search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "primary school"

    • கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
    • இந்த கனமழையால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் முற்றிலும் ஒழுகுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்டது தாழங்காடு கிராமம். இந்த பகுதியை சுற்றிலும் 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள பெரும்பாலா னோர் விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள். இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தற்பொழுது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 43 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இந்த பள்ளியின் ஓடுகள் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்து விட்டது.  இது குறித்து அப்பகுதி ெபாதுமக்கள் கூறியதாவது:-

    பழுதான இந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் அமைச்சர்கள் வரை கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் முற்றிலும் ஒழுகுகிறது.  இதுபோல் மழை நீர் ஒழுகுவதால் பள்ளியில் அமர்ந்து மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மாணவர்களின் நலன் கருதி சிதலமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தர்ணா போராட்டம் நடந்தது.
    • வருகிற 3-ந்தேதி நடக்கிறது.

    சிவகங்கை

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொ ழிந்தார். பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ், குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர்கள் சிங்க ராயர், சகாயதைனேஸ், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், ஜோசப், ரமேஷ்குமார், மாவட்ட துணை தலைவர்கள் ரவி, ஸ்டீபன், துணை செயலாளர்கள் ஜான் அந்தோணி, அமலசேவியர் உள்ளிட்ட மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ள 1.7.2022 முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

    ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும், பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ஆசிரியர்க ளுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை ரத்து செய்து பழைய நிலையிலான பதவி உயர்வு வழி பள்ளிக் கல்வி இயக்குனர் பணியிடத்தை தொடரச்செய்ய வேண்டும். ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இதற்கான நிதியை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவரும், மாவட்ட செயலாளருமான எழில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட பொருளாளர் மார்ட்டின் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    • தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் அழகு சுந்தரத்திடம் பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • பழனி நாடார் எம்.எல்.ஏ. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் அழகு சுந்தரத்திடம் பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். அவர் இந்த கோரிக்கையை தி.மு.க.மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனிடம் மனுவாக அளித்திருந்தார்.

    மாவட்டச் செயலாளர், பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்ததையடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கு நேற்று பூமி பூஜை நடந்தது.

    விழாவிற்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் உதயகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பழனி நாடார் எம்.எல்.ஏ. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், துணை தலைவர் சண்முகசுந்தரம், வட்டார கல்வி அலுவலர்கள் இளமுருகன், சண்முகசுந்தரபாண்டியன், தி.மு.க. பேரூர் செயலாளர் சுந்தரபாண்டியபுரம் பண்டாரம், சேர்மன் காளியம்மாள் செல்வகுமார், மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதி வல்லம் செல்வம், கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்த், ஆனந்தராஜ், ஆவின் ஆறுமுகம், கிளைச் செயலாளர் செல்வக்குமார், அரிச்சந்திரன், தங்கராஜ், வேல்ராஜ், கருப்பசாமி, வேதம்புதூர் பிச்சையா, துரைப்பாண்டி, செல்வம், கதிரவன், அழகுதுரை, குட்டி ராஜன், அரசு ஒப்பந்ததாரர் குத்தாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொண்டி அரசு தொடக்கப்பள்ளியில் நவீன வசதிகளுடன் பாடம் நடத்தப்பட்டது.
    • நடத்தும் பாடங்களை கவனச்சிதறல் இல்லாமல் அனைத்து மாணவ, மாணவிகளுமே கவனித்து பாடத்தை கற்றுக்கொள்கின்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் புரொஜக்டர் மூலம் ஒளிபரப்பி திரையில் பாடங்கள் நடத்தப்பட்டது. இப்பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்விச்சீர் வழங்கும் விழாவில் மக்கள் சட்ட பாதுகாப்பு அமைப்பினர் புரொஜக்டர் வழங்கினர். அதில் பள்ளி தலைமை ஆசிரியை நல்லாசிரியர் சாந்தி பாடங்களை நடத்தினார்.

    இது குறித்து தலைமை ஆசிரியை சாந்தி கூறும்போது, புரொஜக்டரில் பாடம் நடத்தும் போது மாணவர்களுக்கு ஒளி மற்றும் ஒலியுடன் படத்துடன் காட்சிப்படுத்தும் வசதி உள்ளது. இதனால் பாடம் மாணவர்கள் மனதில் எளிதாக பதிவாகிறது. கரும்பலகையில் நடத்துவதைவிட இதில் நடத்தும் பாடங்களை கவனச்சிதறல் இல்லாமல் அனைத்து மாணவ, மாணவிகளுமே கவனித்து பாடத்தை கற்றுக்கொள்கின்றனர். மேலும் கற்பித்தலில் புதிய முயற்சியாக இது உள்ளது என்றார்.

    உத்தரப்பிரதேசத்தில் அரசு கட்டிடங்களை தொடர்ந்து, காந்தி சிலைக்கும் காவி நிறம் அடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GandhiStatuePaintedSaffron
    லக்னோ: 

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து அரசு கட்டிடங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. 

    சட்டசபை, காவல் நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு யோகி ஆட்சிக்கு பிறகு காவி நிறம் அடிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கும் சில இடங்களில் காவி நிறம் அடிக்கப்பட்டு, சர்ச்சை எழுந்ததையடுத்து நிறம் மாற்றப்பட்டது. 

    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளியில் உள்ள காந்தி சிலைக்கும் காவி நிறம் அடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    உ.பி. மாநிலம் சஹஜஹான்பூர் மாவட்டத்தின் பண்டா தேசில் பகுதியில் உள்ள தாகா கன்ஷியாம்பூர் கிராமத்தில் தொடக்க பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் காந்தி சிலை அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதையடுத்து, அந்த சிலைக்கு புது வண்ணம் அடிக்க வேண்டும் என முடிவானது. அதன்படி, காந்தி சிலைக்கு காவி நிறம் அடிக்கப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, உள்ளூர் காங்கிரசார் பள்ளி நிர்வாகம் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். #GandhiStatuePaintedSaffron
    ×