search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people suffer"

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த சாலை அதன் பின்னர் பராமரிக்கப்படவில்லை. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி ன்றனர்.
    • இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல முறை புகார் அளிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சி க்குட்பட்ட தாசமநாய க்கன்பட்டி, வைரபெருமாள் பிள்ளையூர், மணல்காட்டூர் ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. சின்னழகுநாயக்க னூர் அருகே மணல் காட்டூர் - தாசமநாயக்கன்பட்டி செல்லும் சாலை சுமார் 1 கி.மீ தொலைவுக்கு உருக்குலைந்து போக்கு வரத்துக்கு பயன்பாடற்ற நிலையில் மிகவும் மோசமாக உள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த சாலை அதன் பின்னர் பராமரிக்கப்படவில்லை. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி ன்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல முறை புகார் அளிக்க ப்பட்டது. ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மணல்காட்டூர், வைரபெருமாள் பிள்ளை யூர், தாசமநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு எந்த வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்த ப்படவில்லை. எனவே விரைவில் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும். உரிய நட வடிக்கை எடுக்காதபட்ச த்தில் பொதுமக்களுடன் சேர்ந்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை முற்றுகையிடுவோம் என அவர்கள் தெரி வித்தனர்.

    • தினமும் 100 முதல் 120 கழிவு நீர் லாரிகள் இந்த வழியாக செல்கிறது.
    • இந்த பகுதிக்கு வருவதற்கு வாடகை கார் மற்றும் ஆட்டோக்களில் ரூ.50 முதல் ரூ.100 வரை அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    சென்னை:

    பெருங்குடியையும் துரைப்பாக்கத்தையும் இணைக்கும் இணைப்பு சாலை ஒரு கிலோ மீட்டர் தூரம் உடையது. ஆனால் இந்த சாலையில் பயணிப்பது அவ்வளவு எளிதானதல்ல.

    மாநகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். தினமும் 100 முதல் 120 கழிவு நீர் லாரிகள் இந்த வழியாக செல்கிறது. சில நேரங்களில் ரோட்டின் இரு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 7 ஆண்டுகளாக செப்பனிடப்படாததால் இந்த சாலை குண்டும், குழியுமாக புழுதி பாதையாக மாறி உள்ளது. லாரிகள் செல்லும் போது வெளிவரும் புழுதி படலம் அந்த வழியாக செல்லும் பொது மக்களை பயமுறுத்துகிறது. இந்த புழுதிக்கு பயந்தே ஓ.எம்.ஆர். சாலைக்கு செல்பவர்கள் இந்த பாதை வழியாக செல்வதையே தவிர்த்துவிட்டார்கள்.

    இந்த பகுதிக்கு வருவதற்கு வாடகை கார் மற்றும் ஆட்டோக்களில் ரூ.50 முதல் ரூ.100 வரை அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள், தூசியின் காரணமாக இருமல், சளிகளால் அவதிப்படுகிறார்கள். கார்களில் இந்த சாலை வழியாக செல்பவர்கள் கார் பழுது பார்க்க 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.25 ஆயிரம் வரை செலவழிப்பதாக ஆதங்கப்படுகிறார்கள்.

    லாரி உரிமையாளர்கள் கூறும்போது, சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பங்கு லாரிகளை பழுதுபார்க்கவே செலவழிந்து விடுவதாக கூறினார்கள்.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-வது வாரத்தில் ரூ.10.5 கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்கள்.

    • கொளுத்தும் கோடை வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
    • கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள தொப்பி அணிந்தும், குடைகளை பிடித்துச் சென்றும் வருகின்றனர்.

    மதுரை

    கோடைகாலத்தை யொட்டி அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். தற்போது அக்னி நட்சத்திரம் காலம் என்பதால் மதுரையில் வெயில் உக்கிரம் அதிகமாக உள்ளது.

    சித்திரை திருவிழாவின் போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மழை பெய்வது நின்று விட்டதால் மீண்டும் வெயில் உச்சத்தை எட்டியுள்ளது.

