search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "project"

    • ரூ.1 கோடியே 12 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் உப்பனாறு தெற்கு கரையை வலுப்படுத்துதல் பணி.
    • ஓடை குட்டையை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட காக்கையன் தோப்பு, அரியாங்குப்பம் மேற்கு கிராம பஞ்சாயத்துக்களில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் உப்பனாறு தெற்கு கரையை வலுப்படுத்துதல், சம்போடை குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துதல், ஓடை குட்டையை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

    இந்த 100 நாள் திட்டப்பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ., பா.ஜனதா அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார், பொதுச்செயலாளர்கள் பிச்சைமுத்து, முருகவேல், மாநில மீனவரணி தலைவர் பழனி, வீராம்பட்டினம் அன்பரசன், ஆர்.கே.நகர் கிளை தலைவர் தியாகராஜன், சீனிவாசன் நகர் கிளை தலைவர் வசந்தி முருகவேல் மற்றும் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் மணக்காடு காமராசர் நகரவை மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” எனும் மாவட்ட அளவிலான திட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மணக்காடு காமராசர் நகரவை மேல்நிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" எனும் மாவட்ட அளவிலான திட்டம் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்ததாவது:-

    உறுதிமொழி

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் செயல்பட்டுவரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டம் அறிமு கப்படுத்தப்பட்டு உள்ளது.

    அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 1,772 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் குறித்த உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    சுகாதாரமான சூழல்

    அரசுப் பள்ளியில் பயிலும் ஒவ்வொருவரும் உங்கள் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தனிக்கவனம்

    செலுத்திட வேண்டும். பள்ளி வயது பருவத்திலேயே தன் சுத்தம், உடல்நலம், சுற்றுச் சூழல் உள்ளிட்டவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயலாற்றிட வழிவகுக்கும் வகையில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற செயல்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    கல்வி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரமான சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தித் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறது.

    பள்ளி மாணவர்களும் கூட்டு முயற்சியுடன் ஒவ்வொரு பள்ளியையும் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக திகழச் செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாணவ, மாணவிகள் கலெக்டர் முன்னிலையில் நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாமன்ற உறுப்பினர் சங்கீதா நீதிவர்மன், தலைமை ஆசிரியை அனந்த லட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினோம்.
    • இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக காலை உணவு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் நடை பெற்ற ஒரு திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அஞ்சா நெஞ்சன் அழகிரி பிறந்த இந்த பட்டுக்கோட்டையில் நடைபெறுகின்ற இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் தனது மகனுக்கு அழகிரி பெயரை சூட்டியுள்ளது மூலம் இந்தப் பட்டுக்கோட்டைக்கும் நமது கலைஞருக்கும் உள்ள நெருக்கம் தங்களுக்கு புரியும்.மணமக்கள் இருவரும் மருத்துவர்கள் அது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஏனென்றால் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவராவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    நம் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவராகும் கனவை தான் ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை கொண்டு வந்து எப்படி எல்லாம் பாழாக்குகிறது என்பது உங்களுக்கு நன்றி தெரியும்.

    5 நாட்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினோம் .

    தி.மு.க. ஆட்சி அமைந்து 2 வருடங்களில் பல்வேறு நலத்திட்டங்களை நமது திராவிட மாடல் அரசு செய்து கொண்டிருக்கிறது. உங்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது மிக முக்கியமான திட்டம் 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் திருக்குவளையில் ஒரு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

    அரசு பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள், 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடங்கியதன் மூலம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

    இத்திட்டத்திற்காக மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் தமிழக முதல்வரை பாராட்டி வருகின்றனர்.

    இப்படி ஒரு சிறந்த திட்டத்தை நமது தமிழக முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.

    இப்படிப்பட்ட திராவிட மாநில அரசின் சாதனைகளை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
    • மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு, மேற்கண்ட 4 வார்டுகளில் குடியிருப்புகளில் குழாயை திறந்தால் 24 மணி நேரம் தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது

    திருப்பூர்

    திருப்பூர் மாநகராட்சியில் வசிக்கும் மக்களின்குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆழ்குழாய் கிணறு மூலமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு 4-வது குடிநீர் திட்டம் மூலம்

    24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்

    முதல்கட்ட பணிகள் விரைவில் தொடக்கம்

    இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது 60 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதாகும். வார்டு வாரியாக பகிர்மான குழாய்கள் இணைப்பு பணிகள் முடிந்து மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றி வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில வார்டுகளில் மட்டும் முழுமையான அளவில் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் 4-வது குடிநீர் திட்டத்தில் 4 வார்டுகளில் மட்டும் 24 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் அறிவித்தார். அதன்படி 20,30, 44, 51 ஆகிய 4 வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஆரம்பகட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு, மேற்கண்ட 4 வார்டுகளில் குடியிருப்புகளில் குழாயை திறந்தால் 24 மணி நேரம் தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் அளவு குறைந்தாலும் உடனடியாக நிரப்பும் பணிகள், குடிநீர் வினியோகம் செய்யும்போது குடிநீரின் அளவை கண்டறியும் ஸ்கேடா கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது. 20, 30, 44, 51 ஆகிய 4 வார்டுகளில் மக்கள் அதிகம் உள்ள வார்டுகளாகும்.

