என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pocso case"
- கடந்த 2016-ம் ஆண்டு சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணத்திற்காக வாலிபர் கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
- வாலிபருக்கு 40 ஆண்டு சிறையும், உடந்தையாக இருந்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வினோத்(32). சாமியார்தோட்டம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் மனைவி கவிதா(37). இவர்கள் 2 பேரும் ஒரே இடத்தில் கட்டிட பணி செய்து வந்தனர்.
இதனால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணத்திற்காக வினோத் கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதற்கு கவிதாவும் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் வினோத் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இதேபோல் கவிதாவும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சரண் தீர்ப்பு வழங்கினார்.
வினோத் மீதான குற்றங்கள் உறுதியானதால் அவருக்கு 40 ஆண்டு சிறை மற்றும் ரூ.20ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த கவிதாவுக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அபராத தொகையான ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவேண்டும் என்றும் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- விசாரணையில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்தது தெரியவந்தது
- சிறுமியின் உறவினர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.
சென்னை:
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, அதற்கு உடந்தையாக இருந்த எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி நிருபர் வினோபாஜி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் விசாரித்த இந்த வழக்கில் 22 பேர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். இரு பெண்கள் உள்பட மற்ற 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், மாரீஸ்வரன் என்பவர் இறந்துவிட்டார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ராஜலட்சுமி முன்பு நடந்து வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மதன்குமார், சாயிதா பானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், தனியார் தொலைக்காட்சி நிருபர் வினோபாஜி, கிரிதரன், ராஜசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணன், எஸ்.பி.ஆர்.கண்ணன் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார்.
இவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று நீதிபதி அறிவித்தார். சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன், சிவில் சப்ளை அதிகாரி கண்ணன், உள்ளிட்ட 13 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- கல்லுாரி மாணவன் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கரூர்:
கரூர் மாவட்டம், வெள்ளியணை, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் கிரிதரன் (வயது 19). கரூரில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த, அரசு கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிக்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, மாணவியின் தாய், கரூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், கிரிதரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ், 'போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.
- காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
- முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு சிறுமியை விருந்தாக்கி உள்ளனர்
சென்னை:
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியை சங்கிலி தொடர்போல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தாக்கியது தெரியவந்தது.
இவ்வழக்கில் மொத்தம் 26 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, 7 பெண்கள், காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், சிறுமியின் உறவினர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 19ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
காரைக்கால்:
தமிழகப்பகுதியை சேர்ந்த ஒருவர், 14 வயது சிறுமி உள்ளிட்ட தனது குடும்பத்துடன் காரைக்கால் நகர் பகுதி யில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்த 14 வயது சிறுமி, உறவினர் வீட்டின் எதிரே, தனியாக, செல்போனை வைத்துகொண்டு விளையாட்டி கொண்டி ருந்தார். அப்போது அங்குவந்த அதேபகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மைக்கேல் (வயது23) என்பவர், ஆற்றில் பிடித்த உயிருள்ள நண்டை கொண்டுவந்து, சிறுமியின் தொடையில் விட்டுள்ளார்.
பயந்துபோன சிறுமி சத்தம் போடவே, சிறுமியின் கை களை பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் மற்றும் உறவி னர்கள், மைக்கேலின் செயலை பார்த்து, மைக்கேலை பிடித்து அடித்து, உதைத்து, காரைக்கால்நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வீட்டில் இருந்து சிறுமி மாயமானார்.
- பலமுறை சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துள்ளார்.
உடுமலை :
உடுமலை அடுத்த போடிப்பட்டி சேர்ந்தவர் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் போடிபட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் லோகேஷ்( வயது 22) . தொழிலாளி யான இவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். உடுமலையில் உள்ள கோவிலின் முன்பு வைத்து சிறுமிக்குக்கு தாலி கட்டியுள்ளார் . பின்னர் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை சென்று கணவன் மனைவி என்று சொல்லி வீடு எடுத்து தங்கி உள்ளனர். மேலும் பலமுறை சிறுமியுடன்பாலியல் உறவு வைத்துள்ளார். இதில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடுமலை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி லோகேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
- ஆசிரியர் நிலவொளி பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
- சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற பெற்றோர், பொதுமக்களுடன் சேர்ந்து ஆசிரியர் நிலவொளியை அடித்து உதைத்து தாக்கி தர்மஅடி கொடுத்தனர்.
கரூர்:
திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் நிலவொளி (வயது 42). இவர் கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் சேங்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் ஆசிரியர் இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.மேலும், ஆசிரியர் அந்த மாணவியை மிரட்டி அவர் அரைகுறையாக இருக்கும் படங்களை அனுப்ப வைத்து அதனையும் பார்த்து ரசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற பெற்றோர், பொதுமக்களுடன் சேர்ந்து ஆசிரியர் நிலவொளியை அடித்து உதைத்து தாக்கி தர்மஅடி கொடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்த ஆசிரியர் நிலவொளியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் ஆசிரியர் நிலவொளி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள திருத்தாலா பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மைதீன்(வயது60).
இவர் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் வைத்து 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த காட்சி அந்த தியேட்டரில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவானதை தொடர்ந்து அது பற்றி சங்கரன்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஆனால் போலீசார் இந்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சிறுமிக்கு தொழில் அதிபர் பாலியல் தொல்லை கொடுக்கும் காட்சி அங்குள்ள டி.வி.சானல்களில் ஒளிபரப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டுச் செல்லப்பட்டது. கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா இந்த சம்பவம் தொடர்பாக நேரடி விசாரணை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து சங்கரன் குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் தொழில் அதிபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது அதை தடுக்காமல் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அந்த சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை முறையாக விசாரிக்காததால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.#tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்