search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ponds"

    • மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது, பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது
    • 1,292 பிராணிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், திறந்தவெளி கிணற்றில் விழுந்து கடந்த மூன்றாண்டில் மட்டும் 336 பேர் இறந்துள்ளனர்.மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது மக்களை பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடி க்கை மேற்கொள்ளவும், பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் நேரடி கண்காணிப்பில், அந்தந்த மாவட்டங்களில், பேரிடர் சார்ந்து மக்கள் எதிர்கொ ள்ளும் முக்கியமான பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிராம,நகர்ப்புறங்களில் உள்ள குளம், குட்டைகளில் குளிக்க, மீன்பிடிக்க செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலர் நீரில் சிக்கி பலியாகின்றனர்.நெடுஞ்சாலை ஓரங்களில் திறந்து நிலையிலும், வேலி அமைக்கப்படாத கிணற்றிலும் தவறி விழுந்து பலரும் உயிரிழக்கின்றனர்.

    உயரும் பலி எண்ணிக்கை : கடந்த 2020ல் 104 பேர், திறந்தவெளி கிணறு, குளங்களில் விழுந்து இறந்துள்ளனர். 2021ல் 109 பேர்; 2022ல் 123 பேர் என மூன்றாண்டில் மட்டும் 336 பேர் பலியாகியுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்க ளுக்கு கடந்த 2020ல் குளம் மற்றும் கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்க கேட்டு 687 அழைப்புகள் வந்துள்ளன. 2021ல் இது 1,308,2022ல் இது 2032 அழைப்புகளாக அதிகரித்துள்ளது.இதில் 80 சதவீதம் அழைப்புகள் திறந்தவெளி கிணற்றில் விழுந்தவர்களை மீட்பது தொடர்பாக தான்.மனிதர்கள் மட்டுமின்றி பூனை, நாய், மான் உள்ளிட்ட பிராணிகளும் அவ்வபோது திறந்தவெளி கிணற்றில் விழுகின்றன.கடந்த 2020ல் 356, 2021ல், 846, கடந்த 2022ல், 1,292 பிராணிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.
    • தொண்டைமான் குளம், கோணப் பெருமாள் குளம், அத்தியூத்து குளம் உள்ளிட்ட பல்வேறு குளக்கரைகளில் பனைவிதைகள் நடப்பட்டன.

    கடையம்:

    கடையம் யூனியனுக் குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி மற்றும் மேட்டூர் புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து கடையம் பகுதியிலுள்ள பல்வேறு குளக்கரைகளில் சுமார் 5 ஆயிரம் பனை விதைகளை நட்டனர். நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    இதில் ஊராட்சி குளங்கள், ஊராட்சி ஒன்றிய குளங்கள், பொதுப்பணித்துறை குளங்கள் ஆகியவை அடங்கும். சென்னல் தாபுதுக்குளம், இலவந்தா குளம், தொண்டைமான் குளம், கோணப் பெருமாள் குளம், அத்தியூத்து குளம், செட்டியூரான்குளம், தெற்கு நொச்சிகுளம், உலகளந்தா பிள்ளை குளம், வேட்டைகாரன் குளம், புங்கன்குளம், ஆலடிகுளம், அனந்த பத்மநாயக்கன்குளம், வடக்கு நொச்சி குளம், பிள்ளைகுளம் மற்றும் மேல வவ்வால் குளம், திருஅம்பலப்பேரி குளம், பாணான்குள விரிசு திருத்தடி குளம் போன்ற பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் பனைவிதைகள் நடப்பட்டன. இதில் புனித ஜோசப் கல்லூரி பேராசிரியர் பிரான்சிஸ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ரா பாபு, தொழிலதிபர் ரவி, ஊராட்சி செயலர் பாரத், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • தேவகோட்டையில் ஊரணி மற்றும் குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்- நகர் மன்றத்தலைவர் உறுதியளித்தார்.
    • முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அன்பரசன் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தேவகோட்டை,

    தேவகோட்டை நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர் மன்றத்தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அன்பரசன் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ் பேசுகையில், யூனியன் ஸ்டாப் அருகே திருப்பத்தூர் சாலையில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்படும் முன் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டும் என்றார்.

