search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power loom workers"

    • விசைத்தறி சங்க நிர்வாகிகள் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நடராஜ் ,சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம்:

    2022-2023-ம் ஆண்டு மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது சம்மந்தமான பேச்சுவார்த்தையானது மங்கலம் ஊராட்சி-சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கலையரங்க வளாகத்தில் நடைபெற்றது.இந்த ஆண்டு போனஸ் பேச்சுவார்த்தையானது மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க நிர்வாகிகள் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது

    இந்த போனஸ் பேச்சுவார்த்தையின் இறுதியாக 2022-2023-ம் ஆண்டு (இந்த ஆண்டு) மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.16 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் மங்கலம் பகுதி விசைத்தறி உரிமையாளர் சங்கம் தரப்பில் மங்கலம் பகுதி விசைத்தறி சங்கத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால், மங்கலம் விசைத்தறி சங்க செயலாளர் பழனிச்சாமி, துணைச்செயலாளர் விஸ்வநாத் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி சங்க நிர்வாகிகளான வெங்கடாசலம்,முத்துகுமார், மனோகர் ஆகியோரும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்கம் தரப்பில் விசைத்தறி சம்மேளன மாநில தலைவர் முத்துசாமி, விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசாமி, அண்ணா தொழிற்சங்க திருப்பூர் ஒன்றிய செயலாளர் எஸ்.சுப்பிரமணி , ஐ.என்.டி.யு.சி.திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நடராஜ் ,சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பிரச்சினை தொடர்பாக நெல்லை தொழிலாளர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால் மீண்டும் 18-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
    நெல்லை:

    விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு கேட்டும், ரூ.300 விடுமுறை கால சம்பளம் கேட்டும் சங்கரன்கோவிலில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சுப்புலாபுரம் கிராம பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களும் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பான 2-வது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பாளையங்கோட்டை திருமால்நகரில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தொழிலாளர் துறை உதவி ஆணையர் அப்துல் காதர் சுபைர் தலைமை தாங்கினார். தொழிற்சங்கம் சார்பில் சி.ஐ.டி.யு. விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, துணை செயலாளர் மாணிக்கம், புளியங்குடி விசைத்தறி தொழிலாளர் சங்க செயலாளர் வேலு, விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் சங்க தலைவர் ஆர்.ஆர்.சுப்பிரமணியன், செயலாளர் பி.எஸ்.ஏ. சுப்பிரமணியன், பொருளாளர் முத்துசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் சார்பில் 60 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் 2014-15 ஆண்டுக்கான அடிப்படை கூலிதான் தரமுடியும் என்றும், அரசு நிர்ணயம் செய்த கூலியை வழங்க முடியாது என்று விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் கூறினர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல், தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து இது தொடர்பான 3-வது கட்ட பேச்சுவார்த்தையை வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். 
    ×