search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peacock"

    • கோழி, நாய்களை போன்று தெரு, வீதிகளை ஒட்டிய தோட்டம், சாலையோரங்களில் இரை தேடுகின்றன.
    • மயில், எலி, மான் போன்றவை விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் மயில்களின் இனப்பெருக்கம் அதிகமாகி கொண்டே செல்வது விவசாயிகளுக்கு தீராத தலைவலியாக மாறி வருகிறது.விவசாய நிலங்களில் எங்கு நோக்கினும் மயில்களை பார்க்க கூடிய சூழல் உருவாகி விட்டது. மனிதர்கள் நெருங்கினாலே, ஓடி ஒளியும் மயில்கள் இன்று மனிதர்களின் சுவாசத்தை உணர்ந்து, அவர்களோடு நேசம் கொள்ள துவங்கியிருக்கின்றன.உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் மயில்களுக்கு தானியம் வழங்கி, மக்கள் பழக்கப்படுத்திக் கொண்டதால் வளர்ப்பு பறவையாகவே மாறி வருகின்றன.

    கோழி, நாய்களை போன்று தெரு, வீதிகளை ஒட்டிய தோட்டம், சாலையோரங்களில் இரை தேடுகின்றன.இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

    விவசாய நிலம், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பாம்புகளை மயில்கள் தங்களுக்கு உணவாக்கிக் கொள்ளும். இதன் மூலம் பாம்புகளின் இனப்பெருக்கம் கட்டுக்குள் இருக்கும். மயில்கள் இடும் முட்டைகளை, பாம்புகள் உணவாக்கிக் கொள்ளும். மயில்களை, காட்டுப்பூனை, நரி உள்ளிட்ட விலங்கினங்கள் உணவாக்கிக் கொள்ளும். இதன் மூலம் மயில்களின் இனப்பெருக்கம் கட்டுக்குள் இருக்கும்.விவசாய நிலங்களில் உள்ள எலிகளை பாம்புகள் தங்களுக்கு உணவாக்கிக்கொள்ளும். அதன் மூலம் விவசாய நிலங்களில் எலித்தொல்லை கட்டுக்குள் இருக்கும். இப்படி ஒவ்வொரு விலங்கினங்களின் உணவுச்சங்கிலியில் பிற விலங்கினங்களின் தொடர்புடையவையாக இருந்தது.ஆனால் இன்று அந்த நிலை மாறி, உணவுச்சங்கிலி அறுந்ததால் மயில், எலி, மான் போன்றவை விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளன. எனவே வனம் அதுசார்ந்த பகுதிகள் இல்லாத திருப்பூரின் புறநகர் பகுதிகளில் மயில்கள் சரணாலயம் போன்ற பிரத்யேக வாழ்விடங்களை உருவாக்குவது மட்டுமே தீர்வு என்றனர்.

    • மின் கம்பி மீது உரசியதில் மின்சாரம்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
    • உயிரிழந்தது 1½ வயது மதிக்கதக்க மயில்/

    திருப்பூர்,

    திருப்பூர் குமரன் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றின் மீது நின்றிருந்த மயிலானது, பறந்து செல்ல முற்பட்டபோது அங்கிருந்த மின் கம்பி மீது உரசியதில் மின்சாரம்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த மயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து பின்னர் புதைத்தனர். இதனிடையே மின்சாரம் தாக்கி உயிரிழந்தது 1½ வயது மதிக்கதக்க மயில் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தோட்டத்தில் 5 மயில்கள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து அதற்கு யாராவது விஷம் வைத்தார்களா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரச்சலூர்:

    அரச்சலூர் அருகே உள்ள சில்லாகாட்டுப்புதூரில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோட்டத்தில் 5 மயில்கள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அலுவலர் கோபி நேரில் சென்று பார்வையிட்டார். இந்த மயில்கள் இறந்து 2, 3 நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது.

    இந்த மயில்கள் வேறு எங்கேயாவது இருக்கும்போது அதற்கு யாராவது வி‌ஷம் வைத்தார்களா? வி‌ஷம் கலந்த உணவை அந்த மயில்கள் தின்று தென்னந்தோப்புக்குள் வரும் போது ஆங்காங்கே இறந்துள்ளதா? என்பது குறித்து தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து பார்வையிட்டு இறந்த மயில்கள் உடலை கைப்பற்றினர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சில மயில்களை நாய்கள் கடித்து குதறி இருந்தது.
    ×