search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant women"

    • ஊட்டச்சத்து விழிப்புணர்வு பதாகைகள், மற்றும் சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
    • குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலதிட்டம் சார்பில் சமத்துவ வளையல் அணி விழா குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் கோலாகலமாக கொண்டா டப்பட்டது. நிகழ் ச்சிக்கு இயக்குனர் முத்துமீனா, துணை இயக்குனர் அமுதா, திட்ட அதிகாரி கருணாநிதி, குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். ஊட்டச்சத்து விழிப்புணர்வு பதாகைகள், மற்றும் சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    இதனை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு நலுங்கு வைக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள், உறவினர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு நலுங்கு வைத்து அச்சதை தூவி ஆசி வழங்கினர்.

    பின்னர் கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவு குறித்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து விளக்க்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • 81 எச்ஐவி-பாசிட்டிவ் பெண்களில், குறைந்தது 35 பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
    • பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை செய்யப்படும்.

    உத்திரபிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி கண்டறியப்பட்டுள்ளது.

    அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளித்து கண்காணித்து வருவதாக மீரட் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 16 மாதங்களில் 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியின் ஆன்டி- ரெட்ரோவைரல் தெரபி மையத்தின் அறிக்கையின்படி, "லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு குழந்தைப் பிரசவத்திற்காக வந்த 81 கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

    81 எச்ஐவி-பாசிட்டிவ் பெண்களில், குறைந்தது 35 பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

    ஆன்டி- ரெட்ரோவைரல் தெரபி (ஏஆர்டி) மையத்தின் அறிக்கையின்படி, 2022-23ம் ஆண்டுக்கு இடையில், மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியில் கர்ப்பிணிப் பெண்களிடையே 33 புதிய எச்ஐவி பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூலை 2023 வரை 13 புதிய பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 35 கர்ப்பிணிப் பெண்கள் ஏற்கனவே எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரியின் ஏஆர்டி மையத்தில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளதாக மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

    பிறந்த குழந்தைகளின் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, ஏஆர்டி மையத்தின் நோடல் அதிகாரியிடம், பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை செய்யப்படும் என்றார்.

    • குழந்தைகள், கர்்ப்பிணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.

    முதல் கட்டம் ஆகஸ்டு மாதம் 7 முதல் 12 வரையிலும், 2-வது கட்டம் செப்டம்பர் 11 முதல் 16 வரையிலும் மற்றும் 3-ம் கட்டம் அக்டோபர் 9 முதல் 14 வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தடுப்பூசி முகாம்களை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயதிற் குட்பட்ட குழந்தைகள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 577 ேபர் உள்ளதாகவும், அதில்1,845 பேருக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது. அவர்களுக்கு 823 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கலெக்டர் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரி வித்துள்ளார்.

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கான பல்துறை ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம் கடந்த வாரத்தில் கலெக்டர் தலைமையில் நடந்தது. வழக்கமாக தடுப்பூசி செலுத்தப்படும் அனைத்து மையங்களிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யவும், கர்ப்பிணி கள் மற்றும் 5 வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்கு விடுபட்ட தடுப்பூசிகளை செலுத்தவும் இந்த முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • காயத்ரிக்கும், அபிஷேக் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
    • குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த காயத்ரி திடீரென மயக்கம் அடைந்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சுடலை (வயது 52). இவர்களின் மகள் காயத்ரி (26). இவருக்கும், நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் அபிஷேக் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

    கர்ப்பம்

    காயத்ரி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று செங்கோட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென மயக்கம் அடைந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு அவர் இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் உடல்நிலை பாதிப்படைந்து திடீரென இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர்.
    • 'ஹை ரிஸ்க் மதர் டிராகிங்' எனும் மொபைல்போன் செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    தமிழகத்தில் கர்ப்பிணிகள், சிசு இறப்பை பூஜ்யமாக்க சுகாதாரத் துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிக்கலான பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களை பிரத்யேக மொபைல்போன் செயலி வாயிலாக கண்காணிக்கும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய பாதிப்புக்கு உள்ளானவர்கள், 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளின் தகவல்களை பகிரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கர்ப்பிணிகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'ஹை ரிஸ்க் மதர் டிராகிங்' எனும் மொபைல்போன் செயலியில், கர்ப்பிணிகளின் முழு விவரங்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் விவரங்களை அந்தந்த பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் பார்க்கலாம். பிரச்னைக்குரிய கர்ப்பிணிகளை அடையாளம் கண்டு எளிதில் கண்காணிக்க முடியும்.

