search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "run"

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின.
    திண்டுக்கல்:

    மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இன்றும் நாளையும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டது.

    மத்திய அரசு அலுவலகங்களான பி.எஸ்.என்.எல்., தபால்துறை, ரெயில்வே உள்ளிட்ட அலுவலகங்களில் குறைந்த அளவு ஊழியர்களே வந்திருந்தனர். வங்கிகள் செயல்படவில்லை.

    திண்டுக்கல் நகரில் 50-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் அந்த ஆலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் திண்டுக்கல்லில் முழு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அவர்கள் தெரிவிக்கையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்டோக்களுக்கு இலவச ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்படும் என்றார்.

    ஆனால் தற்போதைய தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. இன்சூரன்ஸ் தொகை அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கான மானியம் வழங்கவில்லை. இதனை கண்டித்து இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற உள்ளோம் என்றனர்.

    மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றபோதும் ஒருசில அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் இல்லாமல் மக்கள் பணி பாதிக்கப்பட்டது.

    சேலம், நாமக்கல்லில் பஸ்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் ஓடின. போராட்டத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.#Bharatbandh
    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை வாழப்பாடி, வீரபாண்டி, இளம்பிள்ளை, மேச்சேரி, ஓமலூர், இரும்பாலை, ஆட்டையாம் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் உள்ளூர் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

    அதுபோல் திருச்சி, தர்மபுரி, கரூர், நாமக்கல், மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவே ஓடியது. மற்றபடி வேன், கால்டாக்சி வாகனங்கள் ஓடின.

    சூரமங்கலம் மீன் மார்க்கெட், உழவர் சந்தை, செவ்வாய்ப்பேட்டை, திருமணிமுத்தாறு, வ.உ.சி. மார்க்கெட் திறந்திருந்தன. வழக்கம்போல் பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிச் சென்றனர். பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது.

    நாமக்கல்லில் பஸ்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் இயங்கின. நாமக்கல் நகரில் கறிக்கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவே ஓடியது. மினிவேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கியது.

    மோகனூர், பரமத்திவேலூர், சேந்த மங்கலம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. வேலை நிறுத்த போராட்டத்தினால் நாமக்கல் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #Bharatbandh

    கர்நாடகத்தில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. #BharatBandh
    பெங்களூரு:

    தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக கர்நாடகத்தில் இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெங்களூருவில் இருந்து 2,543 ஊர்களுக்கு வழக்கமாக 3,300 பஸ்கள் இயக்கப்படும்.

    இன்று தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் 1,104 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் ரெயிலும், மெட்ரோ ரெயிலும் இயக்கப்பட்டது.

    வேலைநிறுத்தம்  காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    இதேபோல பெங்களூரு பல்கலைக்கழகம் உள்பட மாநிலத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூரு நகரில் ஆட்டோ, டாக்சிகள் இன்று வழக்கம்போல் ஓடின. தபால் மற்றும் வங்கி அலுவலகங்கள் திறந்து இருந்தாலும் ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதேபோல கர்நாடக அரசு அலுவலகங்கள் திறந்து இருந்தன. ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    வேலை நிறுத்தத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஆதரவு தெரிவித்து இருந்தது. இதனால் இன்று சினிமா ஷூட்டிங் நடைபெறவில்லை.

    கர்நாடக மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இன்று வேலைநிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன.

    பெங்களூரு, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். #BharatBandh
    48 மாணவர்கள் பஸ்சில் இருக்க சாலையில் ஆர்டிஓ அதிகாரிகள் நிற்பதை கண்ட டிரைவர், பஸ்ஸை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டமெடுத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நாதபுரம் என்ற பகுதியில் கடந்த வாரம் 48 பள்ளி மாணவர்கள் சென்ற பஸ்சின் டிரைவர் சாலை ஓரம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிற்பதை கண்டுள்ளார். உடனே, பஸ்சை நிறுத்தி விட்டு மாணவர்களை அப்படியே தவிக்க விட்டு அங்கிருந்து ஓட்டமெடுத்துள்ளார்.

    இதனை அடுத்து, பேருந்தில் இருந்த மாணவர்களை ஆர்டிஓ அதிகாரிகள் வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்துவிட்டு பஸ்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளி நிர்வாகிகள் வந்து பேசிப்பார்த்தும், டிரைவர் வந்தால்தான் பஸ்சை திருப்பி ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    17 பேர் செல்லக்கூடிய சிறிய பஸ்சில் 48 மாணவர்கள் இருந்துள்ளனர். இதனால், அதிகாரிகளை கண்டு பயந்த அந்த டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு ஓடியதாக தெரியவந்துள்ளது. 
    பிரேசிலில் உடல் அழகை மேம்படுத்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் மிகப்பிரபலமான மருத்துவர், பின்னழகை பொலிவூட்ட சிகிச்சை பெற்ற பெண் பலியானதை அடுத்து தலைமறைவாகியுள்ளார்.
    ரியோ டி ஜெனிரோ:

    வெளிநாடுகளில் பெண்கள் தங்களது உடல் அழகை மேம்படுத்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது அதிகமான ஒன்றாக உள்ளது. பிரேசிலை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டேனிஸ் பர்டாடோ இந்த சர்ஜரியில் சிறந்து விளங்கியதால், அவரது கையால் சிகிச்சை பெற பல பெண்கள் வரிசையில் காத்திருப்பார்கள். இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கிலும் டேனிஸ்க்கு ரசிக கூட்டம் அதிகமாகும். 

