search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puliarai"

    • பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக மாவட்டங்கள் தோறும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • புளியரை சோதனை சாவடியில் போலீசார் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக மாவட்டங்கள் தோறும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் புளியரை போலீசாருடன் இணைந்து நக்சலைட் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினர். மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் கார் உள்ளிட்ட வாகனங்களில் இருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்த பின்னரே வாகனங்களை செலுத்த அனுமதித்தனர்.

    ×