search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain"

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணைமூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. நேற்று 511 கனஅடியாக இருந்த நீர்திறப்பு இன்று காலை 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    இதனால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. அணைக்கு 618 கனஅடிநீர் வருகிறது. அணையின்நீர்மட்டம் 138.70 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. 1098 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1169 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 99.03 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
    • மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 572.90 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது வளமான மழை அளவான 111.6 மில்லி மீட்டர் விட 413.4 சதவீதம் கூடுதல் ஆகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வாலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதே சமயத்தில் 47.11 சதவீதம் தண்ணீர் இருந்தது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 255 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன.

    விற்பனை மையத்தில் உள்ள 1,456 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்ட தரம் குறைந்த விதைகள் 36.58 மெட்ரிக் டன் கண்டறியப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.41.56 லட்சம் ஆகும்.

    நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் பெய்த அதிக கனமழையில் 19 ஆயிரத்து 306.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் 192 குளங்களும், 142 கால்வாய்களும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளால் உடைப்பு ஏற்பட்ட குளங்களை ரூ.19 கோடி மதிப்பீட்டில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது.
    • பயிற்சியில் வீரர்கள் மட்டுமன்றி பயிற்சியாளர் டிராவிட் உள்பட பீல்டிங் பயிற்சியாளரும் கலந்து கொண்டனர்.

    மொகாலி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் கடும் குளிரில் பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் வீரர்கள் மட்டுமன்றி பயிற்சியாளர் டிராவிட் உள்பட பீல்டிங் பயிற்சியாளரும் கலந்து கொண்டனர்.

    அந்த வீடியோவில் பேசிய கில், -7 டிகிரி என்று நினைக்கிறேன். அதனால் எனது கைகளை பாக்கெட்டில் விட்டு கொண்டேன். மேலும் குளிருக்கு எதிராக பயிற்சியில் இடுபடுகிறோம் என தெரிவித்தார். ரொம்ப குளிராக இருக்கிறது என டிராவிட்டு மட்டுமன்றி அனைத்து வீரர்களும் இதனை பற்றி தெரிவித்தனர்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா அல்லது சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார்.

    ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜசாய், குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், நஜிபுல்லா ஜட்ரன், முகமது நபி, குல்படின் நைப் அல்லது கரிம் ஜனத், முஜீப் ரகுமான், கியாஸ் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    கேரள கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் இருந்து பிரியும் கடனா அணையில் இருந்து 200 கன அடி நீர் ஆற்றில் வருகிறது.
    • சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்டவற்றுக்கு நீர் வரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. 3 அணைகளும் நிரம்பும் தருவாயில் இருப்பதாலும், தொடர் மழையினாலும் தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. இரவில் மழை பெய்யும்போது அதிக அளவு நீர் திறக்கப்படுவதும், பகலில் நீர் திறப்பு குறைவதுமாக உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 1509 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1666 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு வரும் 1,458 கனஅடி நீரும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    இதுதவிர தென்காசி மாவட்டத்தில் இருந்து பிரியும் கடனா அணையில் இருந்து 200 கன அடி நீர் ஆற்றில் வருகிறது. இவ்வாறாக இன்று காலை நிலவரப்படி சுமார் 4 ஆயிரம் கனஅடி வரை நீரானது ஆற்றில் செல்கிறது.

    மலை பகுதியில் தொடர்மழையால் சொரிமுத்து அய்யனார் கோவில், மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு செல்வதற்கு தடை நீடிக்கிறது. மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் 35 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 31 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 37 மில்லிமீட்டரும் மழை பெய்து.

    மாவட்டத்தில் சேரன்மகா தேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அங்கு அதிக பட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பெய்தது. அம்பையில் 5 மில்லி மீட்டரும், ராதாபுரத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேலும் மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் கடனா நதி அணைப்பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராமநதியில் 6 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 4.5 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை கொட்டியது. அணைகள் முழுவதும் நிரம்பிவிட்ட நிலையில் தொடர் மழையால் விவசாயிகள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.

    தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி தென்காசியில் 19 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆய்குடியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சங்கரன்கோவிலில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் அதிக அளவில் கொட்டும் தண்ணீரில் அய்யப்ப பக்தர்கள் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.
    • அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் உட்பட பலவகையான பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உட்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய விளைப்பொருகளுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 20,000 கொடுக்க முன்வர வேண்டும். மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனி பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் மேலும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை தொடர்ந்து இன்று காலை வரை பெய்து வருகிறது.

    40 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்கனவே பனி பொழிவும் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஏற்காட்டில் தொடர்ந்து பனி மற்றும் மழை பெய்து வருவதால் காபி கொட்டைகளை காய வைக்க முடியாத சூழல் உள்ளது.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் இன்று காலையும் சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 22.8 மி.மீ. மழை பெய்துள்ளது . எடப்பாடி 16, தலைவாசல் 15, தம்மம்பட்டி 12, கரியகோவில் 12, ஆனைமடுவு 6, சங்ககிரி 2.2, ஆத்தூர் 1, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 88 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.
    • நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று மழை பெய்ய தொடங்கியது.

    பெரம்பலூர்:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி டெல்டா மாவட்டங்களில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பவில்லை. சில நீர்நிலைகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய மழை விட்டு விட்டு பெய்தது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
    • அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்தததால் நீர் திறப்பு குறைந்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணை பகுதிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவருவதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டிருந்தது.

    ஆனால் இரவில் மழை குறைந்ததால், இன்று தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பகலில் கனமழை நீடித்த நிலையில், இரவில் மழை சற்று தணிந்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 39 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 35 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 30 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 19 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    சில நாட்களாக பாபநாசம் உள்ளிட்ட அணை பகுதிகளில் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் உபரியாக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்தது. நேற்று சுமார் 7 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் 2 கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது.

    இந்நிலையில் நேற்று மலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்தததால் நீர் திறப்பு குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பிரதான அணையான பாபநாசம் அணைக்கு 2,171 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 3,624 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணைக்கு 1,592 கனஅடி வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து 1,028 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீரின் அளவு குறைந்தது. மாவட்டத்தில் சேரன்மகா தேவி, கன்னடியன் கால்வாய் பகுதி, அம்பை ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடனா நதி அணைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 27 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. ஆய்க்குடி, தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் தொடங்கி இரவு வரையில் தொடர்ந்து சாரல்மழை பெய்த வண்ணம் உள்ளது.

    சிவகிரியில் லேசான சாரல் மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்குள்ள மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

    • இன்று காலை 200 கனஅடியாக இருந்த நீர் வரத்து பின்னர் மதியம் 1000 கனஅடியாக உயர்ந்தது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 3073 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இன்று காலை 200 கனஅடியாக இருந்த நீர் வரத்து பின்னர் மதியம் 1000 கனஅடியாக உயர்ந்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு 50 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    ஏரிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 3073 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஏற்காட்டில் பனிப்பொழிவு, குளிர், மழை என்று சீதோஷ்ண நிலை மாறி காணப்படுகிறது.
    • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவுடன் குளிர் நிலவி வருகிறது.

    மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நிலவி வருகிறது. இதன் காரணமாக மாலை 4 மணிக்கு மேல் பொதுஇடங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் இரவில் கடுங்குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    தொடர்ந்த பனிப்பொழிவு, குளிர் காரணமாக ஏராளமான பொதுமக்கள் சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் ஏற்காட்டில் திடீரென சீதோஷ்ண நிலை மாறியது. மழை வருவது போல் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவு, குளிர், மழை என்று சீதோஷ்ண நிலை மாறி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள். மேலும் பனிப்பொழிவும் அதிகளவில் இருப்பதால் மலைப்பாதையில் வந்து செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கிறது.

    ×