என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "plus-2 student"
- திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இதுகுறித்து திலகர்திடல் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.
மதுரை
மதுரை கீழ அண்ணாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் மனோஜ்குமார் நெருங்கி பழகினார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மனோஜ்குமார் மாணவியை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
ஆனால் மனோஜ்குமார் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் திலகர் திடல் போலீசில் மகளை பலாத்காரம் செய்ததாக புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுஜாதா
- திருக்குறுங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
- 21-ந்தேதி காலையில் மாணவி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தந்தை வெளியூரில் உள்ள கடையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தாயார் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். கடந்த
21-ந்தேதி காலையில் மாணவி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே வீட்டிற்கு வாட்ஸ்-ஆப் காலில் பேசிய மாணவி தான் திருப்பூரில் இருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளார். இதுபற்றி மாணவியின் தாயார் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- அம்ரிஷா பானு பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராஜா மில் ரோட்டை சேர்ந்தவர் மைசூர் ரகுமான். இவரது மகள் அம்ரிஷா பானு (வயது 16). இவர் பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு தனது அம்மாவின் கடைக்கு சோர்வுடன் சென்றார். பின்னர் அவரிடம் வீட்டு சாவியை வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த அவர் விஷத்தை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இரவு 7.30 மணியளவில் அம்ரிஷா பானுவின் மாமா சதாம் உசேன் என்பவர் உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. இதனையடுத்து அவர் தனது மனைவியுடன் சேர்ந்து கதவை திறந்து வீட்டிற்குள் சென்றார்.
அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் அம்ரிஷா பானு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கான காரணம் குறித்து அம்ரிஷா பானுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் தனது பள்ளியின் இயற்பியல் ஆசிரியை மற்ற மாணவிகள் மத்தியில் திட்டியதால் மனவேதனை அடைந்து வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பிளஸ்-2 மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள கொங்கன்குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் மாலதி. பிளஸ்-2 படித்து வந்த இவருக்கு வயிற்கு வலி இருந்து வந்தது. இதனால் விரக்தியடைந்த மாலதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரியாபட்டி பாண்டியன்நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மூக்காயி (48) இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளன. குடும்ப பிரச்சினை காரணமாக மூத்த மகள் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் மூக்காயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள குகன் பாறையை சேர்ந்தவர் சோலைசாமி. இவரது மகன் சதீஸ்வரன் (28). திருப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் தீபாவளிக்கு வீட்டுக்கு வந்தார். ஆனால் அதன் பின் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த சதீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் கல்யாணி(24). இவரது கணவர் கணேஷ் 2 மாதமாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தியடைந்த கல்யாணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அரசு பஸ்சுக்குள் புகுந்து பிளஸ்-2 மாணவனை ஒரு கும்பல் தாக்கியது.
- இதில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உள்பட 29 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை சூலப்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சுரேஷ் (வயது 16). இவர் எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷ் கடந்த 21-ம் தேதி அரசு பஸ்சில் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது பஸ்சில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாண்டித்து ரை என்பவர் பஸ்சில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவத்தில் சுரேஷ், பாண்டித்துரைக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து சுரேஷ் சம்பவத்தன்று காலை அரசு பஸ்சில் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சீல்நாயக்கன் பட்டி பஸ் நிறுத்தம் அருகில் 30 பேர் கும்பல் நடு ரோட்டில் நின்று பஸ்சை வழி மறித்தது. அவர்கள் பஸ்சில் புகுந்து சுரேசை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
சுரேசை சக மாணவர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சீல்நாயக்கன்பட்டி பரமன் (45) என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உள்பட 29 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இறங்கி குளிக்க முயன்றுள்ளனர்.
- இதில் தாமரை கண்ணனுக்கு நீச்சல் தெரியாததால், அவர் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார்.
பெருந்துறை:
பெருந்துறை பவானி ரோடு பூவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவி ந்தம்மாள். கணவனை இழந்த இவர் பெருந்துறை பகுதியில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு தாமரைக்க ண்ணன் (வயது 16), கமலேஷ் (வயது 14) என்று 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகி ன்றனர்.
இதில் தாமரைக் கண்ணன் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இறங்கி குளிக்க முயன்றுள்ளனர். இதில் தாமரை கண்ணனுக்கு நீச்சல் தெரியாததால், அவர் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார்.
இது பற்றி தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தாமரைக்கண்ணனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வெள்ளோடு அருகே உள்ள கே.கே.வலசு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கா லில் தாமரைக்கண்ணன் உடல் பிணமாக மிதந்து வந்துள்ளது தெரிய வந்தது.
பெருந்துறை போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தாமரைக்கண்ணன் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாணவி வாலிபர் ஒருவருடன் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இதனைத்தொடர்ந்து ரங்கநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்து விஜயமங்கலம் பகுதியில் 17 வயது மாணவி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பள்ளிக்கு சென்ற அந்த மாணவி வீடு திரும்பவி ல்லை.
இதனால் மாணவியின் பெற்றோர் பல இடங்களிலும் அவரைத் தேடிப்பார்த்தனர் .
அவர்களால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தார்.