    அதனால் அந்த வார்டுகளில் இந்த பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்பட உள்ளதாக மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    நாளை (செவ்வா ய்க்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே கிராம சபை கூட்டத்திற்கு மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
    • தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை நேரில் கேட்டறிந்தும் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாட்கள் மற்றும் மேல் விவரங்கள் ஏதேனும் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை எண்.120 தொலைபேசி எண். 0427-2452202, வாட்ஸ் அப் எண் 88254 73639 ஆகும்.

    மேலும் வட்டாட்சியர் அலுவலகங்களை பொறுத்தவரை சேலம் - 0427-2452121, சேலம் மேற்கு- 0427-2335611, சேலம் தெற்கு -0427-2271600, ஏற்காடு- 04281-222267, வாழப்பாடி- 04292-223000, பெத்தநாயக்கன் பாளையம் - 04282-221704, ஆத்தூர் - 04282-240704, தலைவாசல் -04282-290907, கெங்கவல்லி - 04282-232300, ஓமலூர் - 04290-220224, காடையாம்பட்டி - 04290-243569, மேட்டூர் - 04298-244050, எடப்பாடி- 04283-222227 மற்றும் சங்ககிரி - 04283-240545 ஆகிய வட்டாட்சியர் அலுவ லகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது.

    மேலும், தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை நேரில் கேட்டறிந்தும் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • மதுரை மெட்ரோ ரெயில் பணிகள் விரிவான திட்ட அறிக்கை தொடர்பான ஆய்வு தொடங்கியது.
    • மாசி வீதிகளை அதிகாரி சித்திக் பார்வையிட்டார்.

    மதுரை

    ஸ்மார்ட் சிட்டியாக மாறி வரும் மதுரை மாநகரில் ரூ. 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    மதுரையில் ஒத்தக்கடை, திருமங்கலத்தை இணைக்கும் வகையில் 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு, திருமங்க லத்தில் இருந்து தோப்பூர், திருநகர், மதுரை கல்லூரி, காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளை யம், கே.புதூர், மாட்டுத்தாவணி, ஐகோர்டு வழியாக ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ய ப்பட்டுள்ளது. அதற்கான சாத்திய கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்தநிலையில் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை யை தயாரிப்ப தற்கான ஒப்பந்தம் கையெ ழுத்திடப்பட்டது.

    அந்த அறிக்கை ஜூலை 15-ந்தேதி அரசிடம் சமர்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவ னத்தை அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை தனியார் நிறுவ னத்திடம் வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் மேலாண் இயக்குனர் சித்திக் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள நான்கு மாசி வீதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    ஏற்கனவே திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் பரிசோத னையும், போக்குவரத்து சோதனையும் நடத்தப் பட்டுள்ளது.

    மேலும் நில எடுப்பு நில அளவை உள்ளிட்ட பணி களும் நடைபெற்று உள்ளது. குறிப்பாக அரசு நிலங்கள், பணிகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நிலங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    மதுரை நகரின் மைய பகுதிகளில் பூமிக்கு அடியில், திருமங்கலத்தையும், ஒத்தக்கடையையும் இணைக்கும் வகையில் அமைய இருக்கும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டமா னது, மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் செயல் படுத்தப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

    • மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது.

    சென்னை:

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பருவ மழையின்போது தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்குவது கடும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.

    அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல போதிய வடி கால்வாய் வசதி இல்லாததால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த வாரம் பெய்த ஒரு நாள் கோடை மழைக்கே பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகைள எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், அந்த தண்ணீர் வீணாகாமல் அருகில் உள்ள சிறிய ஏரி, குளங்களில் சேமிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்காக மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான முதல் கட்டபணி ரூ.44 கோடி மதிப்பில் நடைபெற இருக்கிறது.15 மண்டலங்களில் உள்ள 49 சிறு ஏரி, மற்றும் குளங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதேபோல் குளங்களில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் இல்லாததாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்கவும் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள்.

    இதற்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பான விரிவான ஆய்வு முடிந்த பின்னரே எவ்வளவு இடம் கையகப்படுத்தப்படும் என்ற விபரம் தெரியவரும்.

