search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puliyangudi"

    • புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள இடிந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என்று புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து இருந்தார்.
    • தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் புளியங்குடியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.

    புளியங்குடி:

    புளியங்குடி பகுதியில் உள்ள அரசு கல்வி நிலையங்களில் தென்காசி மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள இடிந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என்று புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து இருந்தார்.

    அதனை கருத்தில் கொண்டு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் புளியங்குடியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன், ஆணையாளர் சுகந்தி, பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர்கள் கணேசன், கைலாசம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சடையனேரி குளம் அருகே உள்ள கிணற்றில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பள்ளப்பட்டியை சேர்ந்த சிவநேசன் மகன் தண்டபாணி என்பது தெரிய வந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி சங்கரன்கோவில் சாலை அருகே உள்ள சடையனேரி குளம் அருகே உள்ள கிணற்றில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது. இதை அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக்அப்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கிணற்றில் விழுந்து இறந்தவர் திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பள்ளப்பட்டியை சேர்ந்த சிவநேசன் மகன் தண்டபாணி என்பது தெரிய வந்தது. அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எதற்காக புளியங்குடி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.
    • தெய்வங்களுக்கு 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடியில் அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை 1008 பாலபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு மாலை 5 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா ஐப்பசி மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் மாலை 6:30 மணியளவில் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர் நறுமண பொருட்கள் உள்பட 21 வகை அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன் பேச்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பவுர்ணமி பூஜை ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
    • தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

    புளியங்குடி:

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புளியங்குடி அருகே உள்ள பாம்பு கோவில் சந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கூடுதல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை கவுதமன், கோவிந்தராஜ் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சையது இப்ராஹிம் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராஜா எம்.எல்.ஏ.வுக்கு நகரச் செயலாளர் அந்தோணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • காமராஜர், தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து ராஜா எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்.

    புளியங்குடி:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ. நேற்று புளியங்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு புளியங்குடி காமராஜர் சிலை முன்பு நகரச் செயலாளர் அந்தோணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து காமராஜர் சிலை, காந்தி சிலை, முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து ராஜா எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார். நிகழ்சியில் புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன், வாசுதேவநல்லூர் சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ. , பொதுக்குழு உறுப்பினர்கள் பத்திரம் சாகுல்ஹமீது, வேல்சாமி பாண்டியன், துணை செயலாளர்கள் காந்திமதியம்மாள், கருப்பசாமி, கவுன்சிலர்கள் பொன்னுதுரைச்சி, கார்த்திக், உமாமகேஷ்வரி, ராஜேஸ்வரி, வள்ளி, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், பெருமாள், அருணாசலம் மற்றும் காஜா மைதீன், முன்னாள் நகர் மன்ற தலைவர் வெங்கட்ராமன், தி.மு.க. நிர்வாகிகள் தம்பிதுரை, குரூராஜ், விக்ரம் மணிகண்டன், மைதீன், அருணாசலம், அய்யனார், சுப்பு, குழந்தை ராஜ், சேதுராமன் மீனாட்சி சுந்தரம், மணிமாறன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • புளியங்குடி உள்ள முப்பெரும் தேவியர் கோவிலில் தெய்வங்களுக்கு ஐப்பசி மாதம் பெரும் பூஜை நடை பெற்றது.
    • அம்மன்களுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தேன் சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகாத்தம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஐப்பசி மாதம் பெரும் பூஜை நடை பெற்றது.

    கோவிலில் உள்ள அம்மன் குருநாதர் சக்தியம்மா (ஆண்) பெண் உருவத்தில் சேலை அணிந்து அருள் வாக்கு கொடுப்பதால், வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் சேலை எடுத்து கொடுப்பார்கள்.இதனை பவானி அம்மன் நேரடியாக பெற்றுக் கொள்வதாக ஐதீகம். இதனால் பக்தர்கள் இந்த நாளையே மகா பெரும் பூஜை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

    30-ம்ஆண்டு ஐப்பசி மாதம் மகா பெரும் பூஜை திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மன் களுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தேன் சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 8 மணி கோவில் குருநாதர் சக்தியம்மா இந்நாளில் மட்டும் முழு பெண் உருவத்தில் இருந்து, ஒரு கையில் அக்னி சட்டியுடன் கொடுக்கும் அருள் வாக்கு நிகழ்வு நடந்தது. இந்த அருள் வாக்கு ஒரு வருடத்திற்கு உரிய பலனை நமக்கு கொடுக்கும் என்பது பக்தர்களால் நம்பப்படும் ஐதீகம்.

    பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் குழந்தை வரம், திருமணத்தடை, வியாபார முடக்கம், தீராத நோய் நொடி, துன்பங்களை சரியாகும் என்பது நம்பிக்கை. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 10 மணி நேரம் அருள்வாக்கு தொடர்ந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 முதல் மணி முதல் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

    திருவிழாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கல்கத்தா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • மணிச்செல்வி, அபிலேஷ் இருவரும் ஒரு மொபட்டில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • இரு பைக்குகளும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன.

    புளியங்குடி:

    திருவேங்கடத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது20), சங்கரன்கோவிலை சேர்ந்தவர்கள் முகேஷ்குமார் (வயது 20), முகமது ரியாஸ் (20). இவர்கள் 3 பேரும் புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்றனர்.

    அப்போது முள்ளிக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் மணிச்செல்வி (50), அவரது மகன் அபிலேஷ் (18) இருவரும் ஒரு மொபட்டில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    புளியங்குடி பிரதானசாலையில் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது இரு பைக்குகளும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் 5 பேரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • அம்மனுக்கு தேன், சந்தனம், நறுமணப்பொருள்கள் உள்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது.
    • முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாதரனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அருள் வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந் தோறும் (புரட்டாசி மாதம்) நடை பெறும் சிறப்பு பால் அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு புரட்டாசி மாத பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோயில் குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற் பொழிவாற்றினார். 6.30 மணியளவில் முப்பெரும் தேவி அம்மனுக்கு பச்சைஅரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப்பொருள்கள் உள்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கொரானோ வைரஸ் முழுவதும் அழிந்து போகவும் சிறப்பு மந்திரங்கள், பிரார்த்தனைகளும் 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகமும், குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால விநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெ ட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலபிஷேகம் நடை பெற்றது. அதன் பிறகு முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாதரனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கில் தீபம் ஏற்றி பாடல்கள் படித்து திருவிளக்கு பூஜை நடந்தது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு இரவு சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.
    • பச்சேரி கிராமத்தில் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புளியங்குடி:

    புளியங்குடியில் தமிழர் விடுதலை களம் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைத்துதரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புளியங்குடி பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டியன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் குமார், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் விடுதலைக் கழக நிறுவனத் தலைவர் ராஜ்குமார்பாண்டியன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பச்சேரி கிராமத்தில் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும், வெண்ணிக்காலாடி நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகி கடலரசன் நன்றி கூறினார்.

    • புளியங்குடி நகர இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.
    • இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.

    புளியங்குடி:

    புளியங்குடி நகர இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கு குழு ஒன்றை அமைக்கவும், சங்கத்திற்கான நிரந்தர வங்கி கணக்கு தொடங்கவும், கடந்த ஆண்டு புளியங்குடியில் மரக்கடை தீ எரிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டர்களுக்கு இழப்பீடு வழங்க நகரின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களை சந்தித்து நிதி திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிடவும், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


    • செஸ் தம்பி லோகோவை தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்தி வருகிறது.
    • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    புளியங்குடி:

    சென்னையில் நடைபெறும் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டிக்கு பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட செஸ் தம்பி லோகோவை தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்தி வருகிறது.

    புளியங்குடி கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவிகள் செஸ் தம்பி லோகோவை 200 கிலோ கோலப் பொடியில் 4 மணி நேரத்தில் வரைந்து அசத்தினர்.

    மேலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகளும் நடத்தப்பட்டன. ஓவியம் வரைந்த மாணவிகளையும், செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளையும் பள்ளி சேர்மன் சுபாஷ் கண்ணா, நிர்வாக இயக்குனர் பார்கவி கண்ணா, பள்ளி தலைமை ஆசிரியை அன்னகளஞ்சியம் ஆகியோர் பாராட்டினர்.

    • புளியங்குடி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    • புதிதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி.க்கு புளியங்குடி சப்-டிவிசன் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய டி.எஸ்.பி.யாக குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்த அசோக் புளியங்குடி உட்கோட்டத்திற்கு டி.எஸ்.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். இவரது மனைவி தனுஷியா தென்காசியில் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக பணி புரிகிறார்.

    புதிதாக பொறுப்பேற்று கொண்ட டி.எஸ்.பி.க்கு புளியங்குடி சப்-டிவிசன் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ×