search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roadside vendors"

    • முடி திருத்துவோர், வீட்டு வேலை செய்வோர் உள்ளிட்டோர் இதில் பதியலாம்.
    • வழிகாட்டுதலை மத்திய அரசு வகுக்க வேண்டியது, அவசியமாகியுள்ளது.

    திருப்பூர் :

    அமைப்பு சாரா தொழிலாளர் மேம்பாட்டிற்காக, இ - ஷ்ராம் எனப்படும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தை, மத்திய தொழிலாளர் நலத்துறை செயல்படுத்துகிறது.வருமான வரி செலுத்தாத, பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பங்களிப்பு இல்லாத ஊழியர்கள், தொழிலாளர்களை இத்தளத்தில் பதிவு செய்வதே இதன் நோக்கம்.அந்தந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மற்றும் பரிந்துரை அடிப்படையில், 16 முதல் 59 வயதுக்குட்பட்ட துப்புரவு, தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள், விவசாயம், கட்டுமானம், கைத்தறி, தச்சு, சிற்பம், கட்டட தொழிலாளி, பெயின்டர் உள்ளிட்ட கூலித் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், வீட்டு வேலை செய்வோர் உள்ளிட்டோர் இதில் பதியலாம்.

    ஆங்காங்கே உள்ள பொது சேவை மையங்கள் மூலமும் தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆங்காங்கே நடத்தப்படும் சிறப்பு முகாம் மூலமும் இ-ஷ்ராம் தளத்தில், பயனாளிகள் இணைக்கப்படுகின்றனர்.அவர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட சில சேவைகள் வழங்கப்பட உள்ளன. இதில் சாலையோர வியாபாரிகளை திட்டத்தில் இணைப்பதில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் ஏற்கனவே, சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பின் சாலையோர வியாபாரிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.குறிப்பாக, பிரதான சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமானோர் சாலையோர கடைகளை அமைத்துள்ளனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல், விபத்து கூட நேரிடுகிறது.இவர்களை இ-ஷ்ராம் தளத்தில் இணைப்பதா, அப்படி இணைத்தால் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு துணை போனதாக சர்ச்சை எழுமே என்ற குழப்பம் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பலர் மத்திய அரசின் சலுகைகளை பெறும் நோக்கில், தவறான தகவல் அளித்து போலியாக சாலையோர வியாபாரிகளாக தங்களை இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களால் அனுமதிக்கப்பட்ட வியாபாரிகளை மட்டும், இ-ஷ்ராம் திட்டத்தில் இணைப்பதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு வகுக்க வேண்டியது, அவசியமாகியுள்ளது என்றனர்.

    • போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் சாலையோரம் பழங்களை வியாபாரம் செய்து வருகிறோம்.
    • அரசு அதிகாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது, உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலன் திருப்பூர் மாவட்ட வருவாய்த்துைற அதிகாரியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் திருப்பூர்பல்லடம் ரோடு தெற்கு உழவர்சந்தை அருகே சாலையோரம் காலை 4மணி முதல் 8மணி வரை பழங்களை விற்பனை செய்து வருகிறோம். ேபாக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த 29-6-2022 அன்று அரசு அதிகாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது, உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர். உழவர்சந்தைக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள சில தனியார் கடை உரிமையாளர்கள் நாங்கள் காலை 9மணிக்கு மேல்தான் திறப்போம். அதுவரை கடைவாசலில் வியாபாரம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்பேரில் வியாபாரம் செய்து வந்த நிலையில் சாலையோர கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி உள்ளது.

    இதனால் சிறு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  

    ×