search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.5 LAKH"

    • தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடந்தது.
    • உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று இல்லாமல் இனிப்பு, காரம் தயாரித்து விற்க கூடாது, மீறினால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    சேலம், நவ.2-

    தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடந்தது . இதில் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் 150 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் பேசியதாவது-

    ரூ.5 லட்சம் அபராதம்

    உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று இல்லாமல் இனிப்பு, காரம் தயாரித்து விற்க கூடாது, மீறினால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும், 6 மாத சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. தயாரிப்பு விற்பனை கூடம் புகை, தூசு, பிற அசுத்தங்கள் இன்றி சுகாதாரமாக அமைந்திருக்க வேண்டும், உணவு தயாரிப்பு பாத்திரங்கள், உபகரணங்கள் சிதிலம டையாமலும், சுத்த மாக கழுவி உலர்த்த வேண்டும், உணவு மூலப்பொருட்களை தரையில் பரப்பி வைக்க கூடாது,

    பலகையின் மீது மூடி வைத்திருப்பது கட்டாயம், பொட்டல மிட்ட தரமான எண்ணை, நெய் பயன்ப டுத்துவதோடு அதனை திரும்ப திரும்ப பயன்படுத்த கூடாது, கிப்ட் பாக்ஸ் மீது லேபிள் விதிமுறையை பின்பற்ற வேண்டும், ஸ்டிக்கர், துண்டு சீட்டு ஒட்ட கூடாது, உணவு பொருட்களை கையாளும் அனைவரும் மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும், எந்த காரணத்தை கொண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், அச்சிடப்பட்ட தாட்களை பயன்படுத்த கூடாது.

    சட்ட நடவடிக்கை

    குறிப்பாக ஒவ்வொரு இனிப்பு , காரம் மீதும் அதன் 14 விவரங்கள் அடங்கிய சீட்டு இடம்பெற வேண்டும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தி குறைகள், தவறுகள் கண்டறிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • ரூ.5 லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
    • தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்யப்பட்ட காலணிகள்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் கணேஷ்(வயது 45) என்பவர் காலணி, ஷூக்கள் மற்றும் பேக்குகள் வியாபாரம் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்யப்பட்ட காலணிகள் மற்றும் ஷூக்கள், பேக்குகள் மாடி அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் திடீரென தீப்பற்றி, கரும் புகையாக புகைந்து, புகைமூட்டம் வந்ததை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து கணேசனிடம் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் உள்ளிட்ட குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    • வீடு எரிந்து ரூ.5 லட்சம் பொருட்கள் நாசமானது
    • மின்கசிவு காரணமாக நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபாலபுரம் கிராமத்தில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான வீடு நேற்று மின் கசிவு காரணமாக முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது.

    மணமேல்குடி தாலுகா கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது62), இவரது மனைவி பேச்சி இவர்களுக்கு மகன் மாரிமுத்து, மகள்கள் கல்பனா, சித்திரா ஆகியோர் உள்ளனர். பிள்ளைகள் 3 பேருக்கும் திருமணமான நிலையில், ஒரே வீட்டில் குறுக்கே சுவர் வைத்து மகன் ஒரு பகுதியிலும், காளிமுத்து குடும்பம் ஒரு பகுதியிலும் வாழ்ந்து வந்துள்ளனர்.

    விவசாயக் கூலி வேலை பார்க்கும் இவர்கள் அருகே உள்ள வயல்காட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதே போன்று லாரி ஓட்டுனரான மகன் மாரிமுத்து வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக ஜெகதாப்பட்டினம் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாகவே தீ மளமளவென பரவி வீடு முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது. தீ விபத்தில் 11 சவரன் நகை, 70 ஆயிரம் ரொக்கப்பணம், தொலைக்காட்சிப்பெட்டி, சலவை எந்திரம் உள்ளிட்ட 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளது. சம்பவம் குறித்து நாகுடி காவல்த்து றையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×