    நேற்று மதுரையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. இந்த வெப்பத்தை தாங்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தாகத்தை தணிக்க தர்பூசணி மற்றும் பழ ஜூஸ், குளிர்பானங்கள் ஆகிய வற்றை குடிக்கின்றனர். இதனால் அவைகளின் விற்பனை பல மடங்காக அதிகரித்துள்ளது.

    இருசக்கர வாகனங்களில் நீண்ட தூரம் செல்பவர்கள் சாலை யோரங்களில் கோடை காலத்தையொட்டி விற்பனை செய்யப்படும் மோர், இளநீர், கரும்பு சாறு ஆகியவைகளை வாங்கி அருந்தி செல்கின்றனர்.

    பஸ் மற்றும் ரெயில்களில் பகலில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். பலர் பகல் நேரங்களில் வீடுகளி லேயே முடங்கியுள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் வருகின்றனர்.

    இந்த கோடை வெயிலில் சாலை யோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் கட்டிட தொழிலா ளர்கள் மிகவும் பாதிக்கப்படு கின்றனர். அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த பின்னரே வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் கருதுகின்றனர்.

    மதுரையில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பலர் கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள தொப்பி அணிந்தும், குடைகளை பிடித்துச் சென்றும் வருகின்றனர்.

    • பொதுமக்கள் வங்கி கடன் பெறவும், வீடு கட்ட அனுமதி பெறவும் முடியாமல் அவதிப்படுகின்றனர்.
    • திருத்தம் செய்த பிறகு நத்தம் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    கோவை,

    நத்தம் நில ஆவணங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் போது நத்தம் நிலவரித்திட்டத்தின் கீழ் பட்டா வழங்கியவர்களுக்கு ரயத்துவாரி மனை என பட்டா வழங்காமல் அரசு நத்தம் மனை எனவும், அரசு புறம்போக்கு எனவும் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் வங்கி கடன் பெறவும், வீடு கட்ட அனுமதி பெறவும் முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கோவை மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    2006-ம் ஆண்டுக்கு பின்னர் நத்தம் நில ஆவணங்களில் ஏற்பட்ட பட்டா மாறுதல் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களின் பெயரில் ஏற்பட்ட நடப்பு மாறுதல்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொண்டு இணையவழி சேவைக்கு கொண்டு வரும் நிலையில் உள்ளது.

    நத்தம் நிலவரித்திட்டத்தின் கீழ் மனை பட்டா வழங்கப்பட்ட இனங்கள் அனைத்தையும் ரயத்துவாரி மனை என பதிவு செய்ய நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் பல மாவட்டங்களில் பட்டா வழங்கப்பட்ட இடங்களையும், அரசு நத்தம் மனை என தவறாக நில ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தவறை ரயத்துவாரி மனை என நத்தம் நில ஆவணங்கள் கணினியில் பதியும் போது சரி செய்ய வேண்டும்.

    ஆனால், தற்போது வரை அவ்வாறு செய்யாமல் நத்தம் ஆவணங்களில் தவறாக அரசு நத்தம் மனை மற்றும் அரசு புறம்போக்கு என உள்ளதை அப்படியே கணினியில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் கிராம நத்தம் பகுதியில் குடியிருக்கும் ஏழை மக்களின் நலன்களுக்கு எதிரானது ஆகும்.

    எனவே இதை திருத்தம் செய்த பிறகு நத்தம் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் நத்தம் மனைப்பகுதியில் குடியிருக்கும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் நத்தம் பட்டா கையில் வைத்திருந்தும் அரசு கணக்குகளில் அரசு நிலமாக இருக்கும் பட்சத்தில் பட்டாவை அடமானமாக வைத்து வங்கி கடன் பெறவும், வீடு கட்ட அனுமதி பெறவும் இயலாமல் போகிறது. எனவே, இதை கவனத்தில் கொண்டு உடனடியாக ரயத்துமனை என நத்தம் நிலவரித்திட்ட பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்த மாற்றத்தினால் கடலூர் மாவட்டம் முழு வதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
    • பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    கடலூர் :

