search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus 2"

    • தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.

    இத்தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 11 குழுக்களைக் கொண்ட 33 பறக்கும் படையினர், 215 நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், தேர்வுப் பணியாளர்கள் என பல்வேறு நிலைகளிலும் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்வுகள் அனைத்தும் காலையில் ெதாடங்கி மதியம் வரை நடை பெறுகின்றன.

    தமிழ் முதல்தாள்

    முதல் நாளான, இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. மொழிப்பாட தேர்வில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று தேர்வு எழுதினர்.

    தேர்வையொட்டி அதிகாலை முதலே மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து மும்முரமாக பாடங்களை படித்தனர். காலை 7 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நோட்டீசு போர்டில் பெயர் மற்றும் பதிவு எண், தேர்வு அறை எண் ஆகியவை கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டது. அவற்றை பார்த்து, மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வை அறையை தெரிந்து கொண்டனர்.

    பின்னர் காலை 9 மணி அளவில் இறை வழிபாடு நடைபெற்றது. அதில் மாணவ- மாணவிகள் பங்கேற்று விட்டு தங்களது தேர்வு அறைக்கு புறப்பட்டு சென்றனர்.

    பறக்கும் படையினர், தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று தேர்வுகள் நடைபெறுவதை கண்காணித்தனர். தேர்வையொட்டி பள்ளி களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கலெக்டர் ஆய்வு

    சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் கார்மேகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    பொதுத்தேர்வு நடத்தப்படுவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதியினை ஏற்பாடு செய்திடவும், தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திடவும், தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும். தலைமை ஆசிரியர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் அன்றாடம் நம்பிக்கை அளித்து தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை வாழ்த்தியும், ஊக்கப்படுத்தியும் அனுப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் ஒரு தேர்வு முடிந்த பின், அதைப்பற்றிய சிந்தனைகளைத் தவிர்த்து அடுத்தடுத்த தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மேலும் தேர்வு நேரங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளைப் போதிய நேரம் தூங்க வைத்து, சத்தான உணவுகளை வழங்கி, அவர்களை வாழ்த்தி, ஊக்கப்படுத்தி தேர்வு எழுத அனுப்பிட வேண்டும். பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் எழுதிய மாணவ-மாணவிகளை பறக்கும் படையினர் கண்காணித்தனர்.
    • காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை 8.75 லட்சம் மாணவ-மாணவி கள் எழுதினர்.

    மதுரை மாவட்டத்தில் 18, 734 பேர் மாணவர்களும், 18,723 மாணவிகளும் என மொத்தம் 37,457 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    119 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதி னர். காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.

    தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்தி ருந்தனர். அவர்கள் புத்தகங்களுடன் கடைசி நேர தயாரிப்பில் மும்முர மாக ஈடுபட்டு இருப்பதை காண முடிந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆசிரி யர்களும் தேர்வு குறித்து அறிவுரைகளை வழங்கினர்.

    தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டிருந்தது. எனவே மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்குட்படுத்த ப்பட்ட பின்னர் 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஹால்டிக்கெட் சரி பார்க்கப்பட்டது.

    தேர்வு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய-ஆசிரியைகள் ஈடுபடுத்தப்பட்டனர். தலைமை ஆசிரியர்கள், உயர் கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டது. அவர்கள் தேர்வு மையங்க ளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    முன்னதாக தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரி நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

    இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,920 மாணவர்கள், 8,147 மாணவிகள் என மொத்தம் 16,067 பேர் இன்று தேர்வு எழுதினர். 65 மையங்களில் தேர்வு நடந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 7,625 மாணவர்கள், 8,808 மாணவிகள என மொத்தம் 16 ஆயிரத்து 433 மாணவ மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 10,985 மாணவர்கள், 12,383 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 368 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மாவட்டம், மாநில அளவில் பிளஸ்-2 தேர்வு சதவீதத்தில் முதலிடம் பெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதனை தக்க வைக்க மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயார்படுத்தினர்.

