search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royal Challengers Bangalore"

    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ் #IPL2019 #DCvRCB
    ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் தவான் (50), ஷ்ரேயாஸ் அய்யர் (52), ரூதர்போர்டு (13 பந்தில் 28 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களம் இறங்கியது. விராட் கோலி நிதானமாக விளையாட பார்தீவ் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    அணியின் ஸ்கோர் 5.5 ஓவரில் 63 ரன்னாக இருக்கும்போது பார்தீவ் பட்டேல் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் 17 ரனனில் ஆட்டமிழந்தார்.



    ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்ததும் ஆர்சிபி-யின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. அதன்பின் வந்த டுபே 16 பந்தில் 24 ரன்கள் அடித்தார். இவரையும், கிளாசனையும் அமித் மிஸ்ரா ஒரே ஓவரில் வீழ்த்தினார். அத்துடன் ஆர்சிபி தோல்வி உறுதியானது.

    கடைசி 7 ஓவரில் 77 ரன்கள் வேண்டும் நிலையில் குர்கீரத் சிங் மான், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அணியின் வெற்றிக்காக போரடினார்கள். இசாந்த சர்மா வீசிய 17-வது ஓவரில் 16 ரன்கள் அடித்தனர். இதனால் சற்று நம்பிக்கை இருந்தது. ஆனால் ரபாடா 18-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி இரண்டு ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது.



    இசாந்த் சர்மா வீசிய 19-வது ஓவரில் குர்கீரத் மான் சிங் 19 பந்தில் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் இசாந்த் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    ரபாடா வீசிய கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்த ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 வெற்றிகளுடன் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது.
    வேடிக்கையாக விளையாடிதான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியதாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #KXIP #RCB #ViratKohli
    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாபை மீண்டும் வீழ்த்தியது.

    பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது.

    டிவில்லியர்ஸ் 44 பந்தில் 82 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 34 பந்தில் 46 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), பார்த்தீவ் படேல் 24 பந்தில் 43 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது சமி, விஜோயன்ஸ், கேப்டன் அஸ்வின், முருகன் அஸ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 17 ரன்னில் வெற்றி பெற்றது.

    நிக்கோலஸ் பூரன் 28 பந்தில் 46 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), ராகுல் 27 பந்தில் 42 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, ஸ்டோன்ஸ், மொய்ன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.



    பெங்களூர் அணி பெற்ற 4-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்று அந்த அணி வாய்ப்பில் நீடித்து வருகிறது. வெற்றி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    எங்களது ஒரே நோக்கம் அணிக்காக சிறப்பாக விளையாடுவது தான். தொடர்ச்சியாக 6 ஆட்டத்தில் தோற்றது உண்மையிலேயே காயத்தை ஏற்படுத்தி விட்டது. இது எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பே. வேறு எந்த அணியும் இதே மாதிரி 6 ஆட்டங்களில் தொடர்ந்து தோற்றது இல்லை. கடைசியாக ஆடிய 5 ஆட்டத்தில் நான்கில் வென்றுள்ளோம். 5 ஆட்டத்திலும் வென்று இருந்தால் மகிழ்ச்சியுடன் இருந்து இருப்போம். வேடிக்கையாக விளையாடிதான் இந்த ஆட்டத்தில் வென்றோம். நாங்கள் எந்தவித நெருக்கடியிலும் ஆடவில்லை. எப்படி ஆட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KXIP #RCB #ViratKohli
    விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #RCBvsKXIP

    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் 42-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணிவெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. தோற்றால் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.

    பஞ்சாப் அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததால் பெங்களூர் அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்த அணி பஞ்சாப்பை மீண்டும் தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    பெங்களூர் அணியில் கேப்டன் விராட்கோலி (387 ரன்), டிவில்லியர்ஸ் (332 ரன்), பார்த்தீவ் படேல் (283 ரன்), மொய்ன் அலி (216 ரன்), யசுவேந்திர சாஹல் (14 விக்கெட்) ஸ்டெய்ன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி ராஜஸ்தான் ராயல்சை 2 முறையும் (14 ரன், 12 ரன்) மும்பை (8 விக்கெட்), டெல்லி (14 ரன்), ஐதராபாத் (6 விக்கெட்) ஆகியவற்றை ஒரு முறையும் வீழ்த்தியது. கொல்கத்தா (28 ரன்), சென்னை (22 ரன்), மும்பை (3 விக்கெட்), பெங்களூர் (8 விக்கெட்), டெல்லி (5 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.