    தமிழகத்தில் கடந்து சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடலில் காற்று அதிகம் இருந்ததால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. தற்போது கடல் பகுதியில் அமைதி திரும்பியது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் திடீர் என பருவநிலை மாறி உள்ளது. இந்த மாற்றத்தினால் கடலூர் மாவட்டம் முழு வதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்த கடும் குளிர் கடலூர் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விழுப்புரம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் பனிமூட்டம் அடர்ந்த புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

    இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் முகப்பு விளக்கை எரிய விட்டபடி கடும் குளிரில் நடுங்கியபடி எப்போது விபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கிறார்கள்.  குறிப்பாக கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் கடுங்குளிர் வாட்டி வதைகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கடுங்குளிரை தாங்காமல் பெரும் சிரமப்பட்டு செல்கிறார்கள்.  இந்த கடும் குளிரால் அவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானோர் இந்த குளிரால் ஏற்படும் உடல் நடுக்கத்தை தாங்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் அலுவல கத்திற்கு செல்லும் பணி யாளர்கள் அதிகாலை நேரத்தில் இந்தக் கடுங்குளிரிலும் குளிர்ந்த தண்ணீரில் குளித்து விட்டு செல்கின்றனர்.இந்த தண்ணீரால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கடலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் ஏற்படும் கடும் குளிரிலிருந்து ஸ்வெட்டர் அணிந்து செல்கிறார்கள். எனவே பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • காலை மற்றும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது.
    • விபத்து ஏற்படும் அபாயம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் சீதோசன நிலை மாற்றத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் தற்போது கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.  அதன்படி கடலூர் நகர், புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த கடும் குளிரால் சாலைகளில் தெருக்களில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளை புகை மண்டலமாக பணி அடர்ந்து காணப்படுகிறது.

    இந்த பனியினால் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும்போது முன்னால் செல்லும். வாகனங்கள் தெரியாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு செல்கின்றனர்.

    குறிப்பாக சிறுவர் முதல் பெரியவர் வரை பணியினால் உண்டா கும் கடும் குளிரை தாங்க முடியாமல் அவதி ப்படுகின்றனர். மேலும் இதனால் பல்வேறு நோய்களும் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதுகிறது. பிற மாவட்டங்களை விட கடலூர் மாவட்டம் வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் கடும் பணி பெய்தாலும் அளவுக்கு அதிகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சீதோசன நிலை மாற்றத்தின் போது ஏற்படும் ஒவ்வொரு இடர்பாடுகளிலும் அளவுக்கு அதிகமாக பாதிக்கின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது.
    • பண்ருட்டில் உள்ள அனைத்து திருமண நிலையங்களிலும் திருமணம் நடந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர் ஹெட்லைட்களை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி - கடலூர் ரோடு, சென்னை ரோடு, கும்பகோணம் ரோடு, காந்தி ரோடு, ராஜாஜி ரோடு ஆகிய ரோடுகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பண்ருட்டி-சென்னை ரோட்டில் கண்டரக்கோட்டை வரையிலும், பண்ருட்டி-கும்பகோணம் ரோட்டில் கொள்ளுக்காரன் குட்டை வரையிலும் குண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது.

    எல்.என்.புரம், கும்பகோணம் ரோடு ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. மேலும், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பண்ருட்டில் உள்ள அனைத்து திருமண நிலையங்களிலும் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வெளியூரில் டூவீலரில் வந்த உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் கொட்டும் மழையி லும் அதிகாரிகள் ஊழிய ர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு படையெடுத்து செல்கின்றனர்.
    • மருந்து, மாத்திரை மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் டானிக் இருப்பு இல்லை என கூறி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் உள்ளிட்ட உபாதைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காமயகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு படையெடுத்து செல்கின்றனர்.

    ஆனால் அங்குள்ள டாக்டர்கள், மருந்து, மாத்திரை மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் டானிக் இருப்பு இல்லை என கூறி வருகின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே சுகாதார நிலையத்தில் மருந்து போதிய அளவு இருப்பு வைத்திருக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டிற்கு வெளியே நிறுத்தி விடுவது வழக்கம்.
    • சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி சிக்னல் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் காய்கறிகளை இறக்கி, ஏற்றி செல்வது வழக்கம்.

