search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rishabh Punth"

    • சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்தார்.
    • மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    பர்மிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா-சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற நிலையில் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விகாரி 20 ரன்னுக்கும், விராட் கோலி 11 ரன்னில்  ஆட்டமிழந்தனர்.

    ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர்  ரிஷப் பண்ட்டும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். பின்னர் தொடர்ந்து பண்ட்-ஜடேஜா ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

    அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடித்தார். ஜடேஜா அரைச்சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 60 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் அடித்திருந்தது.

    ×