    பெங்களூர் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் பஞ்சாப் அணி இருக்கிறது.

    பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல் (423 ரன்), லோகேஷ் ராகுல் (399 ரன்), அகர்வால் (227 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் முகமது ‌ஷமி (13 விக்கெட்), கேப்டன் அஸ்வின் (11 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2019 #RCBvsKXIP

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் டோனி பயத்தை காட்டி விட்டார் என விராட் கோலி கூறியுள்ளார். #IPL2019 #RCBvsCSK
    பெங்களூரு:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது.

    சேப்பாக்கத்தில் ஏற்கனவே தோற்றதற்கு அந்த அணி பதிலடி கொடுத்தது. பெங்களூரு அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.

    வெற்றி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    இந்த போட்டி முழுவதும் உணர்ச்சிகளால் நிரம்பி இருந்தது. 19-வது ஓவர் வரை பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்.

    கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அதுபோல் நடந்துவிட்டது. ஒரு ரன் வித்தியாசத்தில் போட்டியில் வென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    கடைசி ஓவரில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமோ அதை டோனி செய்துவிட்டார். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்கள் ஒட்டு மொத்த அணிக்கும் மிகப்பெரிய பயத்தை காட்டி விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார். #IPL2019 #RCBvsCSK
    மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் 19-வது ஓவரை நெகிக்கு கொடுத்தது சரியான முடிவு தான் என பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #IPL2019 #viratkohli
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்தது. டிவில்லியர்ஸ் 75 ரன்னும், மொய்ன் அலி 50 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய மும்பை 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து வென்றது.

    மும்பை அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 22 ரன் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. பவன் நெகி வீசிய 19-வது ஓவரில் ஹர்த்திக் பாண்டியா 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 22 ரன் எடுத்து வெற்றிபெற வைத்தார்.

    தோல்வி குறித்து பெங்களூர் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    கடைசி கட்டத்தில் மும்பை அணியில் இரண்டு வலது கை பேட்ஸ்மேன் களத்தில் இருந்தனர். பனிப் பொழிவு காரணமாக வேகப் பந்து வீச்சை பயன்படுத்துவது என்பது அபாய தேர்வாக இருந்தது. அதனால் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பவன் நெகியை தேர்வு செய்தோம்.

    ஆனால் துரதிருஷ்டவசமாக சிறப்பானதாக அமையவில்லை. நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால் பந்துவீச்சில் முதல் 6 ஓவரில் 65 ரன் விட்டுக் கொடுத்துவிட்டோம். அதில் இருந்து மீண்டு வருவது எப்போதுமே கடினமானது.

    இவ்வாறு அவர் கூறினார். #IPL2019 #viratkohli
    வான்கடே மைதானத்தில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றனர். #MIvsRCB #IPL2019
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியின் 31-வது ‘லீக்’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பெங்களூர் (6 ரன்), சென்னை (37 ரன்), ஐதராபாத் (40 ரன்), பஞ்சாப் (3 விக்கெட்) ஆகியவற்றை வென்று இருந்தது. டெல்லி (37 ரன்), பஞ்சாப் (8 விக்கெட்), ராஜஸ்தான் (4 விக்கெட்) ஆகிய அணியிடம் தோற்றது.

    பெங்களூர் அணியை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் குயின்டன் டி காக் (238 ரன்), பொல்லார்ட் (185 ரன்), கேப்டன் ரோகித்சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் பந்து வீச்சில் பும்ரா (8 விக்கெட்), அல்ஜாரி ஜோசப் (6 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பாண்டியா சகோதரர்கள் ஆல்ரவுண்டு வரிசையில் ஜொலிக்க கூடியவர்கள்.

    பெங்களூர் அணி தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் (சென்னை, மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி) தோல்வியை சந்தித்தது. பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. 1 வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    சொந்த மண்ணில் மும்பையிடம் 6 ரன்னில் தோற்றதற்கு பழிதீர்த்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் பெங்களூர் அணி இருக்கிறது.