    ஒவ்வொரு மாதமும் அவர்களின் உடல் நிலை குறித்து அறிந்து உரிய ஆலோசனைகள், சிகிச்சையை பரிந்துரைக்க முடியும். இதனால் கர்ப்பகாலங்களில் ஏற்படும் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

    • கவர்னர் தமிழிசை ஆட்டோ சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கட்டணத்தை ஆட்டோ டிரைவர்களுக்கு தொண்டு நிறுவனம் வழங்கும்.

    புதுச்சேரி:

    புதுவை கேரிங் ஆர்ம்ஸ் தொண்டு நிறுவனம் அறக்கட்டளை கர்ப்பிணி பெண்களுக்கான கட்டண மில்லா ஆட்டோ சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    கவர்னர் தொடங்கி வைத்தார் இதன் தொடக்க விழா கவர்னர் மாளிகை எதிரே நடந்தது. கவர்னர் தமிழிசை ஆட்டோ சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தொண்டு நிறுவன மேலாண் இயக்குனர் எரிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுவையில் உள்ள கர்ப்பிணி பெண்கள் 83448 68788 என்ற செல்போன் நம்பரை தொடர்பு கொண்டால் ஆட்டோ வீடு தேடி வரும். கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம். கட்டணத்தை ஆட்டோ டிரைவர்களுக்கு தொண்டு நிறுவனம் வழங்கும்.

    • சஞ்சீவி பெட்டகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
    • யோகா பயிற்சி சுகப்பிரசவத்துக்கு மிகவும் உதவுவதாக அமைந்து உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் இயங்கி வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை சார்பில் கர்ப்பிணிகளின் சுகப்பிரசவத்துக்காக நெல்லிக்காய் லேகியம், உளுந்து தைலம், மாதுளை மணப்பாகு போன்ற 9 சித்த மருந்துகள் உள்ளடக்கிய சஞ்சீவி பெட்டகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இதன் மூலம் 2,761 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர்.

    கொரோனா தொற்று காலங்களில் சித்த மருத்துவத்துக்கென தனியாக இரண்டு சிறப்பு சிகிச்சை மையங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் குடிநீர் வழங்கல், பள்ளிகளில் விழிப்புணர்வு மற்றும் யோகா, கர்ப்பிணிகளுக்கு சுக மகப்பேறு தரும் மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கல், துணை சுகாதார நிலையங்களின் மூலம் யோகா பயிற்சி, மூலிகை மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கல், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி, தொற்றா நோய்களுக்கு யோகா பயிற்சி, கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் என பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கர்ப்ப காலத்தில் ரத்தக் குறைவை நிவர்த்தி செய்யவும், சுகப்பிரசவம் ஏற்படவும் சித்த மருந்துகள் பெரிதும் உதவுகிறது. கொரோனா தொற்று காலங்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. டெங்கு வைரஸ், சாதாரண வைரஸ் தொற்று காலங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதன் மூலம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 936 பொதுமக்கள் பயன்பெற்றனர். வீட்டு சிகிச்சையிலேயே நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்.

    கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் தொற்று நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றை கட்டுப்படுத்த துணை சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இதுவரை 2317 பேர் பயன்பெற்றுள்ளனர். யோகா பயிற்சிகள் கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரச வத்துக்கு மிகவும் உதவுவதாக அமைந்து உள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
    • நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    உடன்குடி:

    தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் உடன்குடி ஊராட்சி ஓன்றியத்துக் குட்பட்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடி ஊராட்சி ஒன்றிய அரங்கில் நடைபெற்றது.

    தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அப்போது அமைச்சர் பேசியதாவது,

    தமிழக அரசு சார்பில் பெண்கள் முன்னேற்றம், பொருளாதார தன்னிறைவு, கிராமப்புற மகளிர் மேம்பாடு ஆகியவற்றை முறையாக செயல்படுத்தப்படுகிறது.

    அனத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்துகிறார். அனைத்து தரப்பு மக்களும், ஜாதி மத மோதல்கள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்றார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பத்மா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா ஆஸ்ஸாப், துணைத்தலைவர் மால்ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சி ராணி, வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வட்டார சமுதாய நல செவிலியர் பாக்கியவதி, சுகாதார மேற்பா ர்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர் சேதுபதி, முக்காணி தொடக்க கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், தி.மு.க. மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ராம ஜெயம், மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜூதீன், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ், பிரதீப், முகமது ஆபித், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சிங்கம்புணரி அருகே 50 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அர்களுக்கு சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளிசாதம், தயிர் சாதம், வெஜிடேபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஏரியூரில் திருமலை மருதீஸ்வரர் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது.

