என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » pasumpon thevar
நீங்கள் தேடியது "Pasumpon Thevar"
அரசு பஸ்சை தாக்கி டிரைவரை காயப்படுத்தி மட்டுமின்றி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, தல்லாகுளம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.
மதுரை:
தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு நடந்தது.
அப்போது சில வாலிபர்கள் உற்சாக மிகுதியால் அத்துமீறி செயல்பட்டனர். அங்கு வந்த அரசு பஸ் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.
இதில் டிரைவர் செல்வம் காயமடைந்தார். மேலும் 15-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பஸ்களின் கூரை மீது ஏறி நின்று நடனம் ஆடினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
இதையடுத்து துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அரசு பஸ் டிரைவர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி, காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது 3 வாலிபர்கள் அரசு பஸ் மீது கல்வீசி தாக்குவது கேமிராவில் பதிவாகி இருந்தது. இதேபோல அரசு பஸ் மீது ஏறி நின்று நடனம் ஆடும் வாலிபர்கள் பற்றிய வீடியோ காட்சிகளும் தெளிவாக இடம்பெற்று இருந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது மதுரை மதிச்சியம் புளியந்தோப்பை சேர்ந்த அழகுபாண்டி (23), பொன்னுபாண்டி (25), பரசுராம் பட்டி மணி என்கிற பாட்டில் மணி (18) ஆகியோர் என்பது தெரிந்தது.
அரசு பஸ்சை தாக்கி டிரைவரை காயப்படுத்தி மட்டுமின்றி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, தல்லாகுளம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் மேற்கண்ட 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அரசு பஸ் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்ட 15 பேர் பற்றிய விவரம் தெரிந்தது. அவர்களில் பலர் திருப்பாலை, வாடிப்பட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் 30-க்கும் மேற்பட்டோரை பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ள வாலிபர்களின் உருவங்கள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு, இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்று தல்லாகுளம் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
மதுரை மாநகரில் தேவர் ஜெயந்தி விழாவின் போது வாகனங்களை அதி வேகமாக ஓட்டியது, அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளில் 112 மோட்டார் சைக்கிள்கள், 13 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக 79 வழக்குகளை பதிவு செய்த போலீசார், அதில் 23 பேரை கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறியதாக, 150 மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது அரசு வாகனங்களை சேதப்படுத்தியதாக, தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அதில் தொடர்புடையவர்களை டிரோன் கேமிரா பதிவுகள், போலீஸ் வீடியோ ஒளிப்பதிவுகள் மற்றும் கண்காணிப்பு கேமிரா காட்சிப்பதிவுகள் ஆகியவற்றின் மூலம் அடையாளம் கண்டறிந்து வருகின்றனர். அவர்களை உடனடியாக கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு நடந்தது.
அப்போது சில வாலிபர்கள் உற்சாக மிகுதியால் அத்துமீறி செயல்பட்டனர். அங்கு வந்த அரசு பஸ் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.
இதில் டிரைவர் செல்வம் காயமடைந்தார். மேலும் 15-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பஸ்களின் கூரை மீது ஏறி நின்று நடனம் ஆடினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
இதையடுத்து துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அரசு பஸ் டிரைவர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி, காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது 3 வாலிபர்கள் அரசு பஸ் மீது கல்வீசி தாக்குவது கேமிராவில் பதிவாகி இருந்தது. இதேபோல அரசு பஸ் மீது ஏறி நின்று நடனம் ஆடும் வாலிபர்கள் பற்றிய வீடியோ காட்சிகளும் தெளிவாக இடம்பெற்று இருந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது மதுரை மதிச்சியம் புளியந்தோப்பை சேர்ந்த அழகுபாண்டி (23), பொன்னுபாண்டி (25), பரசுராம் பட்டி மணி என்கிற பாட்டில் மணி (18) ஆகியோர் என்பது தெரிந்தது.
அரசு பஸ்சை தாக்கி டிரைவரை காயப்படுத்தி மட்டுமின்றி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, தல்லாகுளம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் மேற்கண்ட 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அரசு பஸ் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்ட 15 பேர் பற்றிய விவரம் தெரிந்தது. அவர்களில் பலர் திருப்பாலை, வாடிப்பட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் 30-க்கும் மேற்பட்டோரை பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ள வாலிபர்களின் உருவங்கள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு, இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்று தல்லாகுளம் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
மதுரை மாநகரில் தேவர் ஜெயந்தி விழாவின் போது வாகனங்களை அதி வேகமாக ஓட்டியது, அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளில் 112 மோட்டார் சைக்கிள்கள், 13 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக 79 வழக்குகளை பதிவு செய்த போலீசார், அதில் 23 பேரை கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறியதாக, 150 மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது அரசு வாகனங்களை சேதப்படுத்தியதாக, தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அதில் தொடர்புடையவர்களை டிரோன் கேமிரா பதிவுகள், போலீஸ் வீடியோ ஒளிப்பதிவுகள் மற்றும் கண்காணிப்பு கேமிரா காட்சிப்பதிவுகள் ஆகியவற்றின் மூலம் அடையாளம் கண்டறிந்து வருகின்றனர். அவர்களை உடனடியாக கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் உருவாவதுபோல், பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவாகி வருகிறது. #PasumponThevar
இந்திய சினிமாவில் சமீபகாலமாக வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாகி வருகின்றன. அரசியல் தலைவர், விளையாட்டு பிரபலங்கள், சினிமா பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக உருவாகின்றன.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழில் உருவாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது.
இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய், பிரியதர்ஷினி என 3 இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர். ஆந்திராவில் என்.டி.ஆரின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையும் இந்த வரிசையில் படைத்தலைவன் என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது. ஆன்மீக வாதியாகவும் சாதிபாகுபாட்டை எதிர்ப்பவராகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் ஆங்கிலேய அரசை எதிர்த்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். இவரது வாழ்க்கை வரலாற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் எழுதி இயக்குகிறார் தங்கத் தமிழ்வாணன். கதாநாயகனாக ஆர்.ரமேஷ் நடிக்கிறார். ஆடுகளம் நரேன், சிங்கமுத்து, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தங்கத் தமிழ்வாணன் படம் பற்றி கூறும்போது, ‘மறைக்கப்பட்ட உண்மைகளையும் புதைக்கப்பட்ட வரலாறையும் மீட்டெடுக்கும் விதமாக படைத்தலைவன் படம் உருவாகிறது. பசும்பொன் மண்ணில் தேவரின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை தொகுத்து இருக்கிறோம்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பாச்சூர், கேரள அலப்பி, தஞ்சை பெரிய கோவில், காளையார் கோவில், கீழத்தூர் மற்றும் பசும்பொன் கிராமத்திலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தின் தொடக்க விழா பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் நடந்த போது அந்த ஊர் மக்கள் கிடாய்களை வெட்டி படக்குழுவினருக்கு விருந்து கொடுத்தனர்’ என்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X