search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain Warning In districts"

    தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #SouthWestMonsoon
    சென்னை:

    கேரள மற்றும் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த 1 மாதமாக பெய்து வருகிறது.

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருகிறது.



    இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. #SouthWestMonsoon

    ×