search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "priya bhavani sankar"

    • மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.
    • இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர், மாஃபியா, யானை, அகிலன், பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

    சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமாகி பின்னர் மேயாதமான் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதன்பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, யானை, அகிலன், பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரின் கைவசம் தற்போது டிமாண்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் இருக்கிறது.


    பிரியா பவானி சங்கர்

    பிரியா பவானி சங்கர்

    இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • தமிழில் 'மேயாத மான்' படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.
    • தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழில் 'மேயாத மான்' படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம், யானை, மாபியா, ஓமணப்பெண்ணே, மான்ஸ்டர், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


    பிரியா பவானி சங்கர்

    சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் "சினிமாவிற்கு வரும் போது ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்று கவலைப்படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதற்காகவே நடித்தேன்" என்று கூறியதாக செய்தி வெளியானது.


    பிரியா பவானி சங்கர்

    இந்நிலையில், இந்த செய்திக்கு விளக்கமளித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாளி கட்டுவாறாம் அப்படிங்கிற மாதிரி இருக்கிறது. ஆரம்பத்தில் நான் எதிர்வினையாற்ற விரும்பவில்லை. மரியாதைக்குரிய மன்றங்கள் கூட நம்பகத் தன்மையைப் பற்றி கவலைப்படாமல் இது மாதிரியான விஷயங்களை முன்னோக்கி கொண்டு செல்கின்றன.


    பிரியா பவானி சங்கர் பதிவு

    இதை நான் சொல்லவே இல்லை. இதை நான் சொல்லியிருந்தாலும் அதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. நான் பணத்திற்காக தான் வேலை செய்கிறேன். எல்லோரும் பணத்திற்காக தான் வேலை செய்கிறார்கள். ஆனால், இது ஒரு நடிகரிடம் இருந்து வரும்போது ஏன் கீழ்தரமாக பார்க்கப்படுகிறது. நான் என் வழியில் முன்னேறி விட்டேன் யாரையும் எளிதாகவும் மலிவாகவும் பேசவிடமாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • நடிகை பிரியா பவானி சங்கர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் நடிப்பில் யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகியது. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


    பிரியா பவானி சங்கர்

    மேலும், இவர் நடிப்பில் பொம்மை, அகிலன், ருத்ரன் போன்ற படங்கள் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளன. இதைத்தொடர்ந்து, இந்தியன் 2, பத்துத்தல போன்ற படங்கள் இவரின் கைவசம் உள்ளது. இவர் சமூக பிரச்சினைகளுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.

    இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் கணவரின் இயலாமையை கேலி செய்யும் மனைவியிடம் அறியாமை தவறில்லை என நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் அந்த மனைவியிடம் கணவருக்காக பரிந்து பேசுவார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    பிரியா பவானி சங்கர்

    இது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா. வெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    ×