    நகர்மன்றத்தலைவர் பதிலளிகையில், திருப்பத்தூர் சாலையில் ராம்நகரில் இருந்து ஒத்தக்கடை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இதில் நகர்மன்ற உறுப்பினர் பாலமுருகன் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    நகர்மன்ற உறுப்பினர் அய்யப்பன், தனது வார்டில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தியதற்கு நன்றி தெரிவித்தார். நகர்மன்ற உறுப்பினர் முத்தழகு, நகராட்சியில் அதிக வரி விதிப்பு காரணமாக மக்கள் சிரமப்படுகின்றனர். அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அதற்கு ஆணையாளர் தமிழகம் முழுவதும் ஒரே ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது என்றார்.

    நகர் மன்ற உறுப்பினர் பாலமுருகன் நகரில் உள்ள ஊரணி மற்றும் குளங்களை பொதுமக்கள் குடிநீருக்காகவும், குளிப்பதற்காகவும் பயன்படுத்தி வந்தனர் ஆனால் தற்போது ஊரணி, குளங்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது அதனை தூர்வாரி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த நகர் மன்றத்தலைவர் தற்பொழுது கால்வாய்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. அதே போல நகரில் உள்ள ஊரணி மற்றும் குளங்கள் தூர்வாரப்படும் என்றார்.

    • விவசாயிகள் உபரி நீரை குளங்களில் தேக்கி வைப்பதும் உண்டு.
    • விளைநிலங்களில், சாகுபடிக்கு ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன.

    உடுமலை :

    உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 118 குளம், குட்டைகளும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 74,மடத்துக்குளம் ஒன்றியத்தில், 25க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.இதில், கால்வாய் மற்றும் சிற்றாறுகள் வாயிலாக, நீர் வரத்து கிடைக்கும் குளங்கள், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகின்றன.பிற குளங்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

    இக்குளங்களுக்கு பருவமழை காலத்தில் மட்டும் நீர்வரத்து இருக்கும்.பி.ஏ.பி., பாசனப்பகுதிகளில், விவசாயிகள் உபரி நீரை குளங்களில் தேக்கி வைப்பதும் உண்டு. சுற்றுப்பகுதி விளைநிலங்களின் நிலத்தடி நீர் மட்டத்துக்கும், கிணற்றுப்பாசனத்தின் வாயிலாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில், சாகுபடிக்கு ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன.இந்நிலையில் குறிப்பிட்ட இடைவெளியில் தூர்வாராதது, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால், நீர் வழிப்பாதை மறைந்து போய் மழைக்காலத்தில், கூட குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்காத நிலை இருந்தது.

    நீண்ட கால இடைவெளிக்குப்பிறகு மத்திய அரசின், 'ஜல் சக்தி அபியான்', திட்டத்தில், குளம் மற்றும் நீர் வழிப்பாதைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் குறிப்பிட்ட சில குளங்களில், மாநில அரசு நிதி பங்களிப்புடன், துார்வாருதல், மதகுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், அதன்பிறகு மழைக்காலத்தில், பெரும்பாலான குளங்கள் நிரம்பின.பிறகு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

    இதனால், பெரும்பாலான குளங்களுக்கான நீர் வழிப்பாதை புதர் மண்டிக்காணப்படுகிறது. சமீபத்தில் உடுமலை பகுதியில் தொடர் மழை பெய்தும் பெரும்பாலான குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கவில்லை.வடகிழக்கு பருவமழை சீசனில், இக்குளங்கள் நிரம்பும் வகையில், உடனடியாக நீர் வழிப்பாதைகளை சீரமைக்கவும், குளங்களின் கரைகளை வலுப்படுத்தி, மழை நீரை சேகரிக்கவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதியின் கீழ் இப்பணிகளை, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்கள் வாயிலாக மேற்கொள்ள உத்தரவிட்டால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • தாமிரபரணி ஆற்றின் திருவைகுண்டம் அணை யின் தென்கால்உபரிநீர் முழுவதையும் குலசை தருவைக்குளம் வழியாகமணப்பாடு கடலுக்குமட்டும் அனுப்ப வேண்டும்
    • 15 நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் தங்கி இருந்த தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை உடன்குடி பகுதியில் உள்ள தி.மு.கவினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப் பதாவது:-

    தாமிரபரணி ஆற்றின் திருவைகுண்டம் அணை யின் தென்கால்உபரிநீர் முழுவதையும் குலசை தருவைக்குளம் வழியாகமணப்பாடு கடலுக்குமட்டும் அனுப்ப வேண்டும் என்றும்,

