search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic wastage"

    அத்தனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து பேனர் வைத்தும் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    வெண்ணந்தூர்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து அத்தனூர் முதல் நிலை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. இந்த நிலையில் அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் தட்டு மற்றும் கப்புகள், ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக் கூடிய அலுமினியம் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் கொள்முதல் செய்யவோ, இருப்பு வைக்கவோ, பயன்படுத்தவோ விற்பனை செய்யவோ கூடாது என அத்தனூர் பேரூர் செயல் அலுவலர் சதாசிவம் தெரிவித்துள்ளார். இதை மீறி பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வாரச்சந்தைக்கு சென்று பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து பேனர் வைத்தும் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிப்பைகள், சணல் பைகள், காகித கவர்கள், சில்வர் கண்ணாடி டம்ளர்கள், வாழை இலைகள், பாக்கு மட்டைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. 
    பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கியும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் தேசிய மாணவர் படையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    மஞ்சூர்:

    மஞ்சூர் அருகில் உள்ள நஞ்ச நாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அசோக்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.பேரணிக்கு என்.சி.சி.சுபேதார்கள் சந்தோஷ், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை மாற்ற காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் உள்ளிட்டபொருட்களை பயன்படுத்த மாட்டோம் என தேசிய மாணவர்படை மாணவர்கள் உறுதி மொழியேற்றனர்.

    இதனையடுத்து பேரணி நரிகுளிஆடா, எல்லக்கண்டி, மொட்டோரை, கக்கன்ஜி காலனி ஆகிய பகுதிகள் வழியாக சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து கோஷமிட்டும், துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கியும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சசி, வேலாயுதம் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் என்.சி.சி அலுவலர் சுப்பிரமணி செய்திருந்தார்.

    ×