    சொந்த மண்ணில் அந்த அணி வெற்றி அருகே வந்து வாய்ப்பை இழந்தது. இந்த ஆட்டத்தின் போது நடுவரின் செயல் பெங்களூருக்கு பாதகமாக இருந்தது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் வெற்றியை பெற கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். கோலி இரண்டு அரை சதத்துடன் 270 ரன்னும், டிவில்லியர்ஸ் 232 ரன்னும் (3 அரை சதம்) எடுத்துள்ளனர். பார்த்தீவ் பட்டேல் 191 ரன் எடுத்து உள்ளார்.

    சுழற்பந்து வீரர் யசுவேந்திர சஹாலை மட்டுமே அந்த அணி அதிகமாக நம்பி இருக்கிறது. அவர் 11 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஸ்டோனிஸ் ஆல் ரவுண்டர் வரிசையில் கை கொடுக்க கூடியவர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2019 #MIvsRCB
    விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. #RCBvsMI
    பெங்களூர்:

    ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியின் 7-வது ‘லீக்‘ ஆட்டம் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் தொடக்க ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தன. பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்கிசிடமும், மும்பை அணி 37 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்சிடமும் தோற்றது. இதனால் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இரு அணிகளும் உள்ளன.

    பெங்களூர் அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் திகழும் கோலி, டிவில்லியர்சை பொறுத்துதான் அந்த அணியின் ரன் குவிப்பு இருக்கிறது. பந்து வீச்சில் சாஹல் நல்ல நிலையில் உள்ளார். மும்பை அணியில் கேப்டன் ரோகித்சர்மா, சூர்யகுமார் யாதவ், யுவராஜ்சிங், போல்லார்ட், குர்ணல் பாண்டியா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். #RCBvsMI
    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #VIVOIPL #RCBvSRH

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பார்தீவ் பட்டேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பார்தீவ் பட்டேல் 1 ரன்னிலும், விராட் கோலி 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

    அடுத்து டி வில்லியர்ஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்கள். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ஓவரில் முடிவில் 144 ரன்கள் குவித்திருந்தது. ரஷித் கான் வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் டி வில்லியர்ஸும், 4-வது பந்தில் மொயீன் அலியும் ஆட்டமிழந்தனர்.



    டி வில்லியர்ஸ் 36 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்களும், மொயீன் அலி 34 பந்தில் 2 பண்டரி, 6 சிக்சருடன் 65 ரன்களும் குவித்தனர். 

    அடுத்து வந்த கொலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி 17 பந்தில் ஒரு பவண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்களும், சர்பராஸ் கான் 8 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 22 ரன்களும் குவிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபத்திற்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். ஐதராபாத் அணி பந்துவீச்சில் ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். 2-வது ஓவரை சவுத்தி வீச அந்த ஓவரில் தவான், ஹேல்ஸ் இருவரும் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். ஐதராபாத் அணி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.

    5-வது ஓவரை சஹால் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் தவான் ஆட்டமிழந்தார். அவர் 18 ரன்கள் எடுத்தார். மோயின் அலி வீசிய 8-வது ஓவரின் கடைசி பந்தை ஹேல்ஸ் தூக்கி அடித்தார். அந்த பந்து சிக்ஸர் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பவுண்டரி கோட்டில் நின்று கொண்டிருந்த டி வில்லியர்ஸ் அந்த பந்தை கேட்ச் பிடித்தார். இதனால் ஹேல்ஸ் 24 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 



    வில்லியம்சனின் சிறப்பான ஆட்டத்தால் ஐதராபாத் அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 28 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து வில்லியம்சன், மணிஷ் பாண்டே இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்தனர். இதனால் ஐதராபாத் அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிய மணிஷ் பாண்டேவும் அரைசதம் கடந்தார்.

    17-வது ஓவரை வீசிய சவுத்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 18-வது ஓவரை மொகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணி 14 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி இரண்டு ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சவுத்தி வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணி 15 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.



    கடைசி ஓவரை சிராஜ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்கினார். இறுதியில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. 

    இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டது.  பெங்களூரு அணியின் டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #IPL2018 #VIVOIPL #RCBvSRH
    ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.#IPL2018 #RCBvSRH #RCB #SRH
    பெங்களூர்:

    ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 5 அணிகள் உள்ளன. டெல்லி அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது.

