search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "residence"

    • அரசு சார்பில் மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.
    • ஒரே வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லாத்துபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி முருகேசன் - கலாவதி. முருகேசன் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 20 வயதில் சக்திவேல் என்ற மகன் உள்ளார். இதனிடையே பிறந்தது முதல் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சக்திவேலுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில் ,அரசு சார்பில் மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.

    இந்தநிலையில் மகனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தொடர்ந்து ஒரே வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு வழங்க கூறி மனு அளித்த நிலையில் அதிகாரிகள் ஒரு லட்சம் வரை கட்ட கூறியுள்ளனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மகனின் வாழ்க்கையையும், குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு தங்களுக்கு அரசு சார்பில் இடம் வழங்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

    • தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் பள்ளி முன்பு நாள்கணக்கில் குப்பை, இறைச்சி கழிவுகள் தேங்கி கிடக்கின்றன.
    • இதனால் மாணவ-மாணவிகள், அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் புறவழிச்சாலை முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை உள்ளது. 1350 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், ஊழிய ர்கள் என 300 பேர் பணிபுரிகின்றனர்.

    இந்நிலையில் இந்த பள்ளி அருகே சிலர் குப்பைகளையும், இறைச்சி கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் பள்ளி முன்பு நாள்கணக்கில் குப்பை, இறைச்சி கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. அதில் இருந்து புழு, கொசுக்கள் உற்பத்தி ஆவதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது. மேலும் குப்பைகளை நாய்கள் அங்கும் இங்குமாக பரப்பிவிட்டு செல்கிறது. இதனால் பள்ளி முன்பு குப்பை கூடங்களாக காட்சியளிக்கிறது.

    இதனால் மாணவ-மாணவிகள், அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர். குப்பை கள், இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும், தேங்கி உ ள்ளவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகம், பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே மாணவ- மாணவிகள் நலன் கருதி உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.

    • சமூக விரோதிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர்.
    • தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் சமூக விரோதிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர்.

    அவர்கள் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. மேலும் தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது. முக்கிய பகுதிகளில் அவர்கள் திரிவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிஎஸ்என்எல். குடியிருப்பு பகுதி சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி வெளியே வருகிறது.
    • குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது

    உடுமலை :

    உடுமலை பழனி ரோட்டில் பிஎஸ்என்எல். குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி வெளியே வருகிறது. மேலும் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

    இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு நடக்கவே மிகவும் சிரமப்படுகின்றனர். குடியிருப்பு பகுதியை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அப்புறப்படுத்தியும் குப்பைகளை வெளியேற்றியும் இந்தப் பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    எஸ்.கைகாட்டியில் கூண்டில் சிக்காத கரடிகள் குடியிருப்புக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டியில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகள் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிகின்றன. மேலும், அந்த பகுதியில் உள்ள பேக்கரி கதவை 3 முறை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை தின்றுவிட்டு பொருட்களை சேதப்படுத்திவிட்டு சென்றன.

    வனத்துறையினர் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும் தொடர்ந்து அந்த கரடிகள் குடியிருப்புக்குள் நடமாடி வந்தன. கடந்த வாரம் கக்குளா மாரியம்மன் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்தன.

    இதையடுத்து கரடிகளை பிடிக்க கோவில் வளாகத்தில் வனத்துறையினர் கடந்த 19-ந் தேதி கூண்டு வைத்தனர். அதில் ஒரு கரடி மட்டும் சிக்கியது. மற்ற 2 கரடிகளும் கூண்டில் சிக்காமல் அந்த கூண்டை சுற்றி சுற்றி வந்ததுடன் ஆக்ரோஷத்துடன் சத்தம் போட்டன. இதை அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து 2 கரடிகளை விரட்டினர். பின்னர் கூண்டில் சிக்கிய கரடியை அவலாஞ்சி வனப்பகுதியில் விட்டனர்.

    இந்த நிலையில் கூண்டில் சிக்காத மற்ற 2 கரடிகளும் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றித்திரிகின்றன. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகள் சண்டையிட்டு கொள்கின்றன. கரடிகளின் தொடர் அட்டகாசத்தால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    எனவே வனத்துறையினர் விரைந்து அந்த கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    பூச்சிஅத்திப்பேட்டில் குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புகொடி கட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    பெரிய பாளையம்:

    வெங்கல் அருகே உள்ளது பூச்சி அத்திப்பேடு கிராமம். இந்த ஊராட்சியில் சுமார் மூவாயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் சுமார் ஆயிரத்து 152 வீடுகள் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய் மற்றும் சென்னைக்குச் செல்லும் குடிநீர் மாசுபடும் என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

    மேலும் கட்டிடம் கட்டும் இடத்தை தங்கள் பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனை வலியுறுத்தி கடந்த மாதம் 11-ம் தேதி கிராம மக்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தை நடத்திய ஊத்துக்கோட்டை தாசில்தார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இருப்பினும்,கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ரவி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரசன்ன வெங்கடாஜலபதி தலைமையில் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள்,வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்

    பீகார் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதை கண்டித்து முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டின் முன்னர் காங்கிரஸ் இளைஞர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #YouthCongress #BiharCM #NitishKumar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் பெருகி வருகின்றன.

