search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roof"

    • இடைவிடாது விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மரம் சாலையின் குறுக்கே விழுந்ததுடன் எதிரே இருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்திலும் மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது.‌

    இரவு 8 மணி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

    பின்னர் 10 மணி அளவில் சாரல் பெய்தது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரி த்தது. கன மழையாக கொட்டி பெய்ய தொடங்கி யது.

    தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது மழை பெய்தது.

    அதனைத் தொடர்ந்து இடி - மின்னல் அடித்து கொண்டே இருந்தது.

    பின்னர் சில மணி நேரம் மழை தெறித்தது. மீண்டும் அதிகாலையில் லேசான மழை பெய்தது.

    இடைவிடாது விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கனமழை காரணமாக எம்.கே. மூப்பனார் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    இரவு நேரம் என்ப தால் அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக அச ம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறவில்லை.

    இருந்தாலும் மரம் சாலையின் குறுக்கே விழுந்ததுடன் எதிரே இருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது.

    அதில் பெட்டிகடையின் முன்பு தகரத்தால் போடப்பட்ட மேற்கூரை சேதம டைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

    இதேபோல் பூதலூர் ,வல்லம், திருவையாறு ,மதுக்கூர், ஒரத்தநாடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது.

    இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இருந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ) :-

    தஞ்சாவூர் -31, வல்லம்-31, குருங்குளம்-21, மதுக்கூர்-17.20, நெய்வாசல் தென்பாதி-12.80, பூதலூர்-8.40.

    • மேற்கூரை, ஸ்லாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காரைகள் பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
    • குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வெளி ப்பாளையம் அருகே காடம்பாடியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2010-11 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது. ஒப்பந்தக்காரர் மூலம் கட்டப்பட்ட இக்கட்டிடம் தரமாக கட்டப்பட்டதா? என்ற கேள்வி எழுந்து உள்ள நிலையில் இக்கட்டிடம் மேற்கூரை மற்றும் ஸ்லாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காரைகள் பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    இங்கு 5 வயதுக்குட்பட்ட 37 குழந்தைகள்படித்து வருகின்றனர். குழந்தை களின் பாதுகாப்பு கேள்வி க்குறியாகி உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் அரசும் உடனடி யாக நடவடிக்கை எடுத்து விபத்து நடக்கும் முன்பாக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • வீட்டின் உள்ளே இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலையில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது.
    • அன்பழகிக்கு கையில் பலத்த காயம் மற்றும் அவரது மகள் விஜயகுமாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் மேலத் தெருவில் வசித்து வருபவர் அன்பழகி(வயது48). இவர் கணவனை இழந்து தனது மாற்றுத்திறனாளி பெண் விஜயகுமாரியுடன் வசித்து வருகிறார் .இவர்கள் 1990-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்திரா நினைவு குடியிருப்பு காலனியில் உள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் உள்ளே இருவரும் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலையில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

    இதில் அன்பழகிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல் மகள் விஜயகுமாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு திரண்டு தாய், மகள் இருவரையும் மீட்டு உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார், வருவாய் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வீடு சேதமடைந்த நிலையில் மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்தது தெரியவந்தது.இந்திரா நினைவு குடியிருப்பு காலனியில் உள்ள தொகுப்பு வீடுகள் சேதமடைந்து உள்ளதாக அங்கு வசிப்பவர்கள் கூறினர். எனவே அரசு சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காவிரி டெல்டா பகுதிக்கு தேவையானவிதைநெல் உற்பத்தி திருப்பூரில் நடக்கிறது.
    • 20 இடங்களில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.

    குடிமங்கலம்,

    திருப்பூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் முத்தூர், வெள்ளகோவில், குட்டப்பாளையம், கீரனூர், குடிமங்கலம், மடத்துக்குளம், ருத்ராபாளையம் பகுதிகளில் திறக்கப்பட்டன.அதற்கு பிறகு அலங்கியம் உட்பட தாராபுரம் தாலுகாவில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.

    காவிரி டெல்டா பகுதிக்கு தேவையானவிதைநெல் உற்பத்தி திருப்பூரில் நடக்கிறது. விதை நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்கின்றன. மற்ற நெல்லை நுகர்வோர் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது.இந்தாண்டு சன்ன ரகம் நெல் கிலோ 21.65 ரூபாய், மோட்டா ரகம் 21.15 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது .ஆன்லைன்பதிவில் சுணக்கம் ஏற்பட்டதால்விவசாயிகள்தனியார் வியாபாரிகளுக்கு கிலோ 13 முதல் 15 ரூபாய்க்கு நெல்லை வழங்கினர். ஆன்லைன் பதிவில் சுணக்கம் ஏற்பட்டதால் சில நாட்கள் காத்திருந்த பிறகே நெல் மூட்டைகளை வழங்க முடிந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் போதிய மேற்கூரை வசதியில்லை. மாறாக திறந்தவெளி களத்தில் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. பாலிதீன் சாக்குகளால் மூடி வைத்து பாதுகாத்தனர்.அப்படியிருந்தும் எதிர்பாராத திடீர் மழையால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமாகின. எனவே நிரந்தரமான மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகரனிடம் கேட்டபோது, திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வசதிக்கு தகுந்தபடி 20 இடங்களில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இறுதியாக ருத்ராபாளையத்தில் இன்னும் கொள்முதல் நடந்து வருகிறது.இதுவரை21 ஆயிரத்து 102 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. போதிய பாலிதீன் சாக்குகளால் மூடப்பட்டிருந்ததால் மழையால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

    உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவை காட்டிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆன்லைன் பதிவால் காலதாமதம் ஏற்பட்டது. நெல் கொள்முதல் மையங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதமாகின்றன. வேலை உறுதி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் கூடுதலாகநெல் மூட்டைகள் அடுக்கும் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் அமைக்கலாம். கிடங்குகள் விரைவில் நிரம்பிவிட்டால் வெட்ட வெளியில் மூட்டைகள் அடுக்கப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நெல் இருப்பு மையங்களை படிப்படியாக அமைத்து வைக்க வேண்டும்என்றார்.

    உக்ரைனில் தானே தயாரித்த பாராசூட்டை பரிசோதிக்க 14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Jump #Stunt #Homemade #Ukraine #Parachute
    கீவ்:

    உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கீவ்கா நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் வகையில் வித்தியாசமான சாகசத்தில் ஈடுபட முடிவு செய்தான்.

    இதற்காக அவன் வீட்டிலேயே பாராசூட் ஒன்றை தயார் செய்தான். பின்னர் அந்த பாராசூட்டை பரிசோதித்து பார்க்க முடிவு செய்த சிறுவன் வீட்டின் அருகே உள்ள 14 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்றான்.

    சிறுவனின் சாகசத்தை பார்க்க அவனது தாய், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு குவிந்தனர். அவர்கள் அனைவரும் சிறுவனை உற்சாகப்படுத்தியதோடு, பலர் அங்கு நடப்பதை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதனால் உற்சாகம் அடைந்த அந்த சிறுவன் தனது இரு கைகளையும் உயர்த்தி காட்டியபடி, மாடியில் இருந்து கீழே குதித்தான்.

    பின்னர் அவன் தனது பாராசூட்டை இயக்கினான். அந்த பாராசூட் சரியான நேரத்தில் விரிந்த போதிலும், முறையாக இயங்கவில்லை. இதனால் சிறுவன் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான். தன் கண் முன்னே மகன் கீழே விழுந்து உயிர் இழந்ததை கண்டு அவனது தாய் அதிர்ச்சியில் உறைந்தார்.

    சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், “அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் சிறுவனின் விபரீத முயற்சியை தடுக்கவில்லை. மாறாக அவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்” என வேதனையுடன் தெரிவித்தார்.

    சிறுவன் பாராசூட்டை முறையாக தயார் செய்யாததால் இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் முறையாக தயார் செய்யப்பட்ட பாராசூட்டை பயன்படுத்தி இருந்தாலும் கூட சிறுவன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  #Jump #Stunt #Homemade #Ukraine #Parachute
    காங்கயத்தில் வீட்டின் மேற்கூரையில் ஏறி வேலை பார்த்த தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் சேசுமாணிக்கம் (வயது 40). இவரது நண்பர் ஜெயசீலன் (46). இருவரும் தொழிலாளர்கள். இவர்கள் காங்கயத்தில் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். வீட்டின் மேற்கூரையில் ஏறி பிரித்து கொண்டிருந்தனர். அப்போது மேற்கூரை சிமெண்டு கூரை திடீரென சரிந்தது. இதில் தொழிலாளர்கள் இருவரும் மேலே இருந்து தவறி கீழே விழுந்தனர். படுகாயத்துடன் துடித்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயசீலன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் படுகாயத்துடன் சேர்க்கப்பட்ட அவரது நண்பர் சேசு மாணிக்கத்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிதாப சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் காங்கயம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×