    மார்க்கெட்டுக்கு எதிர்ப்புறம் ஸ்ரீ நாராயண குரு சாலை உள்ளது. இது குடியிருப்பு பகுதியாகும்.

    இந்நிலையில் மார்க்கெட்டில் வரும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் ஸ்ரீ நாராயண குரு சாலையில் கடைசி வரை நிறுத்தி விடுகின்றனர்.இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    பெரும்பாலும் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்களது 4 சக்கர வாகனங்களை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விடுவது வழக்கம்.

    ஆனால் சரக்கு வாகனங்களை சாலை முழுவதும் வரிசையாக நிறுத்தி விடுகின்றனர்.

    இதனால் குடியிருப்போர் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் சரக்கு வாகனங்களை வரிசையாக நிறுத்தி விடுவதால் வாகனங்களுக்கு பின்புறம் மறைவாக நின்று கொண்டு ஒரு சில ஆசாமிகள் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளை முகம் சுளிக்க வைக்கிறது. பெரும்பாலும் இப்பகுதி சுத்தமான பகுதி ஆகும். ஆனால் தற்போது இந்த வாகனங்கள் காரணமாக அசுத்தம் நிறைந்த பகுதியாக காட்சி இருக்கிறது.

    தற்போது மழை காலமாக இருப்பதால், சரக்கு வாகனங்களில் இருக்கும் காய்கறி கழிவுகள் மழை நீரில் அடித்துக் கொண்டு தெருவில் கொட்டி அசத்தமாக காட்சி அளிக்கிறது.

    இந்த சாலையில் தனியார் ஆஸ்பத்திரிகளும், தனியார் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

    எனவே சரக்கு வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும். அதிகாரிகள் விரைந்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • மேல்மலை பகுதிக்கு பெரியகுளம் மற்றும் கொடைரோட்டில் இருந்து 2 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
    • கடந்த சில மாதங்களாகவே 2 தனியார்பஸ்களும் முறையாக இயக்கப்படாததால் அப்பகுதிமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலையில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானோர் விவசாயிகளே உள்ளனர். தற்போதுதான் தங்களது குழந்தைகளை கல்வி கற்க அனுப்பி வருகின்றனர். மேல்மலை பகுதிக்கு பெரியகுளத்தில் இருந்து காலை 4.10 மணிக்கு புறப்படும் தனியார் பஸ் 8.45 மணிக்கு கவுஞ்சி வருகிறது.

    அதேபோல் அதிகாலை 7.45 க்கு கொடைரோட்டில் புறப்படும் மற்றொரு தனியார் பஸ் 1.45 மணிக்கு கவுஞ்சி வருகிறது. இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஆஸ்பத்திரி செல்லும் பணியாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே 2 தனியார்பஸ்களும் முறையாக இயக்கப்படுவதில்லை.

    இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். நீண்டநேரம் பஸ்சுக்காக காத்திருந்து நடந்து செல்லும் அவல நிலையே உள்ளது. இதுகுறித்து பஸ் உரிமையாளர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முறையாக இயக்கப்படாத தனியார் பஸ்சுக்கு பதிலாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னவனூர், கவுஞ்சி, கும்பூர், கீழானவயல், பூண்டி, போலூர், கிளாவரை பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு வாட்ஸ்அப் மூலமாக புகார் மனு அனுப்பியுள்ளனர்.

    மேலும் விவசாயிகளும் காய்கறிகளை அதிகாலை நேரங்களில் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவிட்டு ஊர்திரும்பும் போது மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அரசு பஸ்கள் இயக்கினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காக ஆங்காங்கே தோண்டபட்டு மூடப்படாமல் உள்ள குழிகளால் திருச்சி தூசு நிறைந்த நகராக மாறியுள்ளது
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பெரியார் சிலை அருகாமையில் சாலையின் நடுப்பகுதி துண்டிக்கப்பட்டது

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மாநகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கும் அதிக நிதி செலவிடப்படுகிறது.

    ஆனால் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை பார்க்கும் போது இது அழகான மாநகரமா? என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. காரணம், மாநகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டு குண்டும், குழியுமாக கிடக்கின்றன. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பதிப்பதற்காக மேற்கண்ட சாலைகளில் குழிகள் தோண்டப்படுகிறது.