    51-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்க இயலும். தோல்வி அடைந்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    பெங்களூர் அணி வாய்ப்பில் நீடிக்குமா? வெளியேறுமா? என்று இன்றைய ஆட்டத்தில் தெரிய வரும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிபடுத்துவார்கள். பஞ்சாப்புக்கு எதிராக அந்த அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.

    ஐதராபாத் அணியிடம் ஏற்கனவே 5 ரன்னில் தோற்று இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது.

    சொந்த மண்ணில் விளையாடுவதால் நம்பிக்கையுடன் இருக்கிறது. கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், உமேஷ் யாதவ், யசுவேந்திர சாஹல் ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐதராபாத் அணி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த அணி பெங்களூரை வீழ்த்தி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத் அணியின் தொடர் வெற்றிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆட்டத்தில் முற்றுப் புள்ளி வைத்தது. இதனால் மீண்டும் வெற்றி வேட்கையில் அந்த அணி உள்ளது.

    ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன், தவான், யூசுப் பதான், மனிஷ் பாண்டே, ரஷ்த்தாரி, புவனேஷ்வர்குமார் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.#IPL2018 #RCBvSRH #RCB #SRH
    வாழ்வா? சாவா? என்ற நிலையில் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் எங்களுடைய தார்மீக மந்திரம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். #IPL2018 #ViratKohli #RCB
    ஐபிஎல் 11-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 8 அணிகளும் 12 போட்டிகளில் விளையாடிவிட்டன. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஒன்று எனக் கருதப்பட்டது. ஆனால் முதல் 10 போட்டிகளில் 7-ல் தோல்வியடைந்து மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருந்தது.

    இதனால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற கேள்வி எழுந்தது. கடைசி நான்கு போட்டியில் வெற்றி பெற்றால் ஒருவேளை வாய்ப்புள்ளது. இதனால் கடைசி நான்கு போட்டிகளும் அந்த அணிக்கு வாழ்வா? சாவா? என்பதுதான். இதில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று பாதி கிணற்றை தாண்டியுள்ளது.



    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குப்பின், இந்த தொடரில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதே எங்களுடைய தார்மீக மந்திரம் என விராட் கோலி கூறியுள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் இழப்பிற்கு ஒன்றுமில்லை. இது எங்களுக்கு நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது. மற்ற அணிகள் ஒரு அணிக்கெதிராக எச்சரிக்கையுடன் செல்லும். நாங்கள் அப்படிபட்ட நிலையில் சென்று கொண்டிருக்கவில்லை. நாங்கள் அடுத்த போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தினால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டம் மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும். அடுத்த போட்டிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. இந்த இடைவெளியை சந்தோசமாக கழிக்க விரும்புகிறோம்’’ என்றார்.
    டிவில்லியர்சுடன் இணைந்து பேட் செய்வதை எப்போதும் விரும்புவதாகவும் அவருடன் ஆடுவது எனக்கு கிடைத்த கவுரவம் எனவும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.#IPL2018 #RCB #ABD #ViratKohli
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. ரிஷாப் பான்ட் 61 ரன்களும், அபிஷேக் ஷர்மா 46 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி (70 ரன், 40 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), டிவில்லியர்ஸ் (72 ரன், 37 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர், நாட்-அவுட்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 19-வது ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது.

    வெற்றிக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இறுதிகட்டத்தில் நாங்கள் பந்து வீசிய விதம் திருப்தி அளிக்கவில்லை. ஆட்டத்தின் இடைவேளையின் போது டிவில்லியர்ஸ் என்னிடம், ‘கவலைப்படாதீர்கள் கோலி, நாம் இலக்கை அடைந்து விடுவோம்’ என்று கூறினார். அவரது வார்த்தை எனக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.



    டிவில்லியர்சுடன் இணைந்து பேட் செய்வதை எப்போதும் விரும்புகிறேன். இருவரும் இணைந்து பல முறை நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்திருக்கிறோம். அவருடன் ஆடுவது எனக்கு கிடைத்த கவுரவமாகும். ரன்ரேட்டை அதிகப்படுத்தி கொள்ள 3 ஓவர் மிச்சம் வைத்து வெற்றி பெற விரும்பினோம். அது நடக்காவிட்டாலும் 2 புள்ளி பெற்றது முக்கியமானது’ என்றார்.#IPL2018 #RCB #ABD #ViratKohli
    ×