    வருடந்தோறும் ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலுக்கு நேரடியாக செல்லும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் அளவை முன்கூட்டியே கணக்கிட்டு, அதை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்பே உள்ள மருதூர்மேலக்கால் அணைக்கட்டு மூலம் உபரிநீரை தெற்கே திருப்பி விட்டு உடன்குடியைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு குளங்களான செம்மறிபடுகைகுளம், சடையனேரிகுளம், தாங்கைக்குளம், அய்யனார்குளம், நரிக்குளம், தண்டுபத்து வடக்குகுளம், மானாட்சிகுளம், குண்டாங்கரைகுளம், சிறுகுளம், இடையர்குளம். தேரிகுண்டாங்கரை உட்பட 15 நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மேலும் எஞ்சிய தண்ணீரை தாங்கைக்குளம் வழியாக கருமேனிஆற்றில்விட்டு மணப்பாடு கடலுக்கு அனுப்பினால் போதும்.

    மணப்பாடுகடல்முகம் இயற்கையாக அமைந்து இருப்பதால் உடன்குடி சுற்றுவட்டார பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் புன்னக்காயல் கடலுக்கு நேர்வழியில் போவதை மாற்றிட முடியும்.

    மேலும் உடன்குடியை சுற்றி மணப்பாடு கடலுக்கு அனுப்பினாலே உடன்குடி வட்டாரபகுதியில் உள்ள நிலத்தின்நீர் வளத்தை பாதுகாக்க முடியும், உடன்குடியில் பாசன குளங்கள் எதுவுமில்லை.

    அனைத்துமே நீர்ப்பிடிப்பு குளங்கள் தான்.பம்புசெட் மூலமே விவசாயம் நடைபெறுவதால் அவைஉறிஞ்சும் தண்ணீரை மேற்கண்ட குளங்கள் மூலமாக வருடந்தோறும் கொடுத்தாலே போதும், 15 நீர் பிடிப்பு குளங்களையும் காப்பாற்றி கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை திருப்பி விட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறியிருந்தது.

    மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் தமிழகஅரசின்சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் இளங்கோ, கூட்டுறவு வங்கி தலைவர் அசாப்அலி பாதுஷா, தண்டுபத்து பாலகணேசன், சேக் முகமது, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சு குழி மூலம் நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது.
    • குப்பை, கழிவுகளும் குளம், குட்டையில் கலப்பதால் நீர்நிலை மாசுபடுகிறது

    அவிநாசி :

    கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சு குழி மூலம் நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது. பல இடங்களில் கழிவுநீர் நேரடியாக குளம், குட்டைகளில் கலக்கிறது. கழிவுநீருடன் குப்பை, கழிவுகளும் குளம், குட்டையில் கலப்பதால் நீர்நிலை மாசுபடுகிறது.இதனை குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் கட்டமைப்பில், செங்குத்து உறிஞ்சுகுழி அமைக்க ஊரக வளர்ச்சி முகமை துறையினர் ஊக்குவித்து வருகின்றனர்.

    அவ்வகையில் கால்வாய் அல்லது வடிகாலில் பொருத்தப்பட்டுள்ள சல்லடையில் தண்ணீருடன் வழிந்தோடி வரும் குப்பை, பாலிதீன் போன்ற பொருட்கள் தேங்கி நின்று தண்ணீர் மட்டும் உறிஞ்சுகுழியில் விழுந்து நிலத்தடிக்கு செல்லும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் பல இடங்களில் இத்திட்டம் உரிய பலன் தருவதில்லை என்ற புகார் உள்ளது. குறைந்த அளவு தண்ணீர் வழிந்தோடி வரும் கால்வாயில் ஏற்படுத்தப்படும் இந்த கட்டமைப்பு உரிய பலன் தருவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
    • சோலார் ஆற்றலில் இயங்கும் சென்சார் அவுட்லெட் சிஸ்டம் எனப்படும் உபகரணங்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.

    அவிநாசி :

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. இதில் 32 பொதுப்பணித்துறை குளம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்டு 42 குளங்கள், கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 971 குட்டைகள் என 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.தேர்வு செய்யப்பட்டுள்ள குளம், குட்டைகளில் சோலார் ஆற்றலில் இயங்கும் சென்சார் அவுட்லெட் சிஸ்டம் எனப்படும் உபகரணங்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.

