search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "refugees"

    • ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கான வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இந்த குழுவில்உறுப்பினராக உள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர்ஊராட்சியில்முகாம் வாழ் தமிழர்களுக்கான குடியிருப்புகள் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது.

    கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊரணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை

    மேம்படுத்துவதற்கெனஅரசுத்துறைகளுடன் தனியார் தொண்டு நிறுவனங்களின்

    பங்களிப்புடன் ஆய்வு மேற்கொண்டு, அதனை ஆலோசனைக் குழுவின் மூலம் பரிசீலித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இந்த குழுவில்உறுப்பினராக உள்ளார்.

    சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களைச் சார்ந்த 3,242 பேர் உள்ளனர். அதில் ஒக்கூர்ஊராட்சியில் 236 குடும்பங்களுக்கு புதிதாக ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும், 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடியில் 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் கட்டித்தர தமிழக அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த பணிகளை ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், இன்றையதினம் முகாம் வாழ் தமிழர்களுக்கானகுடியிருப்புக்கள்கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 5 பகுதிகளிலும் மொத்தம் 372 வீடுகள் கட்டித்தரவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மானா–மதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளாபாலச்சந்திரன், ஊரக வளர்ச்சி

    துறை செயற்பொறி யாளர் சிவராணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், சாந்தாசகாயராணி, ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமாஅருணாசலம், சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதசுந்தரம், ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இலங்கையில் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், பாகிஸ்தான் அகதிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். #srilankablasts #Pakistanrefugees

    கொழும்பு:

    இலங்கையில் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், பயங்கரவாதிகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் முஸ்லிம்களை தாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

    இலங்கையில் நிகொம்பாவில் செயின்ட் செபாஸ்டின் தேவாலயம் உள்ளது. இங்கும் குண்டு வெடிப்பு நடந்தது. அதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அவர்களுடைய உடல் அடக்கம் ஒரே இடத்தில் நடந்தது.


    நிகொம்பாவின் புறநகர் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் 400 குடும்பத்தினர் தங்கி உள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுவதற்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கிறார்கள். அவர்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நிகொம்பாவில் இறந்தவர்கள் அடக்கம் முடிந்ததும் 100-க்கும் மேற்பட்டோர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தானியர்கள் தங்கி இருந்த பகுதிக்கு வந்தனர்.

    இதனால் பயந்துபோன அவர்கள் வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தனர். அப்போது ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ஆண்களை இழுத்து வந்து தாக்கினார்கள். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி இந்த தாக்குதல் நடந்தது.

    இதற்கு தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பி நிகொம்பா போலீஸ் நிலையத்திற்கு ஓடினார்கள். போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தும் அவர்கள் மீது தாக்குதல் நடந்தது. அதன் பிறகு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் அமைதி திரும்பியது.

    ஆனாலும் உயிருக்கு பயந்து 60-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நிகொம்பா போலீஸ் நிலையத்திலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், இது சம்பந்தமாக மனித உரிமை கமி‌ஷன் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முஸ்லிம் இளைஞர் அமைப்பின் தலைவர் நவாஸ்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதேபோல முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் முஸ்லிம்கள் வெளியே வர பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அங்கு தாக்குதல் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #srilankablasts #Pakistanrefugees

    தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்குள் அதிக அகதிகள் வருவதாக மக்களவையில் மத்திய இணை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியது அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கியது. #MonsoonSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் அகதிகள் தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு பதிலளித்து பேசினார். தனது பேச்சில், “வங்கதேசம், மியான்மர், தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அகதிகள் வருகிறார்கள்” என்று கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

    தமிழகம் இந்தியாவில் இருக்கிறது, தமிழக்தில் இருந்து அகதிகள் இந்தியாவுக்குள் எப்படி நுழைய முடியும் என்று அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் எம்.பி.க்கள் கோஷமிட்டு, கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து, நான் இலங்கையில் இருந்து அகதிகள் என்று கூறுவதற்கு பதிலாக, தமிழ்நாடு என்று வாய்தவறி கூறிவிட்டேன் என்று ரிஜிஜு கூறினார். ஆனால், அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட்டு, உறுப்பினர்களை அமைதிப்படுத்தி, தவறுதலாக மந்திரி அவ்வாறு பேசிவிட்டார் அமைதியாக அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
    ரோகிங்கியா அகதிகளின் துயரங்களை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் யுனிசெப் தூதரான பிரியங்கா சோப்ரா இன்று வங்கதேசத்தில் உள்ள அகதிகளை சந்தித்தார். #PriyankaChopra #PriyankaMetRohingyas
    டாக்கா:

    நடிகையும் யுனிசெப் நல்லெண்ண தூதருமான பிரியங்கா சோப்ரா, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மியான்மரில் இருந்து வந்துள்ள ரோகிங்கியா அகதிகள் தங்கியிருக்கும் காக்ஸ் பஜார் முகாம்களுக்கு பிரியங்கா சோப்ரா இன்று சென்று அகதிகளை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார். அப்போது மிகப்பெரிய மனிதநேய உதவிகளை செய்து வரும் வங்காளதேச அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    இந்த சந்திப்பின்போது ‘வங்காளதேசத்திடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும்’ என பிரியங்கா சோப்ரா கூறியதாக பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

    குறிப்பாக, கட்டாயத்தின்பேரில் இடம்பெயர்ந்து வந்துள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான மியான்மர் சிறுபான்மை இன மக்களின் சுமையை ஏற்றுள்ள ஹசீனாவை பிரியங்கா சோப்ரா வெகுவாகப் பாராட்டியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு கூடுதல் செயலாளர் தெரிவித்தார்.

    ரோகிங்கியா முகாம்களுக்கு பிரியங்கா சோப்ரா சென்று அகதிகளுடன் கலந்துரையாடுவது இது இரண்டாவது முறையாகும். #PriyankaChopra #PriyankaMetRohingyas
    ×