search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain Waterm Sowyerpuram"

    • பேரூராட்சி மன்ற தலைவர் பாக்கியலெட்சுமி அறவாழி தலைமையில் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் 14-வது வார்டில் மழைநீர் வடிகால் ஓடையை தூர்வாரி சீரமைத்திட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் பாக்கியலெட்சுமி அறவாழி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் 14-வது வார்டில் மழைநீர் வடிகால் ஓடையை தூர்வாரி சீரமைத்திட வேண்டும், பேரூராட்சி பகுதியில் தெருவிளக்கு பராமரித்திட வேண்டும், தெரு பைப்புகளில் புதிய நல்லிகள் பொருத்திட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயக்குமார், கண்ணன், முருகேஸ்வரி, பிளாட்டினாமேரி, ராமமூர்த்தி, முத்துராஜா, முத்துமாரி, இந்திரா, அமுதா, ஜெபத்தங்கம் பிரேமா, பிரவினா சொரிமுத்து, பிரேமா மற்றும் பேரூராட்சி மேஸ்திரி நித்திய கல்யாண் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×