search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol diesel"

    • மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை.
    • மதுபானம், எரிபொருட்கள் மூலம் மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.

    ஸ்ரீநகர் :

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படுமா? என்று நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:-

    பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். மாநிலங்கள் சம்மதித்தால், அதை செய்ய தயாராக இருக்கிறோம்.

    ஆனால், மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை. இதை புரிந்து கொள்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. மதுபானம், எரிபொருட்கள் ஆகியவற்றில் இருந்து மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.

    நல்ல வருவாய் கிடைக்கிறது என்றால், அதை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பணவீக்கம் பற்றி மத்திய அரசு மட்டுமே கவலைப்படுகிறது.

    பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி கடைசியாக லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்குமாறு கேரள ஐகோர்ட்டு யோசனை தெரிவித்தது. ஆனால், அந்த மாநில நிதிமந்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.

    கடந்த ஓராண்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைவாக உயர்த்தப்பட்டது இந்தியாவில்தான். வடஅமெரிக்காவில் ஓராண்டில் 43 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகரித்தது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களை பாதிக்காத வகையில், உற்பத்தி வரியை குறைத்துள்ளோம். சில அண்டை நாடுகளில், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையும் அதிகமாக உள்ளது. ஆனால், நமக்கு கிராமப்புற பகுதிகளில் கூட தட்டுப்பாடு இல்லை. மத்திய, மாநில அரசுகளின் போக்குவரத்து வசதிகளே இதற்கு காரணம்.

    எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. விலையை சீராக வைத்திருப்பதற்கு முயன்று வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உக்ரைன்-ரஷியா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாயக்கு 139 டாலர் வரை உயர்ந்தது.
    • விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தை, கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    மேலும் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.

    இந்நிலையில் உக்ரைன்-ரஷியா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாயக்கு 139 டாலர் வரை உயர்ந்தது.

    இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6-ஐ மத்திய அரசு குறைந்தது.

    அதன்பிறகு 6 மாத காலத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை.

    இந்நிலையில், தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 95 டாலர் என்ற அளவில் உள்ளது. இதனால் விரைவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளது. எனவே அதற்கு முன்னதாக இந்த விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

    அதேநேரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையற்றதாக இருப்பதால் விலை குறைப்பு என்பது ஒரே நேரத்தில் இருக்குமா அல்லது படிப்படியாக விலை குறைக்கப்படுமா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எனவே விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அமெரிக்காவில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
    • அமெரிக்காவில் கடந்த மாத நிலவரப்படி நுகர்வோர் விலை பணவீக்கம் 8.2 சதவீதமாக உள்ளது.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் எந்தவொரு ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் அவரது 4 ஆண்டு பதவிக்காலத்தின் மத்தியில் (2 ஆண்டுகளுக்குபின்) நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும். இது இடைக்கால தேர்தல் ('மிட்டேர்ம் போல்ஸ்') என அழைக்கப்படுகிறது.

    அந்த வகையில் அங்கு ஜோ பைடன் ஜனாதிபதியாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், அவருடைய பதவிக்காலத்தில் மத்தியில், அடுத்த மாதம் 8-ந் தேதி நாடாளுமன்ற கீழ்சபையில் உள்ள (பிரதிநிதிகள் சபை) மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் வெற்றி, 2024-ம் ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தக்கட்சி ஜெயிக்கப்போகிறது என்பதற்கு சமிக்ஞையாக அமையும்.

    அமெரிக்காவில் கடந்த மாத நிலவரப்படி நுகர்வோர் விலை பணவீக்கம் 8.2 சதவீதமாக உள்ளது. இதற்கு அங்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருட்கள் விலை உயர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சங்கிலித் தொடர்போல மற்ற விலைவாசிகளும் உயர்ந்துள்ளன. இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது அடுத்த மாதம் நடக்கிற நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் எரிபொருட்கள் விலையை குறைப்பதற்காக கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை அதிகளவில் விடுவிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

    இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில் கூறியதாவது:-

    உக்ரைன் மீது ரஷிய அதிபர் புதின் படையெடுத்ததால்தான் எரிபொருட்கள் விலை உயர்ந்தன. இது சர்வதேச சந்தையை உலுக்கியது. எனவே எரிபொருட்கள் விலையைக் குறைக்க என்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறேன்.

