search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahul Gandhi started Padayatra"

    • ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் கட்சி கொடியேற்றி அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக 5-வது முறை பொறுப்பேற்றுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக 5-வது முறை பொறுப்பேற்றுள்ள பா.மு.முபாரக், ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் கட்சி கொடியேற்றி அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, தொரை,

    உதயதேவன், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், காந்தல் ரவி, கர்ணன், எல்கில் ரவி, சோலூர் பேரூராட்சி செயலாளர் பிரகாஷ்குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமாராஜன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ராம்குமார், மாயன், பேரூராட்சி தலைவர்கள் ஜெககுமாரி, கௌரி, சத்யவாணி, ஹேமமாலினி, ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார்,

    மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், தம்பி இஸ்மாயில், முத்து, தொமுச கவுன்சில் செயலாளர் ஜெயராமன், எல்.பி.எப் முருகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், மேத்யூஸ், மெல்ரோஸ் செல்வராஜ், வெங்கடேஷ், மார்கெட் ரவி, ராஜூ, ராமன், வெங்கடேஷ், குண்டன், குரூஸ், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கீதா, நாகமணி, விஷ்னுபிரபு, கஜேந்திரன், ரகுபதி, வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக்கிற்கு குன்னூர் நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலைம் அருகில் நகர தி.மு.க. செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ராமசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பா.மு. முபாரக் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

    இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், பொது குழு உறுப்பினர் சதக்கதுல்லா, குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷிலாகேத்ரின், நகர்மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா, நகர திமுக துணை செயலாளர் முருகேஷ், நகர பொருளாளர் ஜெகநாத்ராவ், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் கேரள மாநிலத்திற்கு சென்றார்.
    • கேரளாவில் 21 நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் மீண்டும் நேற்று தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

    ஊட்டி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., பாரத ஒற்றுமையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கி னார்.

    தொடர்ந்து அவர் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் கேரள மாநிலத்திற்கு சென்றார்.

    கடந்த 11-ந் தேதி தனது பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் பாதயாத்திரை மேற்கொ ண்டு மக்களை சந்தித்து பேசி, அவர்களின் குறைக ளையும் கேட்ட றிந்தார்.

    கேரளாவில் 21 நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் மீண்டும் நேற்று தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

    நேற்று மாலை அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக தமிழக மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வந்தார்.

    அங்கு அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான கட்சியினர் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வேனில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

    தொடர்ந்து அவர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவருக்கு முன்பாக பேண்டு வாத்தியங்கள் முழங்க காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். சிலர் குதிரைகள் மீது அமர்ந்து தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.

    நந்தட்டி, பள்ளிப்பாடி, செம்பாலா வழியாக கூடலூர் புதிய பஸ்நிலையம் பகுதிக்கு வந்த அவர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னதாக அவர் வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள் நின்று கொண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய இசை இசைத்தபடியும், நடனமாடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல்காந்தி கட்சி நிர்வாகிளுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் இரவில் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வேனிலேயே தங்கி ஓய்வெடுத்தார்.

    கூடலூரில் பாதயா த்திரையை முடித்து கொண்ட ராகுல்காந்தி இன்று காலை கூடலூரில் இருந்து வேனில் கர்நாடகாவுக்கு சென்றார்.கர்நாடகாவில் அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பாத யாத்திரையாக சென்றனர்.

    ×