    3 மாவட்டங்களிலும் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தி னர்.

    தமிழ் மொழி பாட ேதர்வுடன் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    • சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் எழுதினர்.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.



    மதுரை ஈ.வே.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள்.

     பரமக்குடி

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை 8.75 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,920 மாணவர்கள், 8,147 மாணவிகள் என மொத்தம் 16,067 பேர் இன்று தேர்வு எழுதினர். 65 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதி னர். காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.

    தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் புத்தகங்களுடன் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதை காண முடிந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்களும் தேர்வு குறித்து அறிவுரைகளை வழங்கினர்.

    தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டிருந்தது. எனவே மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்குட்படுத்த ப்பட்ட பின்னர் 9.45 மணி யளவில் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னதாக தேர்வு மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேர்வு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய-ஆசிரி யைகள் ஈடுபடுத்தப்பட்ட னர். மாவட்டத்தில் தொலை தூரங்களில் இருந்து மாணவ -மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வர அரசு பஸ் வசதிகள் செய்யப் பட்டிருந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 7,625 மாணவர்கள், 8,808 மாணவிகள என மொத்தம் 16 ஆயிரத்து 433 மாணவ மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்க 46 வினாத்தாள் கட்டுப் பாட்டா ளர்கள், 79 முதன்மை கண்காணிப்பா ளர்கள், துறை அலுவலர்கள் 1239 அறை கண் காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    சிவகங்கையில் உள்ள மையத்திற்கு இன்று மாவட்ட கலெக்டர் மதுசுதன் ரெட்டி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர்கள் அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று 10,985 மாணவர்கள், 12,383 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 368 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மாவட்டம், மாநில அளவில் பிளஸ்-2 தேர்வு சதவீதத்தில் முதலிடம் பெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதனை தக்க வைக்க மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயார்படுத்தினர்.

    3 மாவட்டங்களிலும் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தி னர். தமிழ் மொழி பாட ேதர்வுடன் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.


    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
    • இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

    இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர்கள் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.

    முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் 5 மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அலுவலர்துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு மாணவரையும் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையும் அறியப்பட்டது.
    • தொடர்பு கொண்டதன் விளைவாக 1,531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தனர்.

    சென்னை :

    2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதி, அடுத்ததாக 2022-23-ம் கல்வியாண்டில் (நடப்பு கல்வியாண்டு) உயர்கல்வியை தொடராத மாணவ-மாணவிகளின் விவரங்களை கல்வித் துறை சேகரித்தது. அதன்படி, 8 ஆயிரத்து 249 பேர் இந்த ஆண்டு உயர்கல்வியை தொடராதது கண்டறியப்பட்டது. அதில் ஒவ்வொரு மாணவரையும் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையும் அறியப்பட்டது. இவ்வாறு தொடர்பு கொண்டதன் விளைவாக 1,531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தனர்.

    மீதமுள்ள 6 ஆயிரத்து 718 மாணவ-மாணவிகள் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, தேர்வில் தோல்வி, உயர்படிப்பில் ஆர்வமின்மை, பணியில் சேர்ந்தது, பெற்றோர் அனுமதிக் காதது, தேர்வு எழுதாதது, உடல் நலமின்மை, தொழில் புரிதல், கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சேர்க்கை கிடைக்காதது, அருகாமையில் கல்லூரி இல்லாதது, மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்தது போன்ற காரணங்களினால் உயர்கல்வியை தொடர இயலாத நிலை இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர, 4 ஆயிரத்து 7 மாணவர்களை தொலைபேசி இணைப்பு பெறாததாலும், சில காரணங்களினாலும் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. அந்தவகையில் மொத்தம் 10 ஆயிரத்து 725 பேர் உயர்கல்வியை தொடர முடியாமல் போய் இருக்கின்றனர்.

    இவர்களில் 2 ஆயிரத்து 711 பேருக்கு மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் உள்ள பிற துறையினருடன் இணைந்து உயர்கல்வி தொடர்ந்து படிக்க சில நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது. அந்தவகையில், வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முகாம் நடத்தப்பட வேண்டும்.

