search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration"

    • ரேசன் கடை கட்டும் கட்டிட பணி ெதாடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஒன்றிய தலைவர் ஜே.பி.ரவிச்சந்திரன் ரேசன் கடை கட்டும் கட்டிட பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஜமீன் இளம்பள்ளி ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையத்தில் ரேசன் கடை கட்டும் கட்டிட பணி ெதாடங்கி நடைபெற்று வருகிறது. அதுபோல் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கபிலர்மலை ஒன்றிய தலைவர் ஜே.பி.ரவிச்சந்தி ரன், நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு வருகிறார் . அதேபோல் ஜமீன் இளம் பள்ளி ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் ரேசன் கடை கட்டும் கட்டிட பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். அப்போது ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

    • ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.
    • அப்போது அங்குள்ள ரைஸ் மில்லில் 280 மூட்டைகளில் சுமார் 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பூலாவரி லட்சுமனூர் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் டி.எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி குடிமைப் பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் பூலாவரி லட்சுமனூர் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ரைஸ் மில்லில் 280 மூட்டைகளில் சுமார் 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மில் உரிமையாளர் செந்தில்குமார் (வயது 42)போலீசார் வருவதைக் கண்டு தப்பி ஓடிவிட்டார், இதை யடுத்து அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொ) விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரில் வீட்டில் அருகில் இருந்த செந்தில்குமாரை கைது செய்தனர். 

    • சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிச்சான் பட்டியில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.
    • முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் பெரிதும் அவதி அடைந்தனர்.

    சுரண்டை:

    வீ.கே.புதூர் தாலுகா குறிச்சான்பட்டி பஞ்சாயத் தில் அமைந்த கரையாளனூர் பொது மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிச்சான் பட்டியில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் பெரிதும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இருவரின் முயற்சியின் பேரில், கரையாளனூரில் வியாழக்கிழமை தோறும் பகுதி நேர ரேஷன் கடை இயங்க அரசு அனுமதி அளித்து, அதற்கான தொடக்க விழா நடந்தது.


    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் பொருளாளரும், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலருமான முரளிராஜா, ஆலங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிச்சான் பட்டி பஞ்சாயத்து தலைவர் மகர ஜோதி சரவணன் வரவேற்றார். தொடர்ந்து கரையாளனூர் கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை பழனிநாடார் எம்.எல்ஏ. திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

    பகுதிநேர ரேஷன் கடை அமைக்க, கடை வழங்கிய கரையாளனூர் சண்முக வேலுவிற்கு அனைவரும் பொது மக்களின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.தொடர்ந்து பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் கரையா ளனூர் முருகன்,வக்கீல் ராமச் சந்திரன், குறிச்சான்பட்டி தி.மு.க. செயலாளர் துரைசாமி, விவசாய அணி ஜெயராஜ், இளைஞர் அணி திருமலைக்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கரையாளனூர் சண்முகவேலு செய்து இருந்தார்.

    • ரேசன் அரிசி கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மீனாம்பாள்புரம் ரேசன் கடையில் அரிசி கடத்திய தாக மேற்கண்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை செல்லூர் மீனா ம்பாள்புரம் ரேசன் கடையில் மர்ம கும்பல் லாரியில் அரிசி நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் மண்டல ரேசன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார்.

    மற்ற 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் செல்லூர் பிரபு (வயது 45), காமராஜர் சாலை அருண்ராஜ் (27), முருகன் 42), இன்னொரு முருகன் (30), ஜெயமுத்து மகன் பெரியசாமி (22) என்பது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து மீனாம்பாள்புரம் ரேசன் கடையில் அரிசி கடத்திய தாக மேற்கண்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் நிறுத்தப்ப ட்டு இருந்த சிறிய ரக சரக்கு ஆட்டோவில் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அதில் 1800 கிலோ எடை உடைய 36 மூடைகள் ரேஷன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. அவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

    செல்லூர் மீனாம்பாள் புரம் ரேசன் கடையில் பரவையை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். எனவே போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஜார்கண்டில் ரே‌ஷன் பொருள் கிடைக்காததால் 2 பேர் பட்டினியால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Rationcard #Ration

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள மகாயத்தினார் கிராமத்தை சேர்ந்தவர் காலேஸ்வர் சோரன்(45).

    இவர் சாப்பிட உணவின்றி பட்டினியாக இருந்ததால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து உண்மை கண்டறியும் குழுவினர் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது, அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரே‌ஷன் பொருட்கள் கிடைக்காததால் பட்டினி கிடந்து இறந்தது உறுதி செய்யப்பட்டது.

    காலேஸ்வர் சோரன் தனது ஆதார்கார்டு நம்பரை ரே‌ஷன் கார்டில் சேர்க்காததால் கடந்த 2016-ம் ஆண்டு அவரது ரே‌ஷன் கார்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் அவரது குடும்பத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை.

     


    இதனால் தனது குடும்பத்துக்கு சொந்தமான விவசாய விளை நிலங்களை அடமானம் வைத்தார். ஒரு ஜோடி காளை மாடுகளை விற்று செலவு செய்தார். அவரது 2 மகன்களும் ராஜஸ்தான் சென்று கடந்த 2 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகின்றனர்.

    தனது தந்தை இறந்ததை அறிந்தும் கூட அவர்களால் வர முடியவில்லை. இந்த தகவலை உண்மை கண்டறியும் குழுவை சேர்ந்த சிராஜ்தத்தா தெரிவித்தார்.

    இவரை போன்று மேலும் ஒரு பெண் பட்டினியால் மரணம் அடைந்து இருக்கிறார். அவரது பெயர் சீதா தேவி (75). இவர் இதே பகுதியில் உள்ள கும்ளா என்ற இடத்தை சேர்ந்தவர்.

    காலேஸ்வர் சோரனும், சீதா தேவியும் கடந்த 25 நாட்களில் பட்டினியால் மரணம் அடைந்துள்ளனர். ஜார்கண்டில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து 17 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக உணவு உரிமை பிரசார இயக்கத்தின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.#Rationcard #Ration

    ×