    இவ்வாறு சாலைகள் துண்டிக்கப்படும் போது சில நேரங்களில் குடிநீர் குழாய்களும் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் ஆறாக ஓடி அந்தப் பகுதி மழை இல்லாமலேயே சேரும், சகதியுமாக மாறிவிடுகிறது.

    சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தினால் அந்தப் பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி புயல் பலமாக வீசுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பெரியார் சிலை அருகாமையில் சாலையின் நடுப்பகுதி துண்டிக்கப்பட்டது. அதற்கு முன்பாக தமிழ்நாடு ஓட்டல் பகுதி, அரிஸ்டோ கார்னர் பகுதி ஆகிய இடங்களில் உள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டன.

    ஏற்கனவே உறையூர், தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குறைகளை சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.

    நாளும் தூசு மண்டலத்தில் வசித்து வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். பொதுமக்கள் மட்டுமின்றி சாலையோரம் மற்றும் கடைகள் நடத்தும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடைகளில் உள்ள பொருட்கள் மீது துடைத்து வைத்த ஒரு சில விநாடிகளில் அந்த வழியாக கடக்கும் வாகனங்களால் மீண்டும் தூசு படிந்து விடுவதால் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு செல்லவும், பொருட்களை வாங்கவும் மறுக்கின்றனர்.

    இது தொடர்பாக வாசன் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது, சாலையை துண்டித்து பைப் லைன் பதித்து மண் போட்டு மூடி விடுகிறார்கள். அதன் பின்னர் வெகு நாட்கள் கழித்த பின்னரே ஜல்லி போட்டு பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்கின்றனர்.

    பின்னர் தார் போடுவதற்கு மேலும் சில வாரங்கள் தாமதம் செய்கிறார்கள். இதனால் ஜல்லிகள் பெயர்ந்து மீண்டும் குண்டும் குழியுமாக சாலை மாறி விடுகிறது. இதற்கெல்லாம் எப்போது விடிவு என்றே தெரியவில்லை என்றார்.

    இந்த சாலைகள் துண்டிக்கப்பட்டு மேடு பள்ளமாக இருப்பதால் கவுன்சிலர்களுக்கும் குடைச்சல் இருக்கிறது. அதனால் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் அவ்வப்போது அனைத்து கட்சி கவுன்சிலர்களும் சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, திருச்சி மாநகராட்சி பகுதியில் 1,330 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலைகள் உள்ளன. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருவதால் சாலைகள் துண்டிக்கப்படுகிறது.

    ஒரு இடத்தில் சாலையை துண்டித்தால் அந்த இடத்தில் பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க காண்டிராக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து சாலைகளையும் சீரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைந்து முடிப்போம் என்றார்.

    • தூத்துக்குடி -திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பு உள்ளது. இந்த சாலையின் கீழ் ஆத்தூரில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
    • சாலையில் தோண்டிய பள்ளத்தை நேர்த்தியாக மூடாமல் மணலையும் கல்லையும் குவித்து அதன் மீது குச்சியை நட்டு, பிளாஸ்டிக் பை ஒன்றை கொடி போல் பறக்க விட்டுள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி -திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பு உள்ளது. இந்த சாலையின் கீழ் ஆத்தூரில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குளம் போல் தண்ணீர் பெருகியது.

    இது பற்றி பொதுநல அமைப்புகள் புகார் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. ஆனால் அதற்காக சாலையில் தோண்டிய பள்ளத்தை நேர்த்தியாக மூடாமல் மணலையும் கல்லையும் குவித்து அதன் மீது குச்சியை நட்டு, பிளாஸ்டிக் பை ஒன்றை கொடி போல் பறக்க விட்டுள்ளனர்.

    போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் இந்த செயல்பாடு விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் இந்த மணல் குவியலையும், அதன் மீது உள்ள கொடி நாட்டலையும் திடீரென கண்டு நிலைகுலைய நேரிடுகிறது. நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு பெரும் இடைஞ்சலாகவும் உள்ளது.

    ஆகவே பள்ளம் தோண்டப்பட்ட அந்த இடத்தை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×