    அந்த முகாமில் சம்பந்தப்பட்ட மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் வாயிலாக 2 நாட்களுக்கு முன்னதாக அழைத்து பெற்றோருடன் தவறாமல் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில் கலெக்டர் அலுவலகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளையும் பங்கேற்க செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, அவர்களை உயர்கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும் என்றும், பிற துறையின் ஒத்துழைப்பு தேவை ஏற்பட்டால், அவர்களையும் அழைத்து மாணவர்கள் பயன்பெற மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி காலனி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பிளஸ்-2 மாணவன் பலியானார்.
    • இதில் பலத்த காயமடைந்த ஹரி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் ஹரி பாஸ்கர் (வயது 18). பிளஸ் 2 முடித்துள்ளார். நேற்று இரவு ஹரி பாஸ்கர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் கோடீஸ்வரன் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பட்டணம் வழியாக ராசிபரத்துக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ஹரிபாஸ்கர் ஓட்டிச் சென்றார்.

    அவருக்கு பின்னால் கோடீஸ்வரன் உட்கார்ந்து சென்றார். பட்டணம் சக்தி நகர் அருகே சென்றபோது ராசிபுரத்தில் இருந்து பட்டணத்தை நோக்கிச் சென்ற செல்வராஜ் (65) என்பவரது மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஹரி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் கோடீஸ்வரனும், செல்வராஜும் காயமடைந்தனர். இருவரும் ராசிபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    காயமடைந்த செல்வராஜ் பட்டணம் பள்ளிக்கூடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த பிளஸ்-௨ மாணவி காலை பள்ளிக்கு செல்வதாக கிளம்பி சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்தி நகர் மெயின் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இவர்களது மகள் பவித்ரா (17) ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு செல்வதாக கிளம்பி சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும், அவரது நண்பர்களிடம் விசாரித்த போது மாணவி பவித்ரா பள்ளிக்கு வரவில்லை என்று கூறினர். இதனால் பெற்றோர் உறவினர்களின் வீடுகளில் தேடியும், விசாரித்த போது எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 2,157 மாணவர்கள், 3,205 மாணவிகள் எழுதி இருந்தனர்.
    • நெல்லையில் 1,865 மாணவர்கள், 3,092 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நெல்லை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ைவ 43 அரசு பள்ளிகளில் இருந்து 2,157 மாணவர்கள், 3,205 மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர்.

    இதில் 1,865 மாணவர்கள், 3,092 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.45 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 53 பள்ளிகளில் இருந்து 3,363 மாணவர்கள், 4,063 மாணவிகள் என ெமாத்தம் 7,426 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

    இதில் 2,912 மாணவர்கள், 3,909 மாணவிகள் என 6,821 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.85 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை 56 அரசு பள்ளிகளில் இருந்து 1,848 மாணவர்கள், 2,735 மாணவிகள் என மொத்தம் 4,583 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 1,650 மாணவர்கள், 2,637 மாணவிகள் என மொத்தம் 4,287 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.54 சதவீத தேர்ச்சி ஆகும்.

    10-ம் வகுப்பு தேர்வை பொறுத்த வரை நெல்லை மாவட்டத்தில் 84 அரசு பள்ளிகளில் இருந்து 6,152 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5,211 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.70 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தென்காசி மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகளில் இருந்து 7,177 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 6,059 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.42 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 86 அரசு பள்ளிகளில் இருந்து 5,103 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.71 சதவீத தேர்ச்சி ஆகும்.

    • மதுரையில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவர் தேர்வு சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது.

    மதுரை

    மதுரை சோலையழகுபுரம் ஆட்டுமந்தை சந்து பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் மகன் பிரவீன் கார்த்திக் (வயது 17). இவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் பிளஸ்-2 பரீட்சை எழுதினார். இதில் அவர் சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரவீன் கார்த்திக் சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருநகர், பர்மா காலனியைச் சேர்ந்தவர் சங்கர் (30). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த சங்கர் சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை உச்சபரம்புமேடு ஜானகி தெருவைச் சேர்ந்த நாகராஜன் மனைவி மலர்விழி (25). கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மலர்விழி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 92.54 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். #Plus2Results
    தேனி:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 136 பள்ளிகள் உள்ளது. 53 அரசு பள்ளிகளும், 83 அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளும் அடங்கும். நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் தேனி மாவட்டத்தில் 92.54 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வில் தேனி மாவட்டத்தில் 7,488 மாணவர்களும், 7,617 மாணவிகளும் என மொத்தம் 15,105 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 6,809 மாணவர்களும், 7,169 மாணவிகளும் என மொத்தம் 13,978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.54 சதவீதம் ஆகும்.

    இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் 10,495 மாணவர்களும், 11,576 மாணவிகளும் என 22,071 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,296 மாணவர்களும், 10,743 மாணவிகளும் என மொத்தம் 20,039 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.79 சதவீதம் ஆகும்.

    பிளஸ்-2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் அவரவர் செல் போன்களிலேயே குறுந் தகவல் மூலம் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால மாணவர்கள் சிரமம் இன்றி வீட்டில் இருந்தபடியே தங்கள் மதிப்பெண்ணை தெரிந்து கொண்டனர்.

    ஒவ்வொரு பள்ளியிலும் மதிப்பெண் குறித்த விபரத்தை அறிய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. #Plus2Results

    தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில் வேலூர் மாவட்டம் மாநில அளவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. #Plus2Results
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 714 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 34 ஆயிரத்து 800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18 ஆயிரத்து 664 மாணவர்களில் 15 ஆயிரத்து 59 பேரும், 22 ஆயிரத்து 50 மாணவிகளில் 19 ஆயிரத்து 747 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி விகிதம் 85.47 சதவீதம் ஆகும். இதன் மூலம் மாநில அளவில் 32வது இடம். அதாவது கடைசி இடத்தை வேலூர் பிடித்தது. கடந்த ஆண்டு 87 சதவீதம் தேர்ச்சி பெற்று 27வது இடத்தில் இருந்தது.

    தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதால் வேலூர் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர். அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Plus2Results
    திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 19-ந்தேதி வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்துக்கு யாரும் வரத்தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #Plus2 #Plus2Result
    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வருகிற 19-ந்தேதி புனித வெள்ளி அன்று வெளியாகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். வினாத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்றது. மதிப்பெண் பட்டியலும் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி அன்று வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் கொல்லப்படும் தினத்தை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் பெரிய வெள்ளி அன்று அரசு விடுமுறை விடப்படுகிறது.

    அன்று தேர்வு முடிவு வெளியிடுவதை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. திட்டமிட்டபடி 19-ந்தேதி காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசு தேர்வுத்துறை ஈடுபட்டு வருகிறது.

    பிளஸ்-2 தேர்வு முடிவு குருந்தகடு (சிடி) ஆகவோ, கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்து பள்ளிகளுக்கும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பத்திரிகை, செய்தி நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

    அந்த முறையை இந்த வருடமும் பின்பற்றி தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறது. அதேபோல மாணவர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்படுகிறது.



    இதனால் பள்ளிகளோ, மாணவர்களோ தேர்வு முடிவை தெரிந்துகொள்ள கல்வி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை மதிப்பெண், ரேங்க் வாரியாக தெரிவிக்கும் முறை கடந்த 2 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறை கொண்டு வரப்பட்டது.

    இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப் படும். மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.

    பள்ளிகளுக்கும் ஆன்லைன் வழியாக மாணவர்களின் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்படும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் பேட்டியோ, அறிவிப்போ வெளியிட இயலாது. பத்திரிகை, டிவி செய்தி நிறுவனங்களுக்கும் இணைய தளம் வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். அதனால் யாரும் நேரில் வரத்தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Plus2 #Plus2Result
    ×