    சமூகநலன் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் இந்த வளைகாப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய தலைவர் திவ்யாபிரபு தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    விழாவில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து கன்னத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமமிட்டு, கைகளில் கண்ணாடி வளையல் அணிந்து வளைகாப்பை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு சில்வர் கிண்ணம், வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், ரவிக்கைதுணி, மஞ்சள் கயிறு, தாம்பூலத்தில் வைத்து சீதனமாக வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளிசாதம், தயிர் சாதம், வெஜிடேபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

    இந்த விழாவில் மாவட்ட திட்ட அலுவலர், வட்டார குழந்தைகள் திட்ட அலுவலர், ஏரியூர் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் முரசொலி. இவரது மனைவி இலக்கியா (வயது 19).நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவவலி ஏற்பட்டது.
    • ஜிப்மர் அருகே வந்த போது அவர்களை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வருவதாக கூறி போக்குவரத்து போலீசார் ரூ. 1000 அபராதம் விதித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் முரசொலி. இவரது மனைவி இலக்கியா (வயது 19).நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவவலி ஏற்பட்டது.

    இதனால் உள்ளூர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்த டாக்டர்கள் பிரசவ நாள் என்பதால் ஏற்கனவே சிகிச்சை பெறும் ஜிப்மருக்கு செல்ல அறிவுருத்தினர்.

    அப்போது வாகனம் கிடைக்காததால் மோட்டார் சைக்கிளில் முரசொலி, இலக்கியா, உறவினர் கலையரசி ஆகியோர் ஜிப்மருக்கு வந்துகொண்டிருந்தனர்.

    ஜிப்மர் அருகே வந்த போது அவர்களை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வருவதாக கூறி போக்குவரத்து போலீசார் ரூ. 1000 அபராதம் விதித்துள்ளனர்.

    அவர்களிடம் பணம் இல்லாததால் கட்ட முடியவில்லை. இதனால் மோட்டார் சைக்கிளின் சாவியை அங்கிருந்த போக்குவரத்து சப் -இன்ஸ்பெக்டர் பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவரும் எவ்வளவோ கெஞ்சியும் சாவியை தர சப்- இன்ஸ்பெக்டர் மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இதனால், சுமார் 2 மணி நேரம் வரையில் அங்கு கர்ப்பிணி பெண் தவித்தப்படி நின்றிருந்தார். அங்கிருந்தோர் அதை பார்த்து பாதுகாப்பு பணிக்கு வந்த உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் எடுத்து வைத்திருந்த வாகன சாவியை அளித்தார். இதன் பிறகு முரசொலி மனைவியை மருத்துவமனையில் சேர்க்க ஜிப்மருக்கு அழைத்து சென்றார்.

    • சாத்தான்குளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு அனைவருக்கும் அரசு சார்பில் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வட்டார அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் முன்னிலை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயாதுரைபாண்டியன் வரவேற்றார். இங்குள்ள தனியார் திருமண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்திருந்த 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. அனைவருக்கும் அரசு சார்பில் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய ஆணையர் ராணி , வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து கர்ப்பினி பெண்களுக்கு பல வகையான அறுசுவை உணவு வழங்கப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் திட்ட மேற்பார்வையாளர் வசந்தா, வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார திட்ட உதவியாளர் வில்லியம் நன்றி கூறினார்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • அனைத்து வட்டார ங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொடர்ந்து நடைபெறும்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளை காப்பு விழா நடந்தது.

    கா்ப்பிணிப் பெண்க ளுக்கு வளைகாப்பு பொருட்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு கா்ப்பிணிப் பெண்ணும் நிலைப்பாட்டை பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசே சமுதாய வளைகாப்பு விழாவை நடத்துகிறது. அதன்மூலம் ஏழை, பணக்காரா் என பாகுபாடின்றி ஒரே நிலையில் அனைத்து மதத்தை சேர்ந்த கா்ப்பிணிப் பெண்களுக்கு இந்த விழாவின் மூலம் 5 வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 12 வட்டா ரங்களில் உள்ள 43 தொகுதிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 611 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். அதில் ஒரு தொகுதிக்கு 50 கர்ப்பிணிப் பெண்கள் வீதம் 43 தொகுதிகளில் 2 ஆயிரத்து 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற உள்ளது.

    அனைத்து வட்டார ங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொடர்ந்து நடைபெறும்.

    கா்ப்பிணி தாய்மார்கள், கா்ப்பகால மாதம் முதல் தொடங்கி, 10 மாதமும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து, சாியான மாதாந்திர பாிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தை யைப் பெற்றெடுப்பதுடன், தானும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

    அதன்படி, தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயா்தர சிகிச்சை வழங்கப்பட்டு, தற்போது கா்ப்பகால உயிரிழப்பு என்பது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் 150 கா்ப்பிணி தாய்மா ர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1000 தொகையை வழங்கினார்.

    திருப்பத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) பரமேஸ்வரி, நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் புசலான், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா் தங்கம், திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி சேகர், ஹரி சரண்யா, திருப்பத்தூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×