search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "population"

    • பேச்சுப்போட்டி மற்றும் கருத்தரங்கில் சிறப்பாக உரையாற்றிய மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் விளைவு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    சுரண்டை:

    நெல்லை மாவட்ட மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் சுரண்டையில் நடைபெற்றது. கருத்தரங்கை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.விழிப்புணர்வு பேரணியை பழனி நாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், வட்டார சுகாதார ஆய்வாளர் சாந்தி, மருத்துவர்கள் மோகன் ராவ், மீனா, அன்னலட்சுமி நிறுவனத்தின் முதல்வர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேச்சுப்போட்டி மற்றும் கருத்தரங்கில் சிறப்பாக உரையாற்றிய மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் விளைவு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்‌.கே.டி.ஜெயபால், தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர் மன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், தி.மு.க. அவைத்தலைவர் சுப்பிரமணியன், கூட்டுறவு கணேசன், கே.டி.பாலன், சார்லஸ், கோமதி நாயகம், சுதன் ராஜா, பிரபாகர், அரவிந்த் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • உலக மக்கள்தொகை நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • ஐ.நா. அறிக்கைபடி 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி உலக மக்கள் தொகை 2030-ம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050-ம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது.

    மேலும், இது 2080-களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் என்றும், 2100 வரை அந்த நிலையில் இருக்கும் என்றும் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:

    உலக மக்கள்தொகை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பூமியில் மக்கள்தொகை 8 பில்லியனாக அதிகரிப்பதை எதிர்பார்க்கிறோம். இது நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், நமது பொதுவான மனிதகுலத்தை அங்கீகரிப்பதற்கும், ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கண்டு வியப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.

    நீட்டிக்கப்பட்ட ஆயுட்காலம் மற்றும் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் வியத்தகு முறையில் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இது நமது கிரகத்தை கவனித்துக்கொள்வதற்கான நமது அனைவருக்குமான பொறுப்பை நினைவூட்டுகிறது. மேலும், ஒருவருக்கொருவர் நமது கடமைகளை நாம் இன்னும் எங்கே இழக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க ஒரு தருணம் என தெரிவித்தார்.

    ஐ.நா.வின் அறிக்கையின் படி 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா விஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    2022-ல் தலா 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் சீனாவும் இந்தியாவும் இந்த பிராந்தியங்களில் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.

    அறிக்கையின்படி, சீனாவின் 1.426 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2022-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1.412 பில்லியனாக உள்ளது. இது 2023-ம் ஆண்டில் இந்தியா சீனாவை மிஞ்சும். 2050-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 1.668 பில்லியனாக இருக்கும். அப்போது சீன மக்கள்தொகை 1.317 பில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    சீனாவை விட இரு மடங்கு வேகமாக இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி கண்டு வருவதை ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. #UN #IndiaPopulation
    நியூயார்க்:

    உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.

    இந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஐ.நா. சபையின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அவை வருமாறு:-

    * 1969-ம் ஆண்டு, இந்தியாவின் மக்கள் தொகை 541.5 மில்லியனாக இருந்தது. 1994-ல் இது, 942.2 மில்லியனாக அதிகரித்தது. தற்போது (2019) இந்திய மக்கள் தொகை 136 கோடி ஆகும்.

    * 2010-2019 ஆண்டுகள் இடையே இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.

    * சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி. 1994-ல் இது 123 கோடியாக இருந்தது. 1969-ல் 803.6 மில்லியனாக இருந்தது.

    2010-2019 ஆண்டுகள் இடையே சீனாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 0.5 சதவீதம் என்ற அளவுக்குத்தான் வளர்ந்து வந்துள்ளது.

    அதே நேரத்தில் இதே காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1.2 சதவீதம். ஆக சீனாவை விட இரு மடங்குக்கும் அதிகமான வேகத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது.



    * இந்தியாவில் 1969-ம் ஆண்டில் ஒரு பெண்ணின் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம், 5.6 ஆக இருந்தது.

    மக்கள் தொகை வளர்ச்சி விகிதாச்சாரத்தை அப்போது குறைப்பதற்கு அரசு பல நடவடிக்கைகள் எடுத்தது.

    அதன் பயனாக 1994-ல் இந்திய பெண்ணின் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம் 3.7 ஆக குறைந்தது.

    தற்போது படித்தவர்கள், வேலை பார்க்கிறவர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை என்பதை கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டமாக ஆக்கிவிட்டனர். இதன் காரணமாக தற்போது ஒரு பெண்ணின் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம் 2.3 ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் மனிதர்களின் வாழ்நாள் நீடித்துக்கொண்டே வருகிறது.

    1969-ல் வாழ்நாள் என்பது 47 ஆண்டுகளாக இருந்தது. 1994-ல் இது 60 ஆண்டுகள் என்ற அளவில் உயர்ந்தது. தற்போது அது 69 ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இது சாதனை அளவாக பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் தற்போது 14 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் ஆகும். 10 முதல் 24 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கையும் 27 சதவீதமாகவே உள்ளது. ஆனால் 15 முதல் 64 வயது வரையிலானவர்களின் எண்ணிக்கை 67 சதவீதமாக உள்ளது.

    65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக உள்ளது.  #UN #IndiaPopulation

    ×