search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police திருட்டு"

    திருப்பத்தூரில் பஸ்சில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    ஒசூரை சேர்ந்தவர் குமார் (வயது 42). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சமியா (38). இவர்களுக்கு 1 மகன் 1 மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக குமார் தனது மனைவியுடன் ரூ.80 ஆயிரம் பணம் மற்றும் 7 பவுன் நகையை ஒரு பையில் எடுத்து கொண்டு இன்று காலை திருப்பத்தூருக்கு பஸ்சில் பயணம் செய்து வந்தார்.

    பண பையை சமியா வைத்திருந்து உள்ளார். திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே வந்த போது சமியா வைத்திருந்த பண பை காணாமல் போயிருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதி கத்திகூச்சலிட்டனர். பின்னர் இது குறித்து திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர்கள், குற்றத்தை ஒப்புக்கொள்ள தங்களிடம் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக போலீசார் மீது குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #gaurilankesh
    பெங்களூர்:

    பெங்களூரை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இடதுசாரி கொள்கையுடைய கவுரி லங்கேஷை இந்துத்துவா ஆதரவாளர்கள் சுட்டுக்கொன்றதாக கர்நாடக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க சிறப்பு புலனாய்வுப்படை அமைக்கப்பட்டது. இதில் எந்த துப்பும் துலங்கவில்லை.

    கொலை நடந்த ஒரு ஆண்டுக்கு பின் மராட்டிய தீவிரவாத தடுப்பு படை போலீசாரிடம் சுதன்வா கொன்தலேகர், நரேந்திர தபோல்கர், கர்பிர்ஜி ஆகிய 3 பேர் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கவுரி லங்கேஷை குறிபார்த்து சுட்டுக்கொன்றதாக பரசுராம் வக்மரே, மனோகர் எடவே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான குற்றவாளிகள் அனைவரும் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    இவர்கள் இருவரும் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் பரசுராம் வக்மரே, மனோகர் எடவே ஆகியோரை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்று ஆஜர்படுத்தினர்.

    பின்னர் வெளியே வந்த இருவரும் நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்களுக்கு கவுரி லங்கேஷ் கொலையில் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அந்த கொலையில் ஈடுபடவில்லை. போலீசார் தான் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி ரூ.25 லட்சம் பேரம் பேசினார்கள் என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டனர்.

    இதனால் கவுரி லங்கேஷ் கொலையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அப்படியானால் உண்மையான குற்றவாளிகள் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலையாளிகள் திடீர் என்று போலீஸ் மீது குற்றச்சாட்டுகள் கூறுவதால் தங்கள் மீதான புகாரை திசை திருப்பும் செயலா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #gaurilankesh
    சித்தோடு அருகே வீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

    ஈரோடு:

    சித்தோடு அருகே உள்ள நடுப்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் உமா சங்கர் (வயது 30).

    மேல் வீட்டில் உமாசங்கர் தனது குடும்பத்துடனும், கீழ் வீட்டில் அவரது பெற்றோர் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் உமா சங்கர் மற்றும் அவரது பெற்றோர் என அனைவரும் சேர்ந்து வீட்டை பூட்டி விட்டு காரைக்குடிக்கு சென்று விட்டனர்.

    ஊருக்கு சென்று விட்டு நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது மேல் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டின் உள்ளே பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவின் உள்ளே இருந்த 5 பவுன் நகை மாயமாகி இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

    ×