search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protesting"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பின்சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    நாமக்கல்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம்பள முரன்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பின்சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • புறம்போக்கு பகுதியில் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர்.
    • சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் காமராஜ் நகர் மற்றும் சரளைமேடு பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலையின் இருபுறமும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பல ஆண்டாக வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவர், மாவட்ட நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள‌ வீடுகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    நீதிமன்ற உத்திரவின்படி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அவர்களுக்கு திடுமல் கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புறம்போக்கில் இடம் ஒதுக்குப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள புறம்போக்கு பகுதியில் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் பாதுகாப்பு

    இதையடுத்து, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச் செல்வி, ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • இந்தி எதிர்ப்பை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்
    • அரசு கலை அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு நடந்தது

    புதுக்கோட்டை:

    மத்திய அரசின்இந்தி திணிப்பை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு 100-கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு நிற துணி அணிந்து இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைக ளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    • ராமநாதபுரத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்துள்ள இந்தி திணிப்பிற்கான பரிந்துரைகளையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை அருகே மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா ரகு ஏற்பாட்டில் தி.மு.க.இளைஞர் அணி மாணவர் அணி சார்பில் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், ராமநாதபுரம் நகர செயலாளர், நகர் மன்ற தலைவர் கார்மேகம், நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம் முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுந்தர்ராஜன், முன்னாள் எம்எல்ஏ முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, தி.மு.க.இளைஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், துணை செயலாளர் ஜெய்னுதீன், நகர் மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ், ராமேசுவரம் நகர் செயலாளர் நாசர்கான், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு கண்டித்து ஏராளமானோர் கோஷமிட்டனர். மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • புதுவை பெரியார் நகரில் உள்ள அரசு குடிசைமாற்று வாரியத்தில் 160-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து அலுவலகம் வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பெரியார் நகரில் உள்ள அரசு குடிசைமாற்று வாரியத்தில் 160-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 10 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை . நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், மேலும் நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கோரி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து அலுவலகம் வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுவரை அரசு சார்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 22-வது நாளாக  நிலுவை ஊதியம் வழங்க கோரி அலுவலக வாயில் முன்பு ஊழியர்கள் அனைவரும் ஒற்றை காலில் நின்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கோரிக்கை–களை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். 

    • மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது
    • வரும் 2-ந் தேதி நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்த கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.

    பெரம்பலூர் மா.கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மா.கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் , தொழிலாளர் கட்சி ஆகியவற்றின் சார்பில் சமூக நல்லிணக்க போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மா.கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் வீரசெங்கோலன், தொழிலாளர் கட்சி மாநில தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் கோவையில் குண்டு வீச்சு நடந்தது. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சுகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கு காரணமான அனைவரையும் காவல்துறை விரைந்து கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதை வரவேற்கிறோம்.

    மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் வரும் 2-ந் தேதி மாலை 4 மணியளவில் பெரம்பலூரில் "சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி" நடத்துவது, இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தரப்பு, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கலந்துகொள்ளவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
    • அனைத்து பஸ்களும் நின்று செல்ல வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் திடீரென 2-ம் ஆண்டு மாணவர் முகமது ஜமால் தலைமையில் மாணவ-மாணவிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்லூரி முன் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும், கல்லூரி தொடங்கும் நேரத்திலும் கலைந்து செல்லும் நேரத்திலும் அதாவது காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் மற்றும் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜா ஆகியோர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாமிதுரை சகோதரி கலாவிற்கு அரசு வேலை வழங்க பரிந்துரை கடிதம் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23). சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. கடந்த 27-ந்தேதி நள்ளிரவு வீட்டு முன்பு நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

    இந்த கொலை தொடர்பாக கோதைசேரியை சேர்ந்த முருகேசன், திசையன்விளையை சேர்ந்த விக்டர் ஆகிய 2 பேர் ராதாபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே சாமிதுரை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பேச்சுவார்த்தை

    குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரணம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இன்றும் 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களிடம் வருவாய்த்துறை மற்றும் போலீசார் தரப்பில் இருந்து அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சாமிதுரையை சகோதரி கலாவிற்கு அரசு வேலை வழங்க பரிந்துரை கடிதம் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு 3 சென்ட் இடம் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அந்த 2 வாக்குறுதிகளையும் எழுத்து பூர்வமாக கொடுத்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வதாக சாமிதுரை உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று உடலை வாங்குவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • 2-வது நாளாக இன்றும்அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சபரி ராஜன் (வயது 28), இவர் சென்னையில் உள்ள ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை கையாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் அவருக்கு படிப்பதற்காக வரும் புத்தகங்களை சமீப காலமாக அதிகாரிகள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை அடைந்த சபரி ராஜன் நேற்று உண்ணாவிரத்தை தொடங்கினார். 2-வது நாளாக இன்றும்அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் .சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • நெல்லை டவுன் ஜவஹர் தெருவில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.
    • இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஜவஹர் தெருவில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.

    இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளி இருக்கும் இடம் தனியாருக்கு பாத்தியப்பட்டது ஆகும். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் ஒரு தரப்பினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கில் வெற்றி பெற்றவர்கள் இன்று நீதிமன்ற பணியாளர்களுடன் பள்ளிக்கு சீல் வைக்க சென்றனர்.

    இதை அறிந்த அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பள்ளியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • ராகுல்காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு
    • நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் கருப்பு கொடி போராட்டம்.

    நெல்லை:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை டவுன் ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று வந்தார்.

    அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் கொக்கிரகுளம் கட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    இதையறிந்த உதவி கமிஷனர்கள் அண்ணா–துரை, விவேகானந்தன், பாளை இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் விரைந்து சென்று கருப்பு கொடியை அகற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உடுமலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 88 பேர் கைது செய்யப்பட்டனர்.
    உடுமலை:

    தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கடந்த 17-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 23-ந்தேதி முதல் உண்ணா விரத போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதுவரை அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இந்த பிரச்சினையை தீர்க்க அரசு பேச்சுவார்த்தை நடத்த கோரியும் உடுமலையில் அரசியல் கட்சியினர் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக போலீசில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

    இந்த நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத் தினர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை தாங்கி பேசினார்.

    இதில் விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஏ.பாலதண்டபாணி, உடுக்கம் பாளையம் பரமசிவம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செ.செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.எஸ்.ரணதேவ், ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் வி.சவுந்திரராஜன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் டி.கோவிந்தராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் டி.ரெத்தினவேல், உடுமலை நகர தலைவர் ஏ.பாலகிருஷ்ணன், தே.மு.தி.க. நகர செயலாளர் ராமச்சந்திரன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தெற்கு மாவட்ட தலைவர் கொங்கு ரவிச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு செயலாளர் முத்தமிழ் வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 3 பெண்கள் உள்பட 88 பேரை போலீசார் கைது செய்து வேன்கள் மூலம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மாலையில் கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 
    ×