    பலத்த மழை பெய்யும்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு ஏரி, மற்றும் அயப்பாக்கம், கோலடி ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் அம்பத்தூர் ஏரியில் கலப்பதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இதேபோல் நன்மங்கலம் ஏரியில் உபரி நீர் கால்வாய் இல்லை. மழை நீரால் குளம் நிரம்பும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இதே போல் போரூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட சில ஏரிகளில் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரிகளில் உபரி நீர் கால்வாய்கள் இல்லாததால் பல மண்டலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளது. உபரி நீர்கால்வாய் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும். பெரும்பாக்கம் ஏரியில் உபரிநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி சவாலானது. அயனம்பாக்கம் ஏரிப்பகுதியில் போதிய கால்வாய்கள் இல்லை. முகப்பேர், பாடி, நொளம்பூர் பகுதிகளில் இருந்த குளங்கள் தற்போது இல்லை. இதுபோன்ற இடங்களில் கூடுதலாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க வேண்டும் என்றார்.

    • ரூ. 15 லட்சம் செலவில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.
    • ரூ.648 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள்நடைபெற உள்ளன.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

    இவை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் கிடங்குகளில் கொட்டப்பட்டு வருகிறது. சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் கிடங்கில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்படுகிறது. 1 முதல் 8 மண்டலங்களில் உள்ள குப்பைகளை இங்கே கொண்டுவரப்படுகின்றன. இதனால் சுமார் 66.52 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை குவிந்து கிடக்கின்றன. குப்பையில் இருந்து மீத்தேன் வாயு அதிக அளவு வெளியேறுவதால் வெயில் காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் அங்கு தினமும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதில். இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு, 7 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தீ விபத்தை தடுப்பதற்காக முன்எச்சரிக்கையாக இரண்டு குடிநீர் லாரிகள், பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும்1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.

    குப்பைகளை பொறுக்கும் நபர்கள் இரும்பு, செம்பு கம்பிகளை எடுப்பதற்காக வயர்கள் உள்ளிட்ட பொருட்களை அவ்வபோது குப்பைகளை எரிக்கும் போது ஏற்படும் புகையால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மூச்சு திணறல், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மர்ம நபர்கள் குப்பைகளை தீ வைத்து கொளுத்துவதை கட்டுப்படுத்துவதற்காக ரூ. 15 லட்சம் செலவில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது.

    இதே போல் குப்பை கழிவுகளால் நிலத்தடி நீரும் மாசு பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. குப்பைகளில் கொட்டப்படும் `ப்ளோரசன்ட்' பல்புகளில் இருக்கும் பாதரசத்தின் ஆவியை சுவாசிப்பதால் சிறுநீரகம், நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றது. குப்பைகளில் இருந்து வெளிவரும் `கிரீன்ஹவுஸ்' வாயுக்கள், கார்பன் டை ஆக்ஸைடைவிட 20 மடங்கு அதிக நச்சுத் தன்மை கொண்டவை. இதைச் சுவாசிக்கும் மக்களுக்கு கடுமையான நுரையீரல் பாதிப்புகள், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்ப டுகிறது. இதை தொடர்ந்து கொடுங்கையூர் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும். அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதி நிலத்தை பசுமையாக மாற்றுவதற்கான முயற்சியாக குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ரூ.648 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள்நடைபெற உள்ளன.

    இந்த திட்டம் 6 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக டெண்டர் விடப்பட உள்ளது. இதன் மூலம் பல ஒப்பந்ததாரர்கள் போட்டி போட்டு பணிகளை மேற்கொள்ளும் போது சிறந்த முறையில் செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்ட பணி ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. 2025-ம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் படி குப்பை கிடங்கு கழிவில் இருந்து மின்சாரம், கியாஸ், உரம் தாயரிக்கப்படும். இதற்காக திடக்கழிவு மேலாண்மை ஒருங்கிணைந்த செயலாக்க நிலையங்கள் அமைய உள்ளன.

