search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rashmika Mandanna"

    • நடிகை ராஷ்மிகா ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது.


    ராஷ்மிகா மந்தனா

    இவர் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அமிதாப் பச்சனுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'குட் பை' திரைப்படம் அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ராஷ்மிகா மந்தனா

    இந்நிலையில், நடிகர் கார்த்தி இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விரைவில் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இரண்டாவது வாரம் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களில் கவனத்தை ராஷ்மிகா ஈர்த்தார்.
    • சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

    தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது.

     

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

    தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

     

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

    இந்நிலையில் படங்களில் நடிக்க தனது சம்பளத்தை ராஷ்மிகா உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே புஷ்பா படத்தில் நடிக்க ரூ.1 கோடி வாங்கிய அவர் தற்போது புஷ்பா 2-ம் பாகத்தில் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொகையை படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொடுக்க சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ராஷ்மிகா இந்தி படங்களில் நடிப்பதால் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட் படங்களில் ராஷ்மிகாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ள இயக்குனர்கள் குழப்பத்தில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களில் கவனத்தை ராஷ்மிகா ஈர்த்தார்.
    • சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

    தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார். அவர் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் தனது செல்ல நாய் குட்டிக்கும் விமானத்தில் செல்வதற்கு டிக்கெட் போடும்படி கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளியானது.

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

    இந்த செய்தி நேரடியாக ராஷ்மிகாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவல் குறித்து அவர் சமூக வலைத்தளத்தின் வழியே பதிலளித்துள்ளார். அட கடவுளே!! எனது அன்பு செல்வங்கள் அனைத்தும் இதுபோன்ற விசயங்களுக்கு இலக்காவது கண்டு நான் ஆச்சரியம் அடைகிறேன்.

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

    ஆரா (ராஷ்மிகாவின் செல்ல நாயின் பெயர்)என்னுடன் பயணம் செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால் கூட.. அது என்னுடன் பயணிக்க விரும்பவில்லை..ஆரா ஐதராபாத்தில் மகிழ்ச்சியுடன் உள்ளது. உங்கள் கவலைக்கு எனது நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா, தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அமிதாப் பச்சன் நடிக்கும் குட்பை என்ற படத்திற்கான படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதுதவிர, ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். சித்தார்த் மல்கோத்ராவின் மிஷன் மஞ்சு படத்திலும் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்படித்தக்கது.

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #SK17 #Sivakarthikeyan #RashmikaMandanna
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது கதாநாயகியை முடிவு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.



    பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் கதநாயகியாக அறிமுகமாகும் ராஷ்மிகா இந்தப் படத்தில் விரைவில் இணைய உள்ளதாக செய்தி வந்தது. படக்குழுவோ திரைக்கதை பணிகள் இன்னும் முடியவில்லை.

    அதன் பின்னர்தான் நாயகி பற்றி அறிவிப்பு வரும் என்கிறது. படம் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இதற்கு முன் வேறொரு கதையை அவரிடம் கூறினேன். அப்போது மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். நானும் வேறு படங்களில் பிசியாகிவிட்டேன். தற்போது எல்லாம் ஒன்றுசேர்ந்து வந்துள்ளது” என்று கூறியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #SK17 #Sivakarthikeyan #RashmikaMandanna

    பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி - ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Karthi #K19
    மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்து வரும் கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.

    எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக உருவாகும் இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா தமிழில் அறிமுகமாகிறார். யோகி பாபு, பொன்னம்பலம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர்.


    விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது. #K19 #Karthi #Karthi19 #RashmikaMandanna

    லோகேஷ் கனகராஜ் படத்தை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. #Karthi #K19
    கார்த்தி நடித்த தேவ் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கார்த்தி தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.



    கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிப்பதாக முன்னதாக கூறியிருந்த நிலையில், தற்போது படக்குழு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்கவிருக்கும் நிலையில், படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். #K19 #Karthi #Karthi19 #RashmikaMandanna

    கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தானா, தமிழில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Karthi #RashmikaMandanna
    கார்த்தி நடித்த தேவ் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கார்த்தி தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கார்த்தி ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.



    தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். அவர் விஜய் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாவதாக சில சில வதந்திகள் பரவிய நிலையில், ராஷ்மிகா கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Karthi #RashmikaMandanna #BaghyarajKannan

    கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தானா, கன்னடப் படம் ஒன்றிற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியிருக்கிறார். #RashmikaMandanna
    தமிழ், தெலுங்கு திரையுலகை விட குறைவான மார்கெட்டை கொண்டது கன்னட திரையுலகம். நடிகர், நடிகைகளின் சம்பளமும் மற்ற திரையுலகை விட அங்கு குறைவாகவே இருக்கும். 2010-ஆம் ஆண்டு ‘சூப்பர்’ படத்தில் நடித்ததற்காக நயன்தாரா பெற்றதே கன்னடத் திரையுலகில் ஒரு நடிகையின் அதிகபட்ச சம்பளமாக இருந்தது.

    அதன்பின் ஏமி ஜாக்சன் ‘தி வில்லன்’ படத்திற்காக பெற்ற தொகை கன்னட நடிகைகளை வியப்பில் ஆழ்த்தியது. தற்போது ராஷ்மிகாவின் மேல் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியுள்ளது. 2016-ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படமான கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தானா. முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதும் அடுத்தடுத்து இரு கன்னட படங்களில் நடித்தார். நாக சவுரியா உடன் இணைந்து நடித்த சலோ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

    தெலுங்கின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படத்திலும் அவர் நடித்த கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. தெலுங்கு, கன்னடம் என இரு மொழிகளிலும் முக்கியமான படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா தற்போது கன்னடத்தில் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘பொகரு’.



    துருவா சர்ஜா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நடிப்பதற்காக ராஷ்மிகாவுக்கு 64 லட்சம் ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே கன்னடப் படம் ஒன்றிற்காக ஒரு நடிகை பெறும் அதிக பட்ச சம்பளமாகும். ராஷ்மிகா விஜய்-அட்லீ இணையும் படத்தில் நாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள். #RashmikaMandanna

    `கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தானாவுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருவதால் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #RashmikaMandanna
    ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் பிரபலமான கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் வசூலும் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது.

    இதையடுத்து ராஷ்மிகாவின் மார்கெட்டும் எகிறத் தொடங்கியது. தற்போது அவருக்கு தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணமாக உள்ளது. இந்த நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்த ராஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ராஷ்மிகாவும், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் ‘கிரிக் பார்ட்டி’ படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. பல மாதங்கள் ஆகியும் திருமணம் நடக்கவில்லை. திருமணத்தில் ராஷ்மிகா ஆர்வம் இல்லாமல் இருந்தார். இருவரும் பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை அவர்கள் மறுத்து வந்தார்கள்.



    இந்த நிலையில் திருமணத்தை ராஷ்மிகா நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது நெருங்கிய உறவினர்கள் இதனை உறுதிப்படுத்தி உள்ளனர். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ராஷ்மிகாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதனால் ராஷ்மிகா - ரக்‌ஷித் ஷெட்டி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதுவே திருமணத்தை ரத்து செய்ய காரணம் என்று கூறுகிறார்கள். இவர்களை சேர்த்து வைக்க இருவீட்டு உறவினர்களும் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்து விட்டது என்கின்றனர். பெற்றோர்களுடன் கலந்து பேசி அவர்கள் சம்மதத்துடன் ராஷ்மிகா திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. #RashmikaMandanna #GeethaGovindam

    ×