    இந்நிலையில், 46 வயதுமிக்க பெண் ஒருவர் தனது பின்னழகை பெரிதாக்க டேனிஸிடம் சிகிச்சை பெற வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு டேனிஸ் சில ஊசிகளை போட்டுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த பெண் உயிரிழந்தார். இதனை அடுத்து, டாக்டர் டேனிஸ் ஊரை விட்டு தப்பி ஓடிவிட்டார்.



    அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த செய்தி அவரது கையால் சிகிச்சை பெற காத்திருந்தவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. 
    மத்திய அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்து பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று மதுரை பெண் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
    பெங்களூரு:

    மத்திய அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்து பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று மதுரை பெண் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஜக்கூர் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜக்கூரில் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1997-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. 2013-ம் ஆண்டு மீண்டும் விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி திறக்கப்பட்ட உடன், முதல் ‘பேட்ஜ்’-ல் மதுரையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ரவிக்குமார் என்பவரின் மகளான காவியா (வயது 23) விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி பெறுவதற்காக சேர்ந்தார்.

    கட்டணம் அதிகமாக இருந்ததால், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த காவியா முறையாக பயிற்சி பெறமுடியாத சூழல் இருந்தது. இதையடுத்து 2015-ம் ஆண்டு மத்திய அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்தார். ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் காவியாவுக்கு, மத்திய அரசின் உதவித்தொகை மூலம் விமானம் இயக்குவதற்கான பயிற்சியை தடையின்றி தொடருவதற்கான வாய்ப்பு கிட்டியது.

    மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ், குறிப்பிடத்தகுந்த கல்வி நிலையங்களில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசமாகவும், தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்துக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது. மேலும் பயணிகள் விமானத்தை இயக்குவதற்காக தனியார் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.3.72 லட்சம் உதவித்தொகையாக வருடத்துக்கு வழங்கப்படுகிறது.

    இதுதவிர மாதாந்திர செலவுகளுக்காக ரூ.2 ஆயிரத்து 220, நோட்டு, புத்தகங்கள் வாங்குவதற்காக வருடத்துக்கு ரூ.3 ஆயிரம், நவீன வசதி உடைய கம்ப்யூட்டர் மற்றும் ஒருமுறை உதவியாக ரூ.45 ஆயிரம் ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து 2012-ம் ஆண்டு இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்த காவியா ரூ.20 லட்சம் உதவி பெற்று, ஜக்கூர் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 21 வருடத்துக்கு பின்னர் (1997-ம் ஆண்டு கடைசியாக உரிமம் வழங்கப்பட்டது) பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த பயிற்சிக்கு இடையே, விமான ரேடியோ தொலைபேசி ஆபரேட்டர் உரிமமும் காவியா பெற்றுள்ளார்.

    இதுகுறித்து அரசு விமான பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் கமாண்டர் அமர்ஜித்சிங் டாங்கே கூறும்போது, விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி மீண்டும் திறந்த பின்னர் பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் காவியாவுக்கு கிடைத்துள்ளது. இது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சிறந்த மாணவராக அவர் திகழ்ந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றார்.

    உரிமம் பெற்றது குறித்து விமானி காவியா கூறியதாவது:-

    விமானி ஆகவேண்டும் என்பது என்னுடைய குழந்தை பருவ ஆசை. மதுரையில் 12-ம் வகுப்பு படித்த பின்னர், அரசு விமான பயிற்சி பள்ளியில் சேருவதற்கு விரும்பினேன். ஆனால் அதற்கான கட்டணம் ரூ.25 லட்சம் ஆகும். இதனை என்னுடைய குடும்பத்தால், ஏற்பாடு செய்ய இயலாது. இருந்தபோதிலும் என்னுடைய பெற்றோர், கடுமையான கஷ்டத்துக்கு பின்னர் அங்கும், இங்குமாக ஓடி திரிந்து ரூ.6 லட்சம் கடன் வாங்கினார்கள்.

    இதையடுத்து 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விமானம் இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினேன். ஒரு மணி நேர பயிற்சிக்கு ரூ.10 ஆயிரம் என்பதால் என்னிடம் இருந்த பணத்தை வைத்து 46 மணி நேரமே பயிற்சி மேற்கொள்ளும் நிலை இருந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் என்னுடைய பயிற்சி முழுவதுமாக தடைபட்டது. இதையடுத்து மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்தேன்.

    ஆதிதிராவிட மாணவர்களுக்கு உயர் வகுப்பு கல்விக்காக உதவும் மத்திய திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் உதவித்தொகை கிடைத்தது. இதன்மூலம் எனக்கு 200 மணி நேரம் விமான பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மத்திய அரசு அளித்த உதவித்தொகை என்னுடைய கனவை மீட்டெடுத்தது.

    உதவித்தொகை கிடைத்ததில் இருந்து என்னுடைய வாழ்க்கையை நான் பின்னோக்கி பார்த்தது இல்லை. விமானி ஆகவேண்டும் என்ற என்னுடைய வாழ்நாள் கனவு தற்போது நினைவாகியிருக்கிறது. பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான பணியில் சேருவதில் மிகுந்த ஆர்வம் இல்லை. விமான ஓட்டுனர் பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×