என் மலர்
நீங்கள் தேடியது "Pond renovation work"
- ரூ.1 கோடி மதிப்பில் பணிகள் மும்முரம்
- மண்புழு உரம் தயாரித்தல், விற்பனை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.70 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டிடம், ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையம், ரூ.7 லட்சத்தில் தேவரடியான் குளம் சீரமைப்பு பணி, ரூ.1.83 லட்சத்தில் கழிப்பறை கட்டிடம், ரூ.3 லட்சத்தில் திடக்கழிவு உரக்குழி மண்புழு தயாரித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை, கூடுதல் ஆட்சியர்கள் ரிஷப் (திருவண் ணாமலை), ஸ்ருதன் ஜெய் நாராயணன் (விழுப்புரம்), பிரியங்கா (திருவாரூர்), சரண்யா (கடலூர்) ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்தல், பிளாஸ்டிக் அகற்றுதல், மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் விற்பனை குறித்து தூய்மைப் பணியாளர்களிடம் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் கோவேந்தன், உதவி பொறியாளர்கள் சரவணன், சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பாலமுருகன், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி தெப்பக்குளத்தை சீரமைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். கடந்த 3-ந் தேதி முதல் பராமரிப்பு பணி தொடங்கியது. இதனால் பக்தர்கள் தெப்பக்குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டு குளத்தில் இருந்த பழைய தண்ணீர் வெளியேற்றப்பட்டன.
மேலும் குளத்தில் வீசிய நாணயங்கள், துணிகள் அப்புறப்படுத்தப்பட்டு மராமத்து பணிகள் நடைபெற்றது. நேற்று மாலை மராமத்து பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து தெப்பக்குளத்தில் புதியதாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். #TirupatiTemple






