search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police check"

    புதுச்சேரியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மதுபாட்டில் கடத்தியதாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக ரோந்து செல்லுமாறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபத்திரசாமி, தமிழரசன் மற்றும் போலீசார் மரப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது தேங்காய்திட்டு பகுதியில் இருந்து 2 பேர் 2 ஸ்கூட்டியில் வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்த போது ஸ்கூட்டியில் இருந்த பைநிறைய மதுபாட்டில்கள் இருந்தது.

    மேலும் சீட்டுகளின் உள்பகுதியிலும் மது பாட்டில்கள் மறைத்து வைத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த தியாகு (வயது 30) டாட்டா ஏசி டிரைவர் என்பதும், மற்றொருவர் பாலு (35) தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

    அவர்கள் இருவரும் புதுவையில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்களை வாங்கி மரக்காணத்தை அடுத்த கூனிமேடுக்கு கடத்த பாலுவின் வீட்டில் வைத்துள்ளனர்.

    பகல் நேரங்களில் மது கடத்தினால் போலீசாரிடம் மாட்டிவிடுவோமோ? என்று நினைத்து அதிகாலையில் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து 800 மதுபாட்டில்களும், அவர்கள் ஓட்டி வந்த 2 ஸ்கூட்டியையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் அவர்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    புதுவைலிங்காரெட்டி பாளையத்தில் காட்டேரிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த ஒரு பையை சோதனையிட்ட போது அதில், 37 லிட்டர் பாக்கெட் சாராயத்தை தமிழக பகுதிக்கு கடத்தி செல்ல இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாராயம் கடத்திய சந்தைக்புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அருண் (23), மூர்த்தி (24) ஆகியோரை கைது செய்தனர்.

    இதேபோல் பாண்கோஸ் பள்ளி அருகே நடத்திய சோதனையிலும் 48 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் அதை கடத்தி வந்தவர் பேராவூரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. பின்னர் சுரேசை கைது செய்தனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம், மது பாட்டில்களை போலீசார் கலால்துறையினரிடம் ஒப்படைத்தனர். #tamilnews

    பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவி வீட்டுக்கு போலீசார் வந்து சோதனை நடத்தினார்கள். மேலும் அடியாட்கள் வந்து எங்களை மிரட்டுகிறார்கள் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். #dharmapurigirlstudent

    கம்பைநல்லூர்:

    பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவி வீட்டுக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள். நேற்று இரவு இந்த சோதனை நடந்தது. 5 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து மாணவியின் அண்ணன் முனீஸ்வரன் கூறியதாவது:-

    எங்கள் குடும்பத்தை அடிக்கடி மிரட்டுகிறார்கள். பகலிலும், இரவிலும் அடியாட்கள் வந்து மிரட்டுகிறார்கள். நீ வழக்கை எப்படி நடத்துவாய் என்று பார்க்கத்தான் போகிறோம் என்றும், நீ வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் மிரட்டி வருகிறார்கள்.


    கைதான சதீஷ்குமாரின் தாயார் நேரில் வந்து என் குடும்பத்தை மிரட்டினார். எனக்கு எல்லா மட்டத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். இதனால் என் மகனை ஜாமீனில் எடுத்து வந்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார். அவரை போலீசார் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவியின் தந்தை அண்ணாமலை கூறியதாவது:-

    எங்கள் வீட்டுக்கு போலீசார் வந்தார்கள். வீட்டில் சோதனை நடத்தி எதையோ தேடினார்கள். ஆனால் என்ன காரணத்திற்காக வந்தோம் என்பதை சொல்ல மறுத்து விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    என்னையும், என் கணவரையும் இடித்து தள்ளி விட்டு போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்தனர். கொலை செய்யப்பட்ட என் மகளின் பாஸ் புத்தகத்தை கேட்டனர். நான் கொடுக்க முடியாது என்றேன். அவர்கள் என்னை இடித்து தள்ளினர். நான் கீழே விழுந்து விட்டேன். எங்களை அவர்கள் மிரட்டினார்கள். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவியின் உறவுக்கார பெண் ஒருவர் கூறியதாவது:-

    மாணவி கொலை செய்யப்பட்ட பிறகு எங்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருகிறது. எங்கள் குடும்பத்தினரை கஷ்டப்படுத்துகிறார்கள். மாணவியின் சாவுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம். எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #dharmapurigirlstudent

    புழல் ஜெயிலில் இன்று அதிகாலை 100 போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail
    செங்குன்றம்:

    புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கைதிகளுக்கு செல்போன், கஞ்சா, சொகுசு வாழ்க்கை தாராளமாக கிடைப்பதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஜெயிலில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10-க்கும் மேற்பட்ட டி.வி.க்கள், 80 ரேடியோக்கள், பிரியாணி செய்ய பயன்படுத்தும் அரிசி, மெத்தைகள் உள்ளிட்ட வைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சோதனை முடிந்த பின்னரும் தொடர்ந்து கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் புழல் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் புழல் சரக உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஜெயந்தி உள்பட 100 போலீசார் ஜெயிலுக்கு வந்தனர்.

    அவர்கள் அதிரடியாக தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது தண்டனை ஜெயில் கழிவறை அருகே மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 2 செல்போன்களை கைப்பற்றினர். விசாரணை கைதிகள் அறையில் இருந்த 2 கஞ்சா பொட்டலங்களும் சிக்கியது.

    செல்போன், கஞ்சா எப்படி கைதிகளுக்கு கிடைக்கிறது. இதில் ஜெயில் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக புழல் போலீசில் புகார் செய்துள்ளனர்.

    புழல் ஜெயிலில் 100 போலீசார் அதிரடியாக சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புழல் ஜெயிலில் விசாரணை கைதிகள் அறையில் 2ஆயிரத்து 600 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 154 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைதிகளிடையே மோதலை தடுக்கவும், இட நெருக்கடியை போக்கவும் 154 குண்டர் சட்ட கைதிகள் 2-வது பிளாக்கில் உள்ள தண்டனை கைதிகள் அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். #PuzhalJail
    ×