இந்த நிலையில் அந்த மாணவி வாலிபர் ஒருவருடன் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து பெருந்துறை போலீசார் விரைந்து சென்று பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவி மற்றும் அவருடன் இருந்த வாலிபரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள உதயத்துறையை சேர்ந்த ரங்கநாதன் (வயது 26) என்றும், பெயிண்டரான இவர் இன்ஸ்டாகிராம் மூலம் அந்த மாணவியிடம் பழகியதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் அந்த மாணவிக்கு காதல் வலை வீசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 5-ந் தேதி பெருந்துறை பகுதிக்கு வந்த அந்த மாணவியை கடத்திச் சென்று கெங்க வல்லி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ரங்கநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மேலும் மருத்துவ பரிசோத னைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ரங்கநாதன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
- கிருத்திகா அதே பகுதியில் உள்ள பேர்பெரியான்குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கிருத்திகாவை பல இடங்களில் தேடினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல் காங்கேயன் குப்பத்தை சேர்ந்த வேல்முருகன். இவரது மகள் கிருத்திகா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள பேர்பெரியான் குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் பள்ளியில் இருந்து வகுப்பாசிரியர் மாணவி வீட்டுக்கு போன் செய்து கிருத்திகா ஏன் தேர்வு எழுத வரவில்லை என்று கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கிருத்திகாவை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து முத்தாண்டிகுப்பம் போலீசில் மாணவியின் தாயார் மங்கையர்கரசி புகார் கொடுத்தார். முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.
மணலிபுதுநகரைச் சேர்ந்தவர் அனுபாரதி (வயது17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவரது வீட்டின் அருகே தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த ஜெயராமன் தங்கி இருந்தார். அவர் அனுபாரதியை ஒரு தலையாக காதலித்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் காதலை ஏற்க மறுத்த அனுபாரதியை கொடூரமாக குத்தி ஜெயராமன் கொலை செய்தார். இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இன்று காலை நீதிபதி பரணிதரன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
அப்போது மாணவியை கொலை செய்த ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனலட்சுமி ஆஜர் ஆனார். #tamilnews
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தனர்.
இது தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி விசாரணை நடத்தினார்.
கெங்கலமகாதேவி கிராமத்திற்கு நேரில் சென்று போலீசாரின் உதவியுடன் அந்த மாணவியிடம் வாலிபரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கல்லூரி மாணவி மேஜர் என்பதும், அந்த வாலிபர் பிளஸ்-2 படிக்கும் மைனர் (17 வயது) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது.
இதையடுத்து பிளஸ்-2 மாணவரான மைனரை சட்டத்திற்கு புறம்பாக திருமணம் என்ற பெயரில் குடும்பம் நடத்தியதால் கல்லூரி மாணவி மீதும், அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டு அவருடன் பாலியல் குற்றம் புரிந்ததாக மைனர் வாலிபர் மீதும் வழக்குப்பதிவு செய்ய கடலாடி போலீசாருக்கு நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார்.
இதையடுத்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை கைது செய்தனர். மாணவன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர். #tamilnews
திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்படி பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். திருமண வயதை அடையாத நிலையில் நடத்தப்படும் குழந்தை திருமணங்கள் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
குழந்தை திருமணங்களில் பெரும்பாலும் ஆண்கள் மேஜராகவும், பெண்கள் மைனராகவும் இருப்பார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் அப்படியே மாற்றாக சம்பந்தப்பட்ட பெண் மேஜராகவும், ஆண் மைனராகவும் உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தனர்.
அதன்பேரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி உடனடியாக மனு மீது விசாரணை நடத்தினார்.
மேலும் கெங்கலமகாதேவி கிராமத்திற்கு நேரில் சென்று மனுதாரரின் மகளையும், அந்த வாலிபரையும் அழைத்து வர கடலாடி போலீசாருக்கு நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த கல்லூரி மாணவியை மட்டும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு அழைத்து வந்தனர். அந்த மாணவியிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கல்லூரி மாணவி மேஜர் என்பதும், அந்த வாலிபர் பிளஸ்-2 படிக்கும் மைனர் (17 வயது) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. இதனை கேட்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பிளஸ்-2 மாணவரான மைனரை சட்டத்திற்கு புறம்பாக திருமணம் என்ற பெயரில் குடும்பம் நடத்தியதால் கல்லூரி மாணவி மீதும், அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டு அவருடன் பாலியல் குற்றம் புரிந்ததாக மைனர் வாலிபர் மீதும் வழக்குப்பதிவு செய்ய கடலாடி போலீசாருக்கு முதன்மை மாவட்ட நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மைனர் பெண் குழந்தைகளை திருமணம் செய்வது அதிகளவில் இருந்து வரும் நிலையில் முதல்முறையாக மைனர் வாலிபரை மேஜர் ஆன பெண் திருமணம் செய்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. #tamilnews
சின்னசேலம்:
சின்னசேலம் அருகே உள்ள கடத்தூரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் கவிதா(18). இவர் கச்சிராயப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கவிதா அதே பகுதியில் உள்ள தனது பாட்டி அங்கம்மாளுடன்(67) வசித்து வந்தார்.
சம்பவத்தன்று கவிதா தனது பாட்டியுடன் பக்கத்து தெருவுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கடத்தூர் காட்டுக்கொட்டாயை சேர்ந்த சுதாகர்(23) என்பவர் கவிதாவை வழிமறித்து, அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்