search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prawn Recipes"

    இட்லி, தோசை, சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் தேங்காய் சேர்த்த இறால் குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    பூண்டு - மூன்று பல்
    தக்காளி - மூன்று
    எண்ணெய் - தேவையான அளவு
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    பட்டை - சிறிதளவு
    கறிவேப்பிலை - மூன்று கொத்து
    மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    தேங்காய் பால் -  தேவையான அளவு
    சீரகம் - கால் டீ ஸ்பூன்



    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்க வேண்டும்.

    சோம்பை நன்றாக தட்டி வைக்க வேண்டும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் இறாலை சேர்க்க வேண்டும்.

    இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    சூப்பரான தேங்காய் சேர்த்த இறால் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இறால் முருங்கைக்காய் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்காய் - 1
    இறால் - கால் கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    கரம் மசால் பொடி - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    அரைத்த தேங்காய் விழுது - 2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு,
    கடுகு - அரை ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பொடித்த மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும்.

    பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியவுடன் முருங்கைக்காய் இறால் சேர்த்து கிளறி விடவும்.

    5 நிமிடம் கழித்து கரம் மசாலா சேர்த்து, தேவைாயன அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கடாயை மூடிவைத்து 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.

    எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சுவையான இறால் முருங்கைக்காய் கிரேவி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ், இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 2 கப்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    வெதுவெதுப்பான தண்ணீர்,
    உப்பு - தேவைக்கு.
    இறால் -  200 கிராம்,
    சீஸ் - 100 கிராம்,
    வெங்காயம் - 2,
    பெங்களூர் தக்காளி - 1,
    குடைமிளகாய் - 1/4 கப்,
    கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை

    கொத்தமல்லி, குடை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கோதுமை மாவில், உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்திகளாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    இறால், உப்பு, மசாலாத்தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்தவுடன் அதில் கெர்த்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.

    சப்பாத்தியில் வெண்ணெய் தடவி இறால் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான இறால் சீஸ் ரோல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×