    இதற்கிடையே கொடுங்கையூர் குப்பை கிடங்கில் செயல்படுத்தப்பட இருக்கும் பயோ மைனிங் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் தண்டையார் பேட்டையில் உள்ள காலரா தொற்று நோய் ஆஸ்பத்திரியில் உள்ள கலையரங்கத்தில் மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. இதில் கொடுங்கையூர், ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு நலசங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர் அவர்கள் கொடுங்கையூர் குப்பை கிடங்கை மீட்டு எடுப்பதற்கான அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதில் திடக்கழிவு மேலாண்மை துறை தலைமை பொறியாளர் மகேஸ்வரன், தலைமையில், ஆர்.கே.நகர் ஜே.ஜே. எபினேசர் எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டல பொறுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    குடியிருப்பு நலசங்க பிரதிநிதிகள் இந்த திட்டம் குறித்து பேசும்போது இந்த திட்டம் சிறப்பானது ஆகும். இதை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது போல் தற்போதும் கிடப்பில் போடாமல் விரைவில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இந்தத் திட்டத்திற்காக ரூ. 648 கோடி நிதி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிடங்கள் மற்றும் மிகவும் நவீன வசதியுடன் கூடிய எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த பணியானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2025-ம் ஆண்டுக்குள் முடித்து செயல்பாட்டிற்கு வரும். ஏற்கனவே பெருங்குடி குப்பை கிடங்கில் பயோமைனிங் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. இது 70 சதவீதம் முடிவடைந்து உள்ளது என்றனர்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி அரசின் திட்டங்களால் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.
    • மதுரையில் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி மாநகர்மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மாவட்ட பொதுச்செய லாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு மேற்பார்வை யாளருமான சுதாகர் ரெட்டி கலந்து கொண்டு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்

    அதன் பின்பு அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் சாதனை களை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கின்ற முயற்சியில் ஈடுபட் டுள்ளோம். பிரதமர் மோடியின் முயற்சியால் உலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் மிகவும் பின்தங்கி இருந்த அனைத்து துறைகளும் பிரதமர் மோடி ஆட்சியில் பொருளாதார ரீதியாக உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா முதல் பல்வேறு உலக நாடுகள் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை பாராட்டியுள்ளன. 'இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மக்கள் மனதில் பா.ஜ.க. அரசு உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது.

    மத்திய அரசின் நலத்திட்டங்களால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அரசு மிக பெரிய அளவில் வெற்றி பெறும். தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கடும் உழைப்பின் காரணமாக பா.ஜ.க. அசுர வளர்ச்சியடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு பிரிவு செயலாளர் பாஸ்கர், மண்டல் தலைவர் மாணிக்கம், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன்,ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

    • மோகனூர் மற்றும் வேலூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சமுதாயக்கூடம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் வேலூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மோகனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.179 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணியினையும், ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகனமேடை, கழிவறை மற்றும் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளையும், ரூ.414.74 லட்சம் மதிப்பீட்டில் 6-வது வார்டில் வாரச்சந்தை கட்டும் பணிகளையும், ரூ.280 லட்சம் மதிப்பீட்டில் நவலடியான் கோவில் அருகே சமுதாயக்கூடம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மோகனூர் பேரூராட்சி 10-வது வார்டு மற்றும் 15-வது வார்டில் மூல தள நிதியிலிருந்து ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கட்டமைப்புடன் கூடிய காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டு உள்ளதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் கோமதியிடம் அறிவுறுத்தினார்.

    முன்னதாக மோகனூர் ஊராட்சி ஒன்றியம் நெய்க்காரன்பட்டியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வேலூர் பேரூராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.147 லட்சம் மதிப்பெட்டில் 1-வது வார்டு கந்தநகர் அருகில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது சேலம் ரெயில்வே கோட்ட உதவி மேலாளர் ராமச்சந்திரன், வட்டாட்சியர்கள் சுப்பிரமணியம், கலைச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர்கள், கோமதி, திருநாவுக்கரசர் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • காடுகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காகவும் அமைக்கப்படுகிறது
    • இயற்கை ஆர்வலர் பூபதி மற்றும் 5 இயற்கை ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    அரவேணு,

    பொதுமக்களிடையே காடுகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக சிறு சோலை காடுகள் அமைக்கும் திட்டத்தை கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் செயல்படுத்த இயற்கை ஆர்வலர்கள் முடிவு செய்தனர். இதற்கென டெல்லியை சேர்ந்த விஞ்ஞானி சாந்தகுமார், மைசூரைச் சேர்ந்த விஞ்ஞானி சிரிஷா, ஓய்வு பெற்ற வனவர் பாலகிருஷ்ணன், இயற்கை ஆர்வலர் பூபதி மற்றும் 5 இயற்கை ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழு கல்வி மற்றும் விழிப்புணர்வு உபயோகத்திற்காக ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள அந்நிய தாவரங்கள் மற்றும் மரங்களை அகற்றி அதற்கு பதிலாக சோலை மரங்கள், புற்கள், மூங்கில் உள்ளிட்டவற்றை நடவு செய்து சிறு சோலை மரக் காடு அமைக்க உள்ளனர். மேலும் இந்த சோலையை அக்குழுவினர் 2 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் உள்ளனர். இதன் தொடக்க விழா மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடந்தது. இதில் இயற்கை ஆர்வலர்கள், வனத்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்டு சோலை மரநாற்றுக்களை நடவு செய்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில் இந்த குழுவினர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவி களுக்கு காடுகள் வளர்க்க வேண்டிய அவசியம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றனர்.

    ×