    மொத்தமுள்ள 1,045 குளம் குட்டைகளில் 947 குளம், குட்டைகளில் இந்த உபகரணம் பொருத்தப்பட்டு விட்டது.இதன் மூலம் ஒரே இடத்தில் இருந்தபடியே குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்பட்ட தண்ணீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள முடியும். திட்டப்பணி 95 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீர் செறிவூட்டப்பட வேண்டிய குளம், குட்டைகளை தூர்வாருவதுடன் அதில் செறிவூட்டப்படும் தண்ணீரை நிலத்தடிக்குள் செலுத்தும் வகையில் உறிஞ்சுக்குழி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் கூறியதாவது:-அத்திக்கடவு நீர் செறிவூட்டப்பட உள்ள பெரும்பாலான குளம், குட்டைகள் புதர்மண்டிக் கிடக்கின்றன. குளம், குட்டைகளில் நிரம்பும் தண்ணீர், வெயில் காலங்களில் விரைவில் ஆவியாகிவிடும் என்பதால் அக்குளம், குட்டைகளை தூர்வாரி தேங்கும் நீரை நிலத்தடிக்குள் செலுத்தும் வகையில் உறிஞ்சு குழிகளை அமைக்க வேண்டும்.அந்தந்த கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குளம், குட்டைகளில், 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் இத்தகைய பணிகளை மேற்கொண்டால், செறிவூட்டப்படும் தண்ணீர் நிலத்தடியை சென்றடையும்.குறைந்தபட்சம் பொதுப்பணித்துறை குளங்களிலாவது இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மணலை எந்த சூழ்நிலையம் எடுத்து வெளியே கொண்டு செல்லக்கூடாது.
    • தண்ணீர் வரும் கால்வாய்களை பராமரிப்பு செய்ய வேண்டும்.

    உடன்குடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச் சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு உடன்குடி வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட சடையனேரிகுளம், தாங்கை குளம், தருவைகுளம் மற்றும் ஊர் கூடி ஊரணி அமைப்போம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய குளங்கள், குட்டைகள் ஆகியவற்றை மழை காலங்களுக்கு முன்பு முழுமையாக பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.

    இவைகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களையும் பராமரிப்பு செய்ய வேண்டும். இங்கே எடுக்கப் படும் மணலை கரையில் வைத்து கரையை உயர்த்த வேண்டும். அங்குள்ள மணலை எந்த சூழ்நிலையம் எடுத்து வெளியே கொண்டு செல்லக்கூடாது. இப்பகுதியில் உள்ள மண் வளம் மற்றும் மணல் பாதுகாக்க பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • பல ஆயிரம் ஏக்கர் விவசாய சாகுபடிக்கான நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன.
    • தளி கால்வாய் வழியாக அரசாணை அடிப்படையில் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்கள் வாயிலாக நேரடியாக 2,643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பல ஆயிரம் ஏக்கர் விவசாய சாகுபடிக்கான நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், இக்குளங்கள் உள்ளன.திருமூர்த்தி அணையில் இருந்து தளி கால்வாய் வழியாக அரசாணை அடிப்படையில் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்தாண்டு கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததால் குளங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.அவ்வகையில் 6 குளங்களில், மொத்த நீர் இருப்பில் 50 சதவீதத்தை விட குறைந்துள்ளது. ஒரு குளத்தில் மட்டும் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.செங்குளம் 74.84 ஏக்கர், நீர்மட்ட உயரம் 10 அடி, 12.74 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும்.

    தற்போதைய நிலவரப்படி 3.20 அடி நீர்மட்டம், மட்டுமே உள்ளது. மொத்தமுள்ள கொள்ளளவில் 22 சதவீத நீர் இருப்பே தற்போது உள்ளது. ஒட்டுக்குளம் 90 ஏக்கர் பரப்பளவில் 10 அடி நீர்மட்ட உயரம், 14.11 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும்.