    காவல்துறையை தனது முக்கிய இலாகாவாக வைத்திருக்கும் முதல் மந்திரி நிதிஷ்குமார், அதிகரித்துவரும் இந்த குற்றங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

    இந்நிலையில், அம்மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டின் முன்னர் இன்று காங்கிரஸ் இளைஞர் அணியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். முதல் மந்திரியை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதிஷ்குமார் வீட்டை நோக்கி முன்னேறி சென்றனர்.



    போலீசார் லேசான தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்களை கட்டுப்படுத்தி தடுக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. #YouthCongress #BiharCM #NitishKumar
    நிதிஷ்குமார் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். #NitishKumar
    பாட்னா:

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கிறார். இதனால் அவருக்கு எப்போதும் பலத்து பாதுகாப்பு வசதி அளிக்கப்பட்டு உள்ளது. அவரது அலுவலக வீடு பாட்னாவில் உள்ள எண்.1 அனெய் மார்க் பகுதியில் உள்ளது. அவரது வீட்டில் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கும். தற்போது கட்சி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அவர் டெல்லி சென்று உள்ளார்.

    இந்த நிலையில் பீகார் மாநில சிறப்பு போலீஸ் அதிகாரி முதல்-மந்திரி நிதிஷ்குமார் வீட்டில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்றார். அப்போது முதல்-மந்திரி வீட்டில் இருந்த போலீசாரின் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். #NitishKumar #tamilnews
    முலாயம் சிங், அகிலேஷ் யாதவை தொடர்ந்து உ.பி. முன்னாள் முதல் மந்திரி மாயாவதி தான் வசித்து வந்த அரசு பங்களாவை விட்டு இன்று மாலை வெளியேறினார். #Mayawati #residence
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் கடந்த சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை கடந்த 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதனை அடுத்து, முன்னாள் முதல்வர்கள் 15 நாட்களில் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.

    பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மற்றொரு வீடு கிடைப்பது கடினம் என்பதால் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோர் மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், மாநில அரசு அதற்கு பதிலளிக்காத நிலையில், இன்று இருவரும் இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

    அரசு பதவிகளில் இல்லாதவர்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளை உடனடியாக காலி செய்தாக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்தது.

    இதையடுத்து, அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தங்களது அரசு வீடுகளை இன்று காலை காலி செய்தனர். மிக முக்கியமான பிரமுகர்கள் (VVIP) தங்கும் அரசு விருந்தினர் விடுதியில் அவர்கள் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

    இதைதொடர்ந்து, முன்னாள் முதல் மந்திரி மாயாவதியும் 13-ம் எண் கொண்ட மால் அவென்யூ அரசு பங்களாவை விட்டு இன்று மாலை வெளியேறினார். அந்த வீட்டை மறைந்த தலைவர் கன்சிராமின் நினைவு இல்லமாக ஆக்கிவிட்டதாக முன்னர் குறிப்பிட்டிருந்த மாயாவதி, அங்கிருந்து வெளியேறியதற்கான கடிதத்தை நினைவு இல்ல பொறுப்பாளரிடம் அளித்தார். அந்த வீட்டை பாதுகாக்கும் பொறுப்பு இனி மாநில அரசை சேர்ந்தது என தெரிவித்துள்ளார். #Mayawati #residence
    டெல்லியின் முக்கிய பகுதிகளை கண்காணிக்க சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில் நாளை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறுகிறது. #CCTVscam #congress #Kejriwal
    புதுடெல்லி:

    பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த திட்டத்துக்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். 

    இந்நிலையில், சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில்  மெழுகு வர்த்திகளை ஏந்தி ஊர்வலமாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறுகிறது. 

    அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நடைபெறும் இந்த போராட்டத்துக்கான அறிவிப்பை டெல்லி காங்கிரஸ் பிரமுகர்கள் அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் ஹாரூன் யூசுப் இன்று மாலை வெளியிட்டனர்.

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் தலமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் காங்கிரசார் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எங்களது குற்றச்சாட்டு பொய் என்றால் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கள்மீது மான நஷ்ட வழக்கு தொடரட்டும் எனவும் அவர்கள் சவால் விட்டுள்ளனர். #CCTVscam #congress #Kejriwal
    ×