search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rava Recipes"

    • தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காலை உணவு இட்லி.
    • இன்று ரவா இட்லி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ரவா - 1 கப்

    நெய் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    தயிர் - 1/4 கப்

    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

    தேவையான அளவு - உப்பு

    பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு- 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை

    முந்திரிப் பருப்பு - 10

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி - 1 சிறிய துண்டு

    செய்முறை :

    ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு கலவையை தனியே வைக்கவும்.

    ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் ரவை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.

    வறுத்த ரவையுடன் தாளித்த கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும்.

    அதனுடன் தயிர், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

    20 நிமிடங்கள் கழித்து இட்லித் தட்டில் மாவை ஊற்றி 10 முதல் 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.

    இப்போது சுவையான ரவா இட்லி தயார்.

    • இது சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்ல காலை உணவு.
    • சம்பா கோதுமை ரவையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை ரவை - 1 கப்

    பாசி பருப்பு - அரை கப்

    உப்பு - சுவைக்கு

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    தண்ணீர் - 3 கப்

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    தாளிக்க :

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    நெய் - 3 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    இஞ்சி - 1 துண்டு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    முந்திரி - 6

    செய்முறை :

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசி பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் குக்கரில் போட்டு 3/4 தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும்.

    அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்துக்கொள்ளுங்கள். சற்று வாசனை வரும் அப்போது வேக வைத்த பாசி பருப்புடன் ரவையை சேர்த்து கிளறுங்கள்.

    பின் 3 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். குக்கரை மூடி விடுங்கள். 2-3 விசில் வரும் வரைக் காத்திருங்கள்.

    விசில் வந்ததும் குக்கரை திறந்து சூடு பதத்திலேயே கிளறுங்கள்.

    தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பொங்கலில் கொட்டி கிளறுங்கள்.

    அவ்வளவுதான் சம்பா கோதுமை ரவை வெண் பொங்கல் தயார்.

    • வித்தியாசமான உணவுகளை செய்து தந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
    • இன்று ரவையை வைத்து சுவையான மசாலா தோசை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ரவை - 150 கிராம்

    தயிர் - அரை கப்

    உருளைக்கிழங்கு 2

    வெங்காயம் - 2

    பச்சைமிளகாய் - 2

    தக்காளி - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    சோம்பு - தாளிக்க

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    ரவையில் தயிர் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    அதன்பின் அதனை மிக்ஸியில் போட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

    இந்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.

    அதன்பின் மசித்து வைத்துள்ள உப்பு, உருளைக்கிழங்கை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பின்பு கொத்தமல்லி தூவி இறக்கி ஆற விடவும்.

    இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் செய்து வைத்த மசாலாவை தோசையின் நடுவில் வைத்து உருட்டி சதுரமாகவோ அல்லது நீளவாக்கிலோ மடித்து எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும்.

    இப்பொழுது சூப்பரான ரவா மசாலா தோசை ரெடி.

    தீபாவளி அன்று ஆரோக்கியமான இனிப்பு வகைகளை செய்து, சுவைத்து கொண்டாடுவோம். அந்த வகையில் இன்று கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை ரவை - 50 கிராம்
    தேங்காய் துருவல் - அரை கப்
    கருப்பட்டி - முக்கால் கப்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு
    சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
    ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
    காய்ச்சிய பால் - ஒரு தம்ளர்
    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வாணலியில் நெய்விட்டு உருகியதும், முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே வாணலியில், கோதுமை ரவை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    ரவை வறுப்பட்டதும் 4 கப் வெந்நீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டியுடன், தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.

    கோதுமை ரவை நன்றாக வெந்ததும், கருப்பட்டி ஜீரா சேரத்து கிளறிவிடவும்.

    கோதுமை ரவையுடன், கருப்பட்டி சேர்ந்து வெந்ததும் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி, வறுத்து வைத்த முந்திரி கலவையை சேர்க்கவும்.

    இறுதியாக, பால் சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும்.

    சுவையான கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் ரெடி..!.

    இதையும் படிக்கலாம்...தீபாவளி ஸ்பெஷல்: பாதாம் பர்ஃபி
    ஹோட்டலில் ரவா ரோஸ்ட் செய்வது போலவே வீட்டிலேயும் எளிய முறையில் செய்யலாம். இன்று வீட்டில் ரவா ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப்
    அரிசி மாவு - 1 1/2 கப்
    மைதா மாவு - 4 டேபிள் ஸ்பூன்
    கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 5
    முந்திரி - 15



    செய்முறை :

    கொத்தமல்லி, முந்திரி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும். மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

    தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.

    சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான ரவா ரோஸ்ட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த ரவா பக்கோடாவை ஸ்நாக்ஸ் அல்லது டிபனாக செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவா - 2 கப்
    கடலை மாவு - 1/2 கப்
    அரிசிமாவு - 1/4 கப்
    வெங்காயம் - 2
    பச்சைமிளகாய்-  4
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையானது



    செய்முறை :

    ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த ரவை, கடலைமாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து முதலில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து மாவில் போட்டு பிசறி
    பின்னர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..

    அடுப்பில் எண்ணெய் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.

    பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

    சூப்பரான ரவா பக்கோடா ரெடி.

    பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்ற மாலை டிபன் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை மற்றும் மாலை நேரங்களில் சாப்பிட ரவா கிச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - ஒரு கப்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 2,
    பச்சைப் பட்டாணி - அரை கப்,
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
    தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்,
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
    பட்டை - சிறு துண்டு,
    கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று,
    நெய், எண்ணெய், உப்பு - சிறிதளவு.



    செய்முறை :

    ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும்.

    தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி, 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.

    சூப்பரான ஸ்பைசி ரவா கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×