    குளத்தில் 53.86 சதவீத நீர்இருப்பு உள்ளது.பெரியகுளத்தில் 37.13 சதவீதம், செட்டிக்குளம் 34.55, கரிசல் குளம் 16.78, தினைக்குளம் 36.79, வளையபாளையம் குளத்தில் 48.39 சதவீத நீர் இருப்பே உள்ளது. 6 குளங்களில், 50 சதவீதத்துக்கும் குறைவாக நீர் இருப்பு சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை காலத்தில் குளங்களுக்கு குறைந்தளவே நீர்வரத்து இருக்கும். பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு, மழையின்மை உள்ளிட்ட காரணங்களால், நீர்மட்டம் வேகமாக குறைந்து விட்டது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன காலம் துவங்கும் முன் குளங்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் குளங்களுக்கான வரத்து கால்வாய்களை தூர்வாரி நீர் திருட்டை தடுக்க வேண்டும். மேலும், குளங்களின் முழு கொள்ளளவில் தண்ணீர் நிரம்புகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சீசன், ஜூன் மாதத்தில் துவங்குவது வழக்கம். இந்தாண்டு கோடை காலத்தில் பெய்த மழையால், மானாவாரி சாகுபடிக்கான விதைப்பை விவசாயிகள் மேற்கொண்டனர்.ஆனால் தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்காமல் வறண்ட வானிலை நிலவியது. இதனால் மானாவாரி சாகுபடியில் பயிர்கள் பாதித்தது. பருவமழையை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பரவலாக பருவமழை பெய்யத்துவங்கியுள்ளது. மழையின் தாக்கத்தால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இருப்பினும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடையவில்லை.அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், விரைவில் மழை தீவிரமடையும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    • மதுரையில் 104 குளங்கள் புதிதாக அமைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • ஆய்வின்போது கூடுதல் கலெக்டர், செயற்பொறியாளர் உடனிருந்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம், திருமங்கலம் சாத்தங்குடி ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் 'அம்ரித் சரோவர்' திட்டத்தின் கீழ் புதிய ஊரணி (குளம்) அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், செயற்பொறியாளர் மதுமதி ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் கலெக்டர் அனீஷ்சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் கிராமப்புறங்களில் நீர்நிலைகளை மேம்படுத்துவது தொடர்பாக அம்ரித் சரோவர் என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதிக்குள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியத்திற்கு 8 குளங்கள் வீதம் மொத்தம் 104 குளங்கள் புதிதாக உருவாக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கிராம ஊராட்சிகளில் மேற்கண்ட திட்டம் செயல்படுத்தப்படும் போது அந்த பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள், மூத்த குடிமக்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மூலம் கொடி அசைத்து பெயர் பலகைகள் வைத்து பணிகள் தொடங்க வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றுத் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு, குண்டாறு உள்பட 8 அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கட்டிற்கு வரும் 4 ஆயிரம் கன அடிநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே போல் 156 அடி கொண்ட சேர்வலாறு அணைக்கட்டில் இருந்தும் 9 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளும் நிரம்பி அவற்றில் இருந்து சுமார் 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் அனைத்தும் தாமிரபரணியில் கலக்கிறது. இதனால் தாமிரபரணியில் 15 ஆயிரம் கனஅடி நீர் வெள்ளமாக செல்கிறது.இருப்பினும் நெல்லை மாவட்டத்தில் 6 அணைக்கட்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 அணைக் கட்டும் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணைக்கட்டு மூலமாக மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மூலமாக வடகால், தென்கால் ஆகிய கால்வாய் வழியாக 46 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இங்கு சுமார் 50-க்கு மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் தற்போது வரை 20 சதவீத குளங்கள் கூட முழுமையாக நிரம்பவில்லை.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, வெள்ளக் காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் இருப்பதற்காகத்தான் சடையனேரி கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உடன்குடி பகுதி மற்றும் அதன் வழியாக சுமார் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் பயன்பெறும். இதையடுத்து கலெக்டர் சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். ஆனால் எங்கள் பகுதிக்கு கலெக்டர் கூறியபடி தற்போது வரை தண்ணீர் வரவில்லை. இதற்கான எந்தவித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.

    மேலும் அதிகாரிகள் முறையாக தண்ணீர் பகிர்மானத்தினை கையாளதா காரணத்தினால் தான் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்துள்ள மழை மற்றும் ஆற்றில் வருகின்ற தண்ணீரினை வைத்து தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன குளங்களை நிரப்பி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆற்றுத்தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜி.வி.மாதையன் தலைமை தாங்கினார். பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர்கள் முனிராஜ், லட்சுமி மாது, சட்டதிருத்தக்குழு இணை செயலாளர் தாமரைசெல்வன், ஆதி திராவிடர் நலக்குழு இணை செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 3-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையொட்டி மாவட்டம் முழுவதும் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 1,450 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 முகவர்களை நியமித்து அற்கான பட்டியலை தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. பெரும்பாலான கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பு மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி அளவில் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், சித்தார்த்தன், கோபால், குமரவேல், செல்வராஜ், தேசிங்குராஜன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் முத்துலட்சுமி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். 
    ×