    அந்த வகையில் எரிசக்தித்துறை அமெரிக்காவின் மூல உபாய கையிருப்பில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் மேலும் 1 கோடியே 50 லட்சம் பீப்பாய் எண்ணெயை விடுவிக்கும்.

    கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை விடுவிக்கிறபோது, அது எரிபொருட்கள் விலை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நாங்கள் தேசிய சொத்தான கச்சா எண்ணெய் கையிருப்பை தொடர்ந்து பொறுப்புடன் பயன்படுத்தப்போகிறோம்.

    இப்போது மூல உபாய கச்சா எண்ணெய் கையிருப்பு சுமார் பாதிக்கு மேல் நிரம்பி உள்ளது. அதாவது சுமார் 40 கோடி பீப்பாய் இருப்பு இருக்கிறது. எந்தவொரு அவசர நிலைக்கும் இது போதுமானதை விட அதிகம் ஆகும்.

    தூய்மையான எரிசக்திக்கான மாற்றத்தை தாமதப்படுத்தாமல் அல்லது ஒத்தி வைக்காமல், அமெரிக்கா பொறுப்புடன் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தவில்லை. உற்பத்தியை தாமதப்படுத்தவில்லை.

    நாங்கள் தினமும் 1 கோடியே 20 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்கிறோம். அடுத்த ஆண்டு எண்ணெய் உற்பத்தியில் சாதனை அளவை எட்டும் பாதையில் இருக்கிறோம்.

    ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 70 அமெரிக்க டாலராக (சுமார் ரூ.5,600) வீழ்ச்சி அடையும்போது, கையிருப்பை நிரப்புவதற்காக அமெரிக்கா எண்ணெய் வாங்கும்.

    கச்சா எண்ணெய் விவகாரத்தில் எனது முடிவில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    • எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கும்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

    கொழும்பு :

    இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் காரணமாக நாட்டில் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி தடைபட்டது. இதனல், அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. அத்துடன், அங்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன. அங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் போதிய அளவுக்கு இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.

    எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கும்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிபொருள் வாங்க வரிசையில் தொடர்ந்து பல நாட்கள் காத்துக்கிடந்ததால், கிட்டத்தட்ட 20 பேர் சோர்வு காரணமாக இறந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை தலா 20 ரூபாய் நேற்று குறைத்தது, கடந்த பிப்ரவரி முதல், ஐந்து முறை விலை உயர்வுக்கு பிறகு தற்போது விலை குறைந்துள்ளது.

    அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நேற்று இரவு 10.00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. கடைசியாக பெட்ரோல், டீசல் விலை மே மாத இறுதியில் ரூ.50 மற்றும் 60 ஆக உயர்த்தப்பட்டது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு .50 உயர்ந்துரூ.470க்கும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்குரூ.100 உயர்ந்து ரூ.550க்கும், சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து ரூ 520க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

    மதுரை

    தமிழக எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. தேசிய தலைவர் அஜீஸ் அப்துல் கான், மாநில தலைவர் ஆசாத், துணைத் தலைவர் அப்துல் ஹமீது மற்றும் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஆலைகளில் பணி புரியும் தொழிலாளர் நல சட்டங்களை மாற்றி அமைத்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, ஆட்டோ ஓட்டுநர்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், மத்திய அரசு நூல் விலையை குறைத்து பின்னலாடை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், சாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

    தமிழக அரசு தொழிலாளர் நல வாரியத்தின் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலையை குறைக்க உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • இம்ரான்கான் ஆட்சியில் சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது.
    • பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். கடந்த இம்ரான்கான் அரசில் இருந்து சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது என கூறி உரையைத் தொடங்கினார்.

    சர்வதேச நிதியத்துடன் (ஐஎம்எப்) செய்து கொண்ட ஒப்பந்தத்தை முந்தைய அரசு காலில் போட்டு மிதித்து எங்களுக்காக கண்ணி வெடிகளைப் போட்டது என்று சாடினார். இம்ரான்கான் அரசு தனது கடைசி வாரங்களில் அரசின் கஜானாக்கள் காலியாக இருந்தாலும் எரிபொருட்கள் விலையைக் குறைத்து, எங்களது அரசு சிக்கலில் விழுமாறு செய்தது என்றும் குற்றம்சாட்டினார்.

    தனது புதிய அரசு பதவி ஏற்று, கனத்த இதயத்துடன்தான் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு ஏற்ப தாங்களும் விலையை உயர்த்தியதாக குறிப்பிட்டார்.

    ஆனாலும் தற்போது கடவுளின் ஆசியுடன் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாகவும், கடவுளின் கருணையால் விலையை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.40.54-ம் குறைக்கப்படுவதாக அறிவித்து மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். இது நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து விட்டது.

    • ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.
    • ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 உயர்ந்துள்ளது.

    இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே, இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவுப் பொருட்கள் முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்ந்து ரூ.470க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 உயர்ந்து ரூ.550க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து, சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து, ரூ.520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் என்றும் பொதுமக்கள் தவறான செய்தியை கேட்டு பீதி அடைய வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    பெட்ரோல் பங்குகள் நாளை (14-ந்தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் மறுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை என்ற அறிவிப்பு மே 14-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது என்ற தவறான செய்தி வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேசன் இந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடவில்லை.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும். பொதுமக்கள் தவறான செய்தியை கேட்டு பீதி அடைய வேண்டாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    கருங்கல் அருகே பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே உள்ள வகுத்தான்விளையைச் சேர்ந்தவர் பொன் ஷோஜின் ராஜ். இவர் சவுதி அரேபியாவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியை பெனிற்றா என்பவருக்கும் நேற்று திக்கணங்கோடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. பின்னர் புதுமண தம்பதிகள் கருங்கலில் உள்ள மணமகன் வீட்டிற்கு வந்தனர்.

    மாலையில் அவர்கள் கருங்கல் கருமாவிளையில் உள்ள திருமண மண்டபத்திற்கு வரவேற்பு நிகழ்ச்சிக்காக இரண்டு காளை மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்தின் முன் கேரள ஆண், பெண் கலைஞர்கள் சிங்காரி மேளம் முழங்கிச் சென்றனர். புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்ததை கண்ட பொதுமக்கள் அதனை ஆச்சர்யமாக பார்த்து சென்றனர்.

    மணமகனின் தந்தை ராஜா காங்கிரஸ் பிரமுகர் ஆவார். அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தியதைப் போல மாட்டு வண்டியில் பயணம் செய்யும் நிலை ஏற்படும். அதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் மணமக்களை வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாட்டு வண்டியில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தோம் என்று கூறினார்.
    பெட்ரோல், டீசல் விலை 5-வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 40 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.72.79-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #PetrolDieselPriceHike
    சென்னை :

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் விலையேறத்தொடங்கியுள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விலை ஏறி வருவதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.



    சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.72.79 ஆகவும்,  டீசல், நேற்றைய விலையில் இருந்து 53 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 67.78 ஆகவும் விற்பனையாகிறது. இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு 80 சதவீதம் இறக்குமதியையே சார்ந்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய சந்தையில் உடனடியாக எதிரொலிக்கின்றன. #PetrolDieselPriceHike 
    சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து ரூ.72.91 காசுகளாகவும், டீசல் விலை 21 காசுகள் குறைந்து 67.77 ஆகவும் விற்பனையாகிறது. ##PetrolDieselPrice
    சென்னை :

    பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக பெட்ரோல் விலை ஏறுமுகத்துடன் காணப்படுகிறது.



    இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து ரூ.72.91 காசுகளாகவும், டீசல் விலை 21 காசுகள் குறைந்து 67.77 ஆகவும் விற்பனையாகிறது.
    சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.72.99 ஆகவும் டீசல் விலை 8 காசுகள் குறைந்து 68.10 காசுகளாக உள்ளது. #PetrolPriceHike
    சென்னை :

    பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது. தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது.

    ரூ.86-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82-க்கு விற்பனை ஆனது. 80 ரூபாயை தாண்டி விற்பனையான டீசலும் ரூ.68.26 என்ற அளவுக்கு குறைந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 11-ந்தேதி வெளியாகின.



    அதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது என்றும், இப்போது முடிவுகள் வெளியாகி விட்டதால் அவற்றின் விலை உயரக்கூடும் என்றும் பேசப்பட்டது. இதற்கு மத்தியில், சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் நேற்று முன்தினம் 2 மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் விலை திடீரென உயர்ந்தது.

    இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.72.99 ஆக விற்பனை ஆகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து 68.10 காசுகளாக உள்ளது. #PetrolPriceHike 
    ×