search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "S-400 ஏவுகணை"

    இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். #VladimirPutin #RamNathKovind #PutininIndia
    புதுடெல்லி :

    இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில், ரஷியாவுக்கு சிறப்பிடம் உண்டு. இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடந்து வருகிறது.

    அந்த வரிசையில் 19-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். உயர் மட்டக்குழுவினருடன் இந்தியா வந்துள்ள புதின்,  பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது, இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அதேபோல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடைகள் குறித்தும், மோடி மற்றும் புதின் ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்பின் போது ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.36 ஆயிரம் கோடி) மதிப்பிலான இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி கையெழுத்தாகியுள்ளது.  

    இதைத்தொடர்ந்து ராஷ்ட்ரபதி பவன் சென்ற புதின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். இருநாட்டு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது இந்திய- ரஷிய உயரதிகாரிகள் உடனிருந்தனர்.



    ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பிறகு இந்திய பயணத்தை நிறைவு செய்த புதின், புதுடெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றார். #VladimirPutin #RamNathKovind #PutininIndia
    அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி இந்தியா மற்றும் ரஷியா இடையே ராணுவம், விண்வெளி துறைகள் உள்பட சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. #PutininIndia #S-400 #IndiaRussiaDefenceSystem
    புதுடெல்லி :

    இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில், ரஷியாவுக்கு சிறப்பிடம் உண்டு. இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடந்து வருகிறது. அந்த வரிசையில் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார். ரஷ்ய அதிபர் புதினை அரசு மரியாதையுடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.

    இதற்கிடையே, ஐதராபாத் இல்லத்தில் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் மோடி இருவரும் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் ரஷியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்புக்கு பிறகு இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலான சந்திப்பு நடைபெற்றது, அப்போது ராணுவம் மற்றும் விண்வெளி சார்ந்த துறைகளில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    எதிரிநாடுகளின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை சுமார் 400 கிமீ சுற்றளவில் வான்வெளியில் தாக்கி அழிக்கும் வல்லமையுடைய எஸ்- 400 எனும் ஏவுகணைகள் 5 வாங்குவதற்கும், போர் துப்பாக்கி மற்றும் போர் கப்பல்கள் வாங்கவும் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    மேலும், 2022 ஆண்டுக்குள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப இஸ்ரோ தயாராகி வரும் நிலையில் விண்வெளித்துறையில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மற்றும் ரஷியாவில் உள்ள விண்வெளி ஆராய்சி மையத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.



    விண்வெளிக்கு ரஷிய வீரர்களை அனுப்பும் போது அவர்களுடன் இந்திய வீரர் ஒருவரையும் சேர்த்து அனுப்புவது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது ஆலோசனை நடத்தப்பட்டது.

    சைபீரிய எல்லைக்கு அருகே ரஷியாவின் நோவோசிபிர்ஸ்க் நகரில் இந்தியாவின் விண்வெளி கண்காணிப்பு மையம் அமைக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. #PutininIndia #S-400 #IndiaRussiaDefenceSystem
    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் மோடி இருவரும் ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினர். #VladimirPutin #PMModi #S-400
    புதுடெல்லி :

    தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார். ரஷ்ய அதிபர் புதினை அரசு மரியாதையுடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.

    இந்நிலையில், ஐதராபாத் இல்லத்தில் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் மோடி இருவரும் இன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் ரஷியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்பில் இந்தியா ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. குறிப்பாக 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு எஸ்-400 எனும் வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    முன்னதாக ரஷியாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகளின் மீது பொருளாதார தடைவிதிக்கப்படும் என நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் புதின் - மோடி சந்திப்பு சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகிறது. #VladimirPutin #PMModi #S-400
    ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கவும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யவும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு இந்தியா கோரிக்கை வைத்துள்ளது. #S-400 #IndiaRussiaDefenceSystem #IranSanction
    புதுடெல்லி :

    தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடி மற்றும் புதின் இடையிலான சந்திப்பின் போது இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    ஆனால், ரஷியாவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என நட்பு நாடுகளுக்கு அமெரிகா நேற்று எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை இந்தியாவுக்காக நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

    இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் மட்டத்திலான 2+2 சந்திப்பின் போது ரஷியா மற்றும் ஈரான் விவகாரம் தொடர்பாக இந்தியா வலியுறுத்தியது. ஆனால் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என அமெரிக்கா தரப்பில் மழுப்பலான பதில் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தொடர்ந்து அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.



    இந்நிலையில்,  ஈரான் மற்றும் ரஷியா நாடுகளுடனான வர்த்தகத்தை தொடர இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும், என அமெரிக்காவுக்கு இந்தியா மீண்டும்  கோரிக்கை வைத்துள்ளது.  

    இதுதொடர்பாக மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ’இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா இந்தியாவின்  கவலைகளை புரிந்துகொள்ளும் எனும் நம்பிக்கை உள்ளது. ரஷியாவிடம் இருந்து ஏவுகணை எதிர்பு எஸ்-400 ஆயுதங்களை கொள்முதல் செய்யவும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யவும் அமெரிக்கா விதிவிலக்கு வழங்கும்’ என அந்த  அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

    ஒருவேலை இந்தியாவின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் பட்சத்தில் இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான இயற்கையான நட்பில் விரிசல் ஏற்பட்டு அமெரிக்காவின் எதிரி நாடுகளாக கருதப்படும் சீனா மற்றும் ரஷியாவுடன் இன்னும் நெருங்கி பழகும் வாய்ப்பை இந்தியாவுக்கு ஏற்படுத்திவிடும். அது அமெரிக்காவுக்கு எதிரானதாக அமையும் இத்தகைய தவறை அமெரிக்கா செய்யாது எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. #S-400 #IndiaRussiaDefenceSystem #IranSanction
    இந்தியா- ரஷியா இடையே S-400 ஏவுகணைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில் இந்தியாவை மிரட்டும் தொனியில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை எச்சரிக்கை விடுத்துள்ளது. #S-400 #IndiaRussiaDefenceSystem
    வாஷிங்டன் :

    ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இரு நாள் பயணமாக இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார். இருநாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் இந்திய -ரஷிய வருடாந்திர சந்திப்பில் பங்கேற்பதற்காக வருகை தரும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இப்போது 19-ஆவது ஆண்டாக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.

    புதினின் இந்தப் பயணத்தின்போது ரஷியாவிடம் இருந்து எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மதிப்பு ரூ.36,792 கோடியாகும். இந்த ஏவுகணை வாங்கப்பட்டால், சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு வலுவடையும்.

    இது ரஷியாவின் அதிநவீன ஏவுகணையாகும். 400 கி,மீ சுற்றளவில் எதிரி நாட்டு ஏவுகணைகளை வான் வெளியில் இடை மறித்து தாக்கக்கூடிய ஆற்றல் இந்த ஏவுகணைக்கு உள்ளது. இந்த ரக ஏவுகணைகளில் 5 வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

    அவற்றில் இரண்டு பாகிஸ்தான் எல்லைகளிலும், இரண்டு சீன எல்லையிலும் நிலைநிறுத்தி மீதம் உள்ள ஒன்றை தலைநகர் டெல்லியில் நிலை நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது. இதனால் இந்திய பாதுகாப்புத்துறையின் வலிமை மேலும் வலுப்பெரும் என்பது நினைவு கூறத்தக்கது.

    புதின் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பின் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யுரி உசாகோவ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், ரஷியாவிடம் S-400 ஏவுகணைகளை வாங்கினாலும் இந்த தடை விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
     
    இந்தியா ரஷியா இடையே இன்று அல்லது நாளை S-400 ஏவுகணைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில் இந்தியாவை மிரட்டும் தொனியில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா இந்த எச்சரிக்கை விடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

    ஏற்கெனவே ஈரான் மீது விதிக்கப்பட்ட் பொருளாதார தடையினால் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த S-400 ஏவுகணை ஒப்பந்தத்தை எதிர்த்து அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.



    கடந்த 2016-ம் உக்ரைன் மற்றும் கிரிமியாவில் ரஷியாவின் தலையீடு, சிரியாவில் அரசு படைகளுக்கு ரஷியா ஆதரவு அளிப்பது, 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு போன்ற காரணங்களால் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    மேலும், ரஷியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது எனவும் தனது நட்பு நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சீனா சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து Su-35 f என்ற போர் விமானங்களையும், S-400 ஏவுகணைகளையும் வாங்கியது. சீனாவின் நடவடிக்கை அமெரிக்காவுடனான உறவில் விதிமீறும் செயல் என்று சீனாவுக்கு சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது குறிப்பிடத்தக்கது.  #S-400  #IndiaRussiaDefenceSystem 
    ×