாங்கத்தை, நெத்திலி மீன்கள் தலா ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறியதாவது:-

    விடுமுறை நாளான நேற்று மீன்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். இதனால், மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. வாடிக்கையாளர்கள் மீன் வாங்க பயந்ததால் மீன்களை விலையை குறைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் மீன் விற்பனை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த வாரத்தை விட நேற்று மீன் விலை அதிகமாக காணப்பட்டது. மீன்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சின்னவெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருந்தது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைய ஆரம்பித்தது. எனவே சின்ன வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கியது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென குறைய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது மொத்த விலைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரம் அதிகபட்சமாக ரூ.30-க்கும், இரண்டாவது தரம் ரூ.20-க்கும் விற்பனையாகி வருகிறது.

    இதுதொடர்பாக பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாகவே நடந்து வருகிறது.

    போரூர்:

    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் 15ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இ்ன்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் குவிந்த சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வாழைத்தார் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை அதிகளவில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் சிறப்பு சந்தைகளை கட்டி உள்ளது.

    மேலும் பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் சிறப்பு காய்கறிகளான சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மொச்சைக்காய், வெற்றிலைவள்ளிகிழங்கு, பிடிகருணை கிழங்கு, சிறு கிழங்கு, வாழை இலை, தேங்காய், வாழைத்தார், அரிசி வெல்லம், நெய், பூ மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாகவே நடந்து வருகிறது.

    இதனால் மளிகை, காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டிலும் சில்லரை வியாபாரிகள், மளிகை கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

    சிறப்பு சந்தைக்கு மதுரை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து இன்று 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்துகளும், கும்பகோணம் பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இஞ்சி கொத்துகளும் விற்பனைக்கு வந்துள்ளது.

    15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.450 முதல் ரூ.500வரை விற்கப்படுகிறது, மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரகத்தை பொறுத்து ரூ.300 முதல் ரூ.600, 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு மஞ்சள் கொத்து ரூ.60 முதல் ரூ.80-க்கும், 8 முதல் 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு இஞ்சி கொத்து ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சிறப்பு சந்தை வியாபாரி ஒருவர் கூறுகையில்,

    இன்று அதிகாலை முதல் கரும்பு விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது. மாலை முதல் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    நள்ளிரவு முதல் மேலும் 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிய உள்ளது. இதனால் கரும்பு கட்டுகளின் விலை குறையவே வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது.
    • பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை.

    புதுச்சேரி:

    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட் கிழமை) கொண்டாடப்படுகிறது.

    விழாவில் புதுபானையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இதில் பன்னீர் கரும்பு, மஞ்சள் முக்கிய பொருளாக இடம் பெறும். இதுதவிர சர்க்கரைவள்ளி கிழங்கு, பிடிகரணை, நாட்டு பூசணிக்காய் பொங்கல் படையலில் வைக்கப்படும்.

    பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை. புதுவையையொட்டியுள்ள தமிழக பகுதியான கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, பாலுார், கண்டரகோட்டை, குறிஞ்சிப்பாடி. நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் பன்னீர் கரும்பை வரவழைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள்.

    தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1000 மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

    இதற்காக தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்கிறது விவசாயிகளிடம் கரும்பின் ஒரு உயரத்தை பொருத்து ரூ.36 வரை விலை நிர்ணயித்து பெறப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் தமிழக அரசு அதிகரிகளிடம் பன்னீர் கரும்புகளை விற்பனை செய்துள்ளனர்.

    தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது. இவை உழவர் சந்தை உள்ளிட்ட சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. அங்கு, ஒரு ஜோடி கரும்பு ரூ.150 முதல் 200-க்கு விற்பனையானது.

    பூக்கள் விலையும் அதிகரித்து இருந்தது. சாமந்தி கிலோ ரூ.140 முதல் ரூ.200 வரையிலும், ரோஜா ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. காட்டுமல்லி (காக்கட்டான்) கிலோ ரூ. 700, அலரி பூ கிலோ ரூ. 200-க்கும், அரும்பு கிலோ ரூ. 2000-க்கும், குண்டுமல்லி கிலோ ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதுபோல் மஞ்சள் கொத்தும் விலை அதிகரித்தது. மஞ்சள் கொத்து ஒன்று ரூ.20 முதல் ரூ.40 சர்க்கரை வள்ளி கிழங்கு கிலோ ரூ.50, நாட்டு பூசணிக்காய் கிலோ ரூ.30-க்கு, தேங்காய் ரூ. 15 முதல் ரூ.20-க்கும், முழு வாழை இலை ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கரும்புவரத்து குறைவால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் நாளையும் கூடுதலாக பன்னீர் கரும்புலோடு வரும்போது, விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். 

    • நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி(திங்கட்கிழமை)கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கரும்பு மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் விதமாக மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலை மற்றும் மளிகை மார்க்கெட் வளாகம் என 2 இடங்களாக பிரிக்கப்பட்டு சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் செயல்படும் பொங்கல் சிறப்பு சந்தைக்கு கரும்பு, மஞ்சள் கொத்துக்கள் அதிகஅளவு விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன.

    நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து 6-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்து விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது.

    இதனால் சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்துகளை தங்களது வாகனங்களில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர்.

    நாளை நள்ளிரவு முதல் விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவியும் எனவும், மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் விற்பனை பொருட்களும் ஏராளமான வாகனங்களில் குவியும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இன்று காலை சிறப்பு சந்தையில் 15 கரும்புகள் கொண்ட ஒருகட்டு கரும்பு ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

    இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பொங்கல் பொருட்கள் அனைத்தையும் எளிதாக வாங்கி சென்றிடும் வகையில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.வருகிற 17-ந் தேதி வரை சிறப்பு நடக்க உள்ளது. காய்கறி மற்றும் பழ மார்கெட்டில் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிய பின்னர் மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் செயல்பட்டு வரும் சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

    இதன் மூலம் மார்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும். சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மார்கெட் வளாகத்தில் ஆங்காங்கே பொங்கல் சிறப்பு சந்தை நடக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பதா கைகள் வைக்கப்ப ட்டள்ளன. மேலும் ஒலி பெருக்கி மூலம் சிறப்பு சந்தை பற்றி தகவல் தெரிவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரும்பு, மஞ்சள் குலை விற்கும் பகுதிகளில் மண் பானைகளையும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள்.
    • சென்னையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மண்பானை விற்பனை கடைகள் உள்ளன.

    தை மகளை வரவேற்க மக்கள் தயாராகி வருகிறார்கள்.

    பொங்கல் என்றாலே புதுப்பானை புத்தரிசி, செங்கரும்பு, மஞ்சள் குலை இவைகள் தான் நினைவுக்கு வரும். மண் பானை கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரத்திலும் மக்களிடம் மண் வாசனை மாறாமல் இடம் பிடித்து உள்ளது. சென்னையில் பொங்கல் பண்டிகைக்காக ஏராளமான மண் பானைகள் விற்பனைக்காக வந்து குவிந்து உள்ளன. சென்னையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மண்பானை விற்பனை கடைகள் உள்ளன. இது தவிர தற்காலிக நடை பாதை கடைகளும் இன்னும் ஒன்றிரண்டு நாளில் தொடங்கும்.

    கரும்பு, மஞ்சள் குலை விற்கும் பகுதிகளில் மண் பானைகளையும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். நகர மயமாகிவிட்டாலும் மக்களிடம் பாரம்பரியமான முறையில் மண் பானையில் பொங்கலிடும் ஆர்வம் அதிகம் இருப்பதாக மண் பானைகள் மொத்த விற்பனையாளரான கோடம்பாக்கத்தை சேர்ந்த உஷா கூறினார். இப்போது பள்ளிகளில் பாரம்பரிய விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சுமார் 100 கிராம் பச்சரிசி மற்றும் வெல்லத்தை போட்டு பொங்கல் வைப்பதற்காக சிறிய ரக பானைகள் அதிக அளவில் விற்பனையாவதாக தெரிவித்தார்.

    இந்த பானைகளின் விலை ரூ.50 தான். வர்ணம் பூசாத பானைகள், வர்ணம் பூசப்பட்ட பானைகள் என்று சிறியது முதல் பெரியது வரை அதாவது கால்கிலோ அரிசி முதல் 5 கிலோ அரிசி வரை பொங்கல் வைக்கும் அளவிற்கு பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இதில் 5 கிலோ அரிசியை பொங்கலிடும் வகையிலான வர்ணம் பூசப்பட்ட பெரிய பானையின் விலை ரூ.1500. வர்ணம் பூசப்படாத மண் பானைகள் ரூ.30 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது.

    வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பானைகளை கொள்முதல் செய்து விற்பனைக்கு தயாராக வைத்துள்ளார்கள். மழை குறுக்கிடாவிட்டால் வியாபாரம் களைகட்டும் என்கிறார்கள் வியாபாரிகள்.

    • தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன.
    • வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பு அண்டை மாநிலமான கேரளாவிலும் எதிரொலித்துள்ளது. அங்கு அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக காய்கறிகள் கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு செல்வது குறைந்துள்ளதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் இருந்து செல்லும் முருங்கைக்காய் வரத்து குறைவு காரணமாக கேரளாவில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் இதன் விலை ரூ.90 ஆக இருந்தது.

    பச்சை மிளகாய் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.80 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரம் இஞ்சியின் விலை ரூ.240-ல் இருந்து கிலோ ரூ.140 ஆக குறைந்துள்ளது. வயநாட்டில் இருந்து இஞ்சியின் வரத்து அதிகமாக உள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.

    ஆலப்புழா மார்க்கெட்டுகளுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும் நிலையில் நேற்று 20 லாரிகளே வந்துள்ளன. வரத்து குறைவு மற்றும் திருமண சீசன் காலம் ஆகியவற்றால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.
    • பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும்

    திருப்பதி:

    ஐதராபாத் பிரியாணி பெயரைக் கேட்டாலே ருசிக்க தோன்றும். சுவையான இந்த பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் பிரபல ஓட்டல் நிர்வாகம் ஒன்று தற்போது 3 இடங்களில் புதிய கிளைகளை திறந்தது. இங்கு 2 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது.

    இதனைக் கண்ட அசைவ பிரியர்கள் ஓட்டல் முன்பு குவிந்தனர். அப்போதுதான் ஓட்டல் நிர்வாகம் ஒரு நிபந்தனையை விதித்தது. அது என்னவென்றால் பழைய 2 ரூபாய் நோட்டுகள் தந்தால் மட்டுமே 2 ரூபாய்க்கான பிரியாணி வழங்கப்படும் என தெரிவித்தது.

    இதனை கேட்ட வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சிலர் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பழைய 2 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.

    இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில்:-

    பொதுமக்களிடம் இன்னும் பழைய 2 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த நூதன விற்பனையை தொடங்கினோம். இதுவரை எங்களிடம் 120 ரூபாய் மதிப்பிலான 2 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

    எங்கள் உணவகம் சார்பில் 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகள் கொண்ட பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்.

    இதன் விலை ரூ.1,999 இந்த கட்டணத்தை செலுத்தி 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசை வழங்கி வருகிறோம். இதுவரை இந்த போட்டியில் 7 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அண்ணாமலையார் கோவிலில் இருந்து பார்பதற்காக கோவில் இணைய தளத்தில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது.
    • 10.2 மணிக்கு முடிந்தது. 2 நிமிடத்தில் ஆயிரத்து 700 அனுமதி சீட்டுகளும் விற்று தீர்ந்தன.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஆகியவற்றை அண்ணாமலையார் கோவிலில் இருந்து பார்பதற்காக கோவில் இணைய தளத்தில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு இருந்தது.

    நாளை அதிகாலை ஏற்றப்படும் பரணி தீப தரிசனம் காண 500 ரூபாய் விலையில் 500 அனுமதி சீட்டுகளும், நாளை மாலை அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீப தரிசனம் காண 600 ரூபாய் விலையில் 100 அனுமதி சீட்டுகளும், 500 ரூபாய் விலையில் ஆயிரம் அனுமதி சீட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    இதற்கான முன்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 10.2 மணிக்கு முடிந்தது. 2 நிமிடத்தில் ஆயிரத்து 700 அனுமதி சீட்டுகளும் விற்று தீர்ந்தன.

    இந்த இணையதளத்தில் அனுமதி சீட்டு பெற முயன்ற பெரும்பாலான பக்தர்கள் ஒரு அனுமதி சீட்டினை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

    • கடைகளின் உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    • வணிகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா?

    என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு தஞ்சை அய்யன்கடை தெருவில் உள்ள ஒரு பட்டாணி கடை, வடக்கு வீதியில் உள்ள ஒரு மளிகை கடை, காமராஜர் மார்க்கெட்டில் உள்ள ஒரு மிட்டாய் கடை என 3 கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடி க்கப்பட்டது.

    இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர்.

    தொடர்ந்து போலீசார் அந்தக் கடைகளின் உரிமையா ளர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் மூன்று பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

    இருப்பினும் தொடர்ந்து அந்த மூன்று கடைகளிலும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெற்றது கண்டுபிடிக்க ப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசாருடன் அய்யன் கடை தெருவுக்கு சென்றனர்.

    அங்கு சம்பந்தப்பட்ட பட்டாணி கடைக்கு சென்று அதன் உரிமையாளரான மீனாட்சி என்பவரிடம் நோட்டீஸ் வழங்கி தொடர்ந்து குட்கா பொருள் விற்றதால் உங்கள் கடையை பூட்டி சீல் வைக்கிறோம் எனக் கூறினர்.

    இதையடுத்து பொருட்கள் அனைத்தும் உள்ளே வைக்கப்பட்டு கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    மேலும் வணிகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறினர்.

    தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டிற்கு சென்று மணிகண்டன் என்பவரின் மிட்டாய் கடையையும், வடக்கு வீதியில் உள்ள பஞ்சாபிகேசன் என்பவரின் மளிகை கடையையும் குட்கா விற்றதால் பூட்டி சீல் வைத்தனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் கடைகளில் போதைப்பொ ருட்கள் விற்பனை நடைபெறுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்றைய தினம் தஞ்சையில் தொடர்ந்து குட்கா விற்பனை செய்த மூன்று கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 7 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ள்ளது. 200-க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

    தொடர்ந்து குட்கா விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகள் வணிகம் செய்ய தகுதியற்றது என முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்தடுத்து மூன்று கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • கேசவமூர்த்திக்கு உடல் உறுப்புகளை திருடிவிற்கும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • கேசவ மூர்த்தியை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர், கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27). இவர் சென்னையில் கால்டாக்சி டிரைவராக இருந்தார். நவம்பர் 11ம் தேதி தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த அவர், நவம்பர் 13ம் தேதி சென்னைக்கு புறப்பட்டார். ஆனால் அவர் சென்னை சென்று சேரவில்லை.

    இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், கடைசியாக சோழபுரம் கிழக்குத் தெருவில் உள்ள சித்த மருத்துவர் கேசவமூர்த்தியின் வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது. பின்னர் கேசவ மூர்த்தியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

    ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட கேசவ மூர்த்தி, அசோக் ராஜனுக்கு போதை மருந்துகள் கொடுத்து ஆசைக்கு இணங்க செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து அவரது வீட்டுக்குள் புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    பின்னர் அசோக் ராஜன் உடலை போலீசார் நேற்று முன் தினம் தோண்டி எடுத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    சித்த வைத்தியரான கேசவ மூர்த்தி ஆண்மை குறைபாடு போக்க மருந்து கொடுத்து வந்துள்ளார்.

    இதற்காக அவர் கஞ்சா செடிகள் மற்றும் பலவித மூலிகை இலைகளை கொண்டு பொடி செய்து மாத்திரைகளால் தயாரித்து அவர்களுக்கு கொடுத்து குறிப்பிட்ட தொகையை பெற்று வந்தார்.

    பின்னர் தான் அசோக் ராஜனுக்கு வலை விரித்துள்ளார். சம்பவத்தன்று அவருக்கு சில மருந்துகளை கொடுத்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் உடல் வலி தாங்க முடியாமல் மூச்சடைப்பு ஏற்பட்டு அசோக் ராஜன் மயங்கினார்.

    இதனால் போலீசில் சிக்கி விடுவோம் என கருதிய கேசவ மூர்த்தி அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை ஆடு வெட்டும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டி தோலை உரித்து தனியாக புதைத்துள்ளார். விலா எலும்புகளை உடைத்து நொறுக்கி உள்ளார்.

    பின்னர் அந்த உடலை வீட்டின் கழிப்பறை கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் புதைத்துவிட்டார்.

    இதற்கிடையே சித்த வைத்தியர் கேசவமூர்த்தி கைது செய்யப்பட்ட பின் அவர் கொடுத்த தகவல்படி அசோக் ராஜன் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது உடலில் சில உள் உறுப்புகளை காணவில்லை.

    ஆகவே உள் உறுப்புகளை வெட்டி எடுத்து விற்பனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    கேசவமூர்த்திக்கு உடல் உறுப்புகளை திருடிவிற்கும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆகவே திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கேசவ மூர்த்தியை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கேசவ மூர்த்தியின் டைரியில் 194 பெயர்கள் கொண்ட பட்டியல் இருந்துள்ளது. அதில் பெரும்பாலானோர் அரசியல் பிரமுகர்கள், அவர்கள் பாதிக்கு மேற்பட்டவர்கள் இளைஞர்கள்.

    எனவே டைரியில் இடம்பெற்று இருப்பவர்கள் கேசவமூர்த்தி இடம் சிகிச்சை பெற்றவர்களா? எதற்காக சிகிச்சை பெற்றார்கள் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    எனவே போலீஸ் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டிபுதுக்கோட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    புதுக்கோட்டை  

    புதுக்கோட்டை அருகே உள்ள சிறுவாச்சூர் வாரந்தோறும்  ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். மற்ற நாட்களை விட, தீபாவளி, பொங்கல், பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் ஆடு விற்பனை களைகட்டும். அதன்படி நாளை தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சிக்காக 100க்கும் மேற்பட்ட ஆடுகள் திருச்சி, அரியலூர், கடலூர், தஞ்சாவூர் என பல் வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இச்சந்தை களுக்கு கொண்டு வந்தனர்.  இவற்றை வாங்கி செல்வதற்கு ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.  அவர்கள் போட்டிப்போட்டு வாங்கிதாலும், ஆடுகளின் வரத்து குறைவாக இருந்ததாலும் ஆடுகளின் விலை அதிகரித்தது.  ஒரு நாள் ஆடு விற்